இடுகைகள்

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

படம்
            Namo Ghat Corridor  துபாயிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனி காலை 9.30 மணிக்கு வாரணாசி விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்திலிருந்து  நாட்டுக் கோட்டை செட்டியார் சத்திரம் செல்ல நான்கு சக்கர வாகனம் பிடித்தேன்.  கோயில் செல்லும் சாலைகள் அனைத்தும்  மூடப்பட்டுள்ளன என்று சொல்லி வாரணாசி சந்திப்பு ரயில் நிலையம் பக்கம் இறக்கிவிட்டு விட்டார். 4-5 கிமீ தூரம் செல்ல வேண்டும். இருப்பது மனிதன் மிதிக்கும் சைக்கிள் ரிக்ஷா, எலக்ட்ரிக் ஆட்டோ. எலக்ட்ரிக் ஆட்டோ செல்லாது என்று சொல்லவும் , சைக்கிள் ரிக்சாவை பிடித்தேன். இதைப் பிடிப்பதற்கும் 1கிமீ நடந்து ஆகிவிட்டது.‌ 2 கிமீ சென்ற பிறகு அவரும் இறக்கிவிட்டு விட்டார். கையிலொரு ட்ராலி பேக், தோளில் ஒரு பேக்கைப் போட்டுக் கொண்டு சத்திரம் நோக்கி நடந்தேன். மக்கள் வெள்ளத்தில் கூட்டமே நம்மை நகர்த்திய அனுபவத்தை உணர்ந்தேன்.   சத்திரத்தை அடைந்து குளித்து விட்டு காசி ஈஸ்வரனைச்  சேவிக்கப் புறப்பட்டேன். கூட்டம் அதிகம். நான்கு வாயில்கள் வழியாக ஈஸ்வரனைத் தர்சனம் செய...

பூர்ணம் - 5

படம்
கூடி வாழும் தன்மை என்பது இயற்கையின் நீதி.‌ பெரியாழ்வார் “கூடிய கூட்டமாகக் கொண்டு குடி வாழுங்கள் " என்றும், அவரது திருமகள் ஆண்டாள்  “கூடியிருந்து குளிர்ந்து"என்றும், தமிழ் மூதாட்டி ஔவையார் “ஊருடன் கூடி வாழ்" என்றும், கூடிவாழ்வதைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்கள்.  மனிதன் பிறந்த தொடக்கம் இறப்பு வரைக்கும் ஒருவரைச் சார்ந்துதான் வாழ்கிறான். சார்பு வாழ்க்கை முறை என்பது மனிதனுக்கு இயற்கையின் நீதி.  நாம் அணியும் சட்டை என்பது , பருத்தியிலிருந்து தையல் செய்த சட்டையாக வருவதற்குப் பல ஊழியர்களின் உழைப்பும், வியர்வையும் நேரமும் அதில் உள்ளது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை என்ன என்பது புலப்படும். உணவுப் பொருட்கள் நம் தட்டில் உணவாக வருவதற்குப் பல புண்ணியவான்களின் உழைப்பு பின்னால் இருக்கிறது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை புலப்படும்.  சார்பு நிலையை ஒத்துக்கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி என்பது,  1. அவர்களும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.  2. என்னிடம் பணம் இருந்தது, அதனால் பொருட்களை வாங்கினேன். வேலை செய்வதற்குப் பணம் கொடுத்தாலும், மக்கள் அதற்கு வரவில்லையென...

பூர்ணம் - 4

படம்
மாணவன் எல்லையறிந்து ( Knowing the Individual Limits) அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை பார்ப்பதற்கு முன், பழைய குடும்ப அமைப்பு அழுத்தங்களைக் குறைக்கவும்,  சமுதாயமாகச் சிந்திக்கவும், மன நிறைவை உருவாக்க எவ்வாறு உதவுகின்றன என்று பார்ப்போம்  குடும்பம் என்பது பெரும்பாலும் கூட்டுக் குடும்பம். பொருளாதார சுமைகளை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து சமாளித்தார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்பது பலரிடம் காணப்பட்டது. கூட்டுப் பணி , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒருவரையொருவர் தாங்குவது ( Supportive system) , இன்ப துன்பங்களில் பங்கு கொள்வது, சார்பு வாழ்க்கை, பாதுகாப்பு போன்ற பண்புகள் கூட்டுக் குடும்பத்தின் அங்கமாக வழக்கத்திலிருந்தன.  கூட்டுக் குடும்பம் ஒரு வகையில் அழுத்தத்தை குடும்பங்களிடையில் குறைத்தது என்பது உண்மை. பொருளாதார சுமை மற்றும் அழுத்தம், சமுதாய அழுத்தங்கள் என்பது குடும்ப உறுப்பினர்களிடம் பரவலாகப்பட்டது. குழந்தைகளும் தனிமையில் இல்லாமல் நிறைய குடும்ப குழந்தைகளுடன் சேர்ந்து ஒன்றாக விளையாடி, ஒன்றாகச் சாப்பிட்டு , ஒன்றாகப் பள்ளி சென்று, ஒன்றாகத் தூ...

பூர்ணம்-3

படம்
பெரும்பாலும் இப்பொழுது அரசுப் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ குழந்தைகளைச் சேர்ப்பதில்லை.‌பணம் இருக்கிறதோ அல்லது இல்லையோ? ஏழையோ அல்லது நடுத்தர மக்களோ? குழந்தைகளை நல்ல தரமான பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதற்காகச் செலவுகளைச் சரி செய்வதற்குப் பணத்தை எப்படியாவது சமாளிப்பது போன்ற நிலைகள். இது சரி மற்றும் தவறு என்றல்ல?  அரசுப் பள்ளிகளின் தரம் என்பது இந்த 40 வருட காலத்தில் என்ன நிலைமைக்குச் சென்றுள்ளது? மக்கள் ஒருபக்கம் புறம் தள்ளி, மற்றொரு பக்கம் அரசு சரியான நிதியுதவி அளிக்காமல், ஆசிரியர்கள் சேர்ப்பு இல்லாமல் தரம் என்பது நலிவடைந்து விட்டன. உபயோகம் இல்லாத பொருட்களுக்கு மதிப்பு கிடையாது. மாறாக நலிவுற்றுவிடும். இது எல்லா பொருட்களுக்கும் பொருந்தும் அரசுப் பள்ளிகள் உட்பட. இந்த சூழல் இன்று அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்குத் தடையாக இருக்கின்றன. அரசாங்கம் இன்று அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு ஏலம் கொடுப்பதைப் பற்றி யோசித்து வருகின்றன.  அந்த காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கிராமத்தில் வருவதற்கு நம் முன்னோர்கள் எவ்வளவோ பாடுபட்டார்கள். ஏனென்றால் பள்ளிப் படிப்புக்காக மூன்று அ...

பூர்ணம் - 2

படம்
எனக்கு விபரம் தெரிந்த காலகட்டத்தில் 1980 ( டீன் வயதில்) சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்று பார்த்தால், பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் என்பது குறைந்தது 5 அல்லது அதற்கு மேல் இருக்கும்.  பள்ளிப் படிப்பு என்பது அரசாங்க பள்ளிக் கூடமாக இருக்கும். வீட்டிலிருந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீடு வருவோம். சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளி. படிப்பது என்னவென்று கூடப் பெற்றோர்கள் பின்தொடர்வது கிடையாது. ஒழுக்கம் குறைந்தால் மட்டுமே தகவல் பள்ளியிலிருந்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும்.  மாணவர்களும் காலையில் நிதானமாக எழுந்து தெரு திண்ணையில் உட்கார்ந்து பேசி , ஆறு பக்கம் சென்று காலைக் கடன் மற்றும் குளித்துவிட்டு வந்து, சிற்றுண்டி என்னவோ அதையும் சாப்பிட்டு பள்ளி செல்வது என்பது தின வழக்கம். பெரும்பாலும் காலை சிற்றுண்டி என்பது பழைய சோறு அல்லது பழஞ்சோறு நீர் ( நீராகாரம்).‌ இப்பொழுது ஆற்றில் தண்ணீரே இல்லை. முட்செடிகளும் புதர்களுமாக இருக்கிறது. இதுதான் இன்றைய சூழ்நிலை. இன்றைய இளைஞர்கள் இழந்த பலவற்றில் இதுவும் ஒன்று.‌ அந்த பழஞ்சோறு நீராகாரம் சுவையே தனி. நீண்ட நாட்களு...

பூர்ணம் -1

படம்
ஓம்   பூர்ணமதஹ   பூர்ணமிதம் !  பூர்ணாத்   பூர்ணம்   உதச்யதே !!  பூர்ண்ஸ்ய   பூர்ணம்   ஆதாய   பூர்ணமேவ   அவசிஷ்யதே !!! இது வேத வாக்கியம்.  பூர்ணம் என்பதற்குத் தமிழ் அகராதிகள் கூறும் பொருள் என்பது நிறைவு , முழுமை, குறைபாடற்ற, மிகுதி, மனநிறைவு, முடிவு.  இறைவன் முழுமையானவன் . முழுமையான இறைவன் இங்கும் அங்கும் இருக்கிறான். முழுமையிலிருந்து முழுமையான உலகத்தைத் தோற்றுவிக்கிறான். முழுமையிலிருந்து முழுமையை எடுத்துவிட்டால் முழுமையே எஞ்சும்.  இதில் பூர்ணம் மற்றும் முழுமை ஏழு தடவை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.‌ முழுமை மற்றும் நிறைவு என்பது  மட்டுமே பொருந்தும். அதை உணர்ந்தவன் மன நிறைவு அடைந்து பேரானந்தம் பெறுகிறான்.  முழுமையை உணர முயல்கிறான் முயல்கிறான், முயற்சி செய்து கொண்டே மனநிறைவு அடையப்பெறுகிறான்.  ஒரு செயலை ஒருவன் செய்ய முற்படும்போது, அதனை முழுமையாக , நிறைவாக முடிக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அது ஒரு தேவையான பண்பாக இவ்வுலகில் கருதப்படுகிறது. முழுமையாக முடிவடைந்த செயலினால் வெற்றி கிடைக்கும், ...

பேராசை ....பெருநஷ்டம்

படம்
"போதும் என்ற மனமே....." என்ற கடந்த கட்டுரையில் மணல் அள்ளுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கையில் எவ்வாறு மணல் எடுக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டிருந்தேன். ஆற்றில் தினசரி மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. வாரம் மூன்று அல்லது நான்கு முறை எடுக்கலாம். அதுவும் ஆறுகளை அரசு சோதனை செய்து மணல் மேடுகளைக் கண்டறிந்து அதன் எல்லைகளை வரையறுத்து மணல் கையால் எடுப்பதை அனுமதிக்கின்றார்கள். இயந்திரம் கொண்டு தோண்டுவது என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்று.  பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனிதனுக்கும் நாட்டிற்கும் தேவை. ஆனால் வளர்ச்சி என்பது எல்லையற்று இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இங்கே தொக்கிக் கொண்டிருக்கிறது பதில் தெரிந்தும் தெரியாத வகையில்.‌ எல்லையற்ற வளர்ச்சி என்பது மனிதக் குலத்தையும், உலக உயிர்களையும் , சுற்றுப்புறச் சூழலையும் முற்றிலும் அழித்துவிடும். வளர்ச்சி மற்றும் பயன்கள் ( Cost Vs Benefits) பற்றி ஆராய்ந்து, வளர்ச்சி என்பது உலக சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்ற கட்டத்தில் அதன் வளர்ச்சி என்பதை மட்டுப்படுத்தத் தெரிய வேண்டும்.  தனிமனித வளர்ச்சி என்பதும் அவனது உடல்நிலை , மன அமைதியை...

போதும் என்ற மனமே............

படம்
சமீபத்தில் இரண்டு படங்கள் பார்த்தேன். படம் பார்த்து நான் புரிந்து கொண்ட உண்மை என்னவென்றால் " போதும் என்ற மனமே ........ பொன் செய்யும் மருந்து " என்பது ஒன்று  , மற்றொன்று "மேலும் ஒன்றை ஆரம்பிக்கும் போது எப்பொழுது எங்கே முடிக்க வேண்டும் " என்ற அறிவுத் தன்மை.  இந்த இரண்டுமே ஒருவனுடைய வாழ்க்கையைச் சரியாகத் தீர்மானிக்கிறது. குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு உதவுகிறது.  ஒரு படத்தில் கதாநாயகன் பாரதத்தில் ஆற்றில் மண் எடுக்கும் தொழிலைச் செய்து வருகிறான். அதிலும் ஒரு தருமம் காட்டப்பட்டுள்ளது. ஆற்று மண்ணை கையால் சட்டியை வைத்து எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுக்கிறார்கள். இந்த மண் அள்ளும் முறையை நான் இலங்கை சென்றிருந்தபோது கவனித்து வியந்து இருந்தேன். இங்கே JCB வைத்து எடுத்து, ஆற்றின் உருவகத்தையே மாற்றிவிட்டார்கள். ஆறு ஆறாக இல்லை. ஆறு என்பது கருவேல் மர காடாகக் காட்சியளிக்கிறது. இதுவும் போதும் மனம் இல்லாததின் விளைவுதான். நாம் சொல்ல வந்த கருத்துக்குக்குள்ளேச் செல்வோம்.  அப்படியாக ஆற்று மண் அள்ளி தொழில் செய்து சந்தோஷமாக குடும்பம் இருக்கிறது. கணவன் மனைவி சந்தோஷத்தில் ...

எல்லைச்சாமி

படம்
அமரன் படம் பார்த்து ராணுவ வீரர்களின் தியாகத்தையும்  பாராட்டி செய்திகள் வந்து விட்டன. சிலர் சுயசரிதை கதைகளைப் படமாக எடுக்கும்போது உண்மையான கதாபாத்திரங்களை அவர்களது  தன்மையுடன் சாதீய மத  அடையாளங்களுடன் காட்டவேண்டும் என்று செய்திகளை வெளியிட்டார்கள். இதோ நமது பார்வை இந்த கட்டுரையில். உணர்வு  தியாகம் என்பது குடும்பத்துடன் செயல்படுவது தான் ராணுவ வீரரின் அழகு. அதுவும் இந்த படத்தின் நிஜ கதாநாயகனின் வாழ்க்கையிலும் நடைபெற்றுள்ளது.  கிராமங்களில் நான்கு திசை எல்லைகளில் சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்களாக நிற்பார்கள். அந்த கிராமங்கள் காப்பாற்றப்படுவது அந்த எல்லை தெய்வங்கள் என்பது ஊர் நம்பிக்கை. ஊரை விட்டுச் செல்லும் போது அந்த எல்லை தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி விடைபெற்றுச் செல்வார்கள்.‌ வெளியூர் சென்றாலும் கூடவே இருந்து காப்பாற்றுவது இந்த எல்லைச்சாமிகள் என்ற நம்பிக்கை. அதாவது மனிதன் இல்லாத காலி வீடுகளைக் காப்பாற்றுவதும் அந்த எல்லை தெய்வங்கள் என்பதும் மிகப்பெரும் நம்பிக்கை.  ஒவ்வொரு எல்லை தெய்வங்களும் ஒவ்வொரு சமுதாய மக்களால் இன்றளவும் பராமரிக்கப்...

ஈரம் - 2

படம்
"நெஞ்சில் ஈரம் இருந்தால் மானுடம் சிறக்கும்" என்று ஈரம் என்ற கட்டுரையை முடித்தோம். ஈரம் மண்ணில் இல்லை என்றும் தோன்றும் அளவுக்கு , ஈரம் இல்லாத மண் வறண்ட நிலமாக , நிலம் பிளவுண்டு, வெடிப்புடன் கோரமான முகத்துடன் நிலமகள் உள்ளாள் என்பதனை மண்ணில் வாழும் மைந்தர்கள் நிரூபித்து, அறம் இல்லை அன்பு இல்லை, பொய்யா மொழி புலவனின் வார்த்தை பொய் என்று நிரூபிக்கும் கலி காலம் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு, கலியே நடுங்கும் அளவுக்கு, காலத்தால் காரியம் நடந்து நிறைவேறியுள்ளது. "பொலிக பொலிக பொலிக!போயிற்று வல் உயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை கலியும் கெடும் கண்டுகொண்மின்"  கலியும் கெடும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை என்று நம்மாழ்வார் அருளிய வாக்கு பொய்யானது. நமன் உருவத்தில் நரகர்கள் வந்து நாலுலகம் வெட்கி தலை குனிய இருக்கும் செயலை , சுதந்திரமாகக் காற்றை உள்வாங்கும் வேலையில் சுதந்திரமாகக் காற்றை உள்ளிருந்து வாங்கியுள்ளார்கள்.  இந்த செயல் என்பது, என்ன காரணத்தினால் ஆனாலும், இது ஒரு அறங்கெட்ட செயல். இங்கே சிலர் மனிதனின் உளவியல...