உணர்வு
உணர்வு என்பது தனிமனித அனுபவம். உணர்வு என்பது இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் ஒருவனுக்கு வெளிப்படுத்தும். இதில் சிலவற்றை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும். சிலவற்றை முடியாது. அக உணர்வு , புற உணர்வு என்று தமிழ் இலக்கியம் இதனைக் கூறுகிறது. இன்ப துன்பம் எப்படி ஏற்படுகிறது என்றால் , ஒருவனது வாழ்நாள் முழுவதும், உயிர் உடம்புடன் இருக்கும் வரை இஃது இவ்வாறு நடைபெறுகிறது என்று திருக்குறளுக்கு உரை எழுதும்போது பரிமேலழகர் காண்கிறார். "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடக்குங் கல்" வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்கு , ஐவகைக் குற்றத்தால் வரும் இருவகை வினையும், அதன்வழி வரும் இன்பம் துன்பம் என்ற வினைப்பயனும், உயிர் உயிரோடு இருக்கும் வரை வரும், இதை வாழ்நாள் முழுதும் என்று கூறுகிறார். அவித்தை (அறியாமை), அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு என்று ஐந்தினையும் , ஐங்குற்றம் என்று பரிமேலழகர் காட்டுகிறார். இதை விடுத்து அறன் வழியில் செ...