இயற்கையிலே பெண்ணின் சிறப்பு
நான் சமீபத்தில் ஆதி இந்தியர்கள் என்ற புத்தகம் வாசித்தேன். அதிலில் தொல் ஆய்வு என்பது இப்பொழுது இரண்டு முறையில் ஆராயப்படுகிறது என்பதனைத் தெரிவிக்கும் புத்தகம். ஒன்று தாய் வழி உறவு , மற்றொன்று தந்தை வழி உறவு . தந்தை வழி உறவு Y குரோமோசோம் வைத்து அறியப்படுகிறது. அதாவது பெண்ணிடம் இருப்பது XX , ஆணிடம் இருப்பது XY , அதாவது ஆண் என்பதனை உறுதிப்படுத்துவது Y குரோமோசோம். அது தந்தை மூலமாக ஒருவனுக்குக் கடத்தப்படுகிறது. இதுதான் பாரதீய மரபில் கோத்ரம் முறை என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு வேடிக்கை என்று அடியேன் பார்த்தது, பெண்ணின் துணை ஆணுக்குத் தேவை (XY) ஆனால் பெண்ணுக்கு ஆண் துணை (XX) தேவையில்லை. அதே போல் "மைட்டோ காண்டிரியல் என்பது 23 வகையான குரோமோசோமில் வராது. ஆனால் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இது மிகவும் ஒரு முக்கியமான ஒன்று . இதுவே "Power of Cells" என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த மைட்டோகாண்டிரியல் நாம் உட்கொள்ளும் உணவின் சத்துகளைப் பிரித்து உயிர் வாழ்வதற்கான சக...