இடுகைகள்

நெஞ்சிலோர் நண்டு

படம்
* ஆண்களுக்கான மார்பக நோய் விழிப்புணர்வு புத்தகம்* எனது நண்பர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நெஞ்சிலோர் நண்டு என்ற புத்தகத்தை, எனது பணி ஓய்வுக்குப் பிறகு படித்த முதல் புத்தகம். ஒரு தடவை "When bad things happen to good people" Harold S kushner எழுதிய புத்தகத்தையும் , "Man's Search for Meaning" Dr Viktor E Frankl எழுதிய புத்தகத்தையும் படித்து ஒப்பீடு செய்து இரண்டாவது புத்தகம் நடைமுறையை அனுபவத்தின் மூலம் உணர்ந்து வெளிபடுத்திய புத்தகம் என்பதனால் நன்றாக இருக்கிறது என்று எழுதியிருந்தேன். அதற்குச் சுதாகர் கஸ்தூரி அவர்கள் தான் அனுபவித்த அனுபவத்தின் வேதனையின் வெளிப்பாடு என்பதனால் , அதுவே நடைமுறைக்கு உகந்த உணர்வுகளை வெளிபடுத்தும் புத்தகமாக இருக்கும் என்று எழுதியிருந்தார். Emotional Intelligence வகுப்பில் Viktor E Frankel எழுதிய இந்தப் புத்தகமும் அவரது உணர்வு பூர்வமான தத்துவ வார்த்தைகளும் இடம் பெறும். அவரே பிற்காலத்தில் லோகதெரபி என்ற மருத்துவச் சிகிச்சையை உலகுக்கு வழங்கியவர். இப்பொழுது அவர் எழுதிய இந்தப் புத்தகம் என்பது அவர் சந்தித்த யாருக்கும் நிகழக்கூடாத ஒரு சம்பவம் ...

"ஆலிலையில் ஆற்றல்"

படம்
  ஒரு சிறுவன் ஆலிலைக் கண்ணன் படத்தைப் பார்த்து, எவ்வளவு அழகாக ஆலிலையில் சயனித்து, ஒரு காலை தூக்கி அதன் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறான். இதன் அர்த்தம் என்ன? என்று கேட்க அனைவரும் வியந்து நின்றனர். இந்தச் சிறுவனின் கேள்விக்குப்பின் பெரிய தத்துவம் ஒன்று உள்ளது, அந்தத் தத்துவத்தின் குறியீட்டாகவே இந்த ஆலிலைக் கண்ணன் உள்ளான் என்றும் , அவற்றை நாம் ஆழ்வார்கள் பாசுரங்களின் மூலம் நவீன அறிவியியின் துணைக்கொண்டும் ஒரளவு அறியமுற்படுவோம். பேதை குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே! பவள வாயீர் வந்து காணீரே!! என்று பெரியாழ்வார் ஆலிலைக் கண்ணனின் அழகை இந்தச் சிறுவன் போல் ரசித்துள்ளார் என்றும் தெரிகிறது. ஆழ்வார்கள் ஆலிலைக் கண்ணனைப் பல பாடல்களில் பாடியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை இப்பொழுது காண்போம் திருப்பாணாழ்வார் “ ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்” என்றும், பெரியாழ்வார் “ ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட, வையம் ஏழு கண்டாள் பிள்ளை வாயுளே “ என்றும், “உண்டிட்டு உலகினையேழும் ஒராலிலையில் துயில் கொண்டான்” என்றும், ...

இயற்கையிலே பெண்ணின் சிறப்பு

படம்
                                      நான் சமீபத்தில் ஆதி இந்தியர்கள் என்ற புத்தகம் வாசித்தேன். அதிலில் தொல் ஆய்வு என்பது இப்பொழுது இரண்டு முறையில் ஆராயப்படுகிறது என்பதனைத் தெரிவிக்கும் புத்தகம். ஒன்று தாய் வழி உறவு , மற்றொன்று தந்தை வழி உறவு . தந்தை வழி உறவு Y குரோமோசோம் வைத்து அறியப்படுகிறது. அதாவது பெண்ணிடம் இருப்பது XX , ஆணிடம் இருப்பது XY , அதாவது ஆண் என்பதனை உறுதிப்படுத்துவது Y குரோமோசோம். அது தந்தை மூலமாக ஒருவனுக்குக் கடத்தப்படுகிறது. இதுதான் பாரதீய மரபில் கோத்ரம் முறை என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு வேடிக்கை என்று அடியேன் பார்த்தது, பெண்ணின் துணை ஆணுக்குத் தேவை (XY) ஆனால் பெண்ணுக்கு ஆண் துணை (XX) தேவையில்லை. அதே போல் "மைட்டோ காண்டிரியல் என்பது 23 வகையான குரோமோசோமில் வராது. ஆனால் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இது மிகவும் ஒரு முக்கியமான ஒன்று . இதுவே "Power of Cells" என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த மைட்டோகாண்டிரியல் நாம் உட்கொள்ளும் உணவின் சத்துகளைப் பிரித்து உயிர் வாழ்வதற்கான சக...

வாரம் (கிழமையில் தொகுப்பு)

படம்
உரிமை என்றால் ஒருவனுக்குச் சட்டப்படி உரித்தான ஒன்றை உறுதிப்படுத்தி, அதன்மேல் சுதந்திரமாக எப்பொழுது வேண்டுமானாலும் அவனது/ அவளது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் ஒரு விதமான செயலுக்கான வார்த்தை. ஒரு சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவது என்பது சட்டப்படி எனது உரிமை என்று சொல்லாடல் உபயோகப்படுத்துகிறோம். இந்த உரிமை என்பது சட்டத்தினால் மாற்றப்படும் உரிமை. இதில் சில உரிமைகள் என்பது இயற்கை விதியின் படி நிகழும். அதை மாற்ற முடியாது. தாய் தந்தை உறவு உரிமை என்பது இயற்கையால் / இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமை. இந்த உடம்பின் மூலம் உயிர் அறியப்படும் வரை அந்த உரிமைத் தொடரும். தந்தை மற்றும் தாய் என்பவர்கள் மகன் மகளுக்கான சொத்து, மகன் மற்றும் மகள் என்பவர்கள் தாய்க்கான தந்தைக்கான சொத்து. இதிலிருந்து ஒன்று தெரிகிறது உரிமை என்பதற்குச் சொத்து என்றும் புரிகிறது. அதுவும் உண்மைதான். உரிமை என்பது உரி என்ற வேர்ச்சொல்லிருந்து வருகிறது. உரித்தான பொருளின் மீது ஆதிக்கம் அல்லது அன்பு செலுத்துவதை உரிமை என்று பொருள் கொள்ளலாம். கிழமையின் தொகுப்பு வாரம் . இதுவும் உரிமை என்பதனை உணர்த்துவதை நமது இலக்கியங்கள் மூலம் அறிவோம்...

உணர்வு

படம்
                                              உணர்வு என்பது தனிமனித அனுபவம். உணர்வு என்பது இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் ஒருவனுக்கு வெளிப்படுத்தும். இதில் சிலவற்றை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும். சிலவற்றை முடியாது. அக உணர்வு , புற உணர்வு என்று தமிழ் இலக்கியம் இதனைக் கூறுகிறது. இன்ப துன்பம் எப்படி ஏற்படுகிறது என்றால் , ஒருவனது வாழ்நாள் முழுவதும், உயிர் உடம்புடன் இருக்கும் வரை இஃது இவ்வாறு நடைபெறுகிறது என்று திருக்குறளுக்கு உரை எழுதும்போது பரிமேலழகர் காண்கிறார். "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடக்குங் கல்" வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்கு , ஐவகைக் குற்றத்தால் வரும் இருவகை வினையும், அதன்வழி வரும் இன்பம் துன்பம் என்ற வினைப்பயனும், உயிர் உயிரோடு இருக்கும் வரை வரும், இதை வாழ்நாள் முழுதும் என்று கூறுகிறார். அவித்தை (அறியாமை), அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு என்று ஐந்தினையும் , ஐங்குற்றம் என்று பரிமேலழகர் காட்டுகிறார். இதை விடுத்து அறன் வழியில் செ...

ஞானம்

படம்
 பாரதீய மரபில் ஞானம் என்றால் என்ன? நாம் இன்று படிப்பது எல்லாம் ஞானமா? ஒரு விஷயத்தை அறிவது என்பதும் ஞானமா? அதை அலசி ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் அறிவது , அறிந்தவற்றைச் சொல்வது என்பது ஞானமா? இது மட்டுமல்ல பாரதீய மரபில் முக்கியமானது புருஷார்த்தம் என்ற கொள்கை. புருஷார்த்தம் என்பது வீடு பேறு அடைவதற்கான வழி முறை. அதாவது மோஷத்திற்கான வழிமுறை. பிறப்பற்ற ஒரு சூழ்நிலையை அடைவதற்கான வழி என்பதனை வீடுபேறு என்று அறிகிறோம்.  புருஷார்த்தம் என்றால் தர்ம அர்த்த காம மோக்ஷ என்பதுதான். இதனைத் தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்று அழகாகக் காட்டுவார்கள். அறத்தின் வழியில் பொருளை ஈட்டி இன்பத்தை அனுபவித்தல் என்ற இவ்வுலக வாழ்க்கு ( இம்மையில் செய்யும் காரியங்கள்) , மறுமையில் வீட்டின்பம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை அறம் பொருள் இன்பம் என்று இம்மையில் செய்யப்படும் செயல் மூன்றையும் மூன்று பாற்களாக அமைத்து , அதில் ஒழுகும் போது மறுமையில் வீடுபேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நம்பிக்கையாகவே நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். இதுதான் திருக்குறளுக்குச் சிறந்த உரை எழுதிய பரிமே...

பூர்ணம் -22 (சரணாகதி)

படம்
                            எட்டெழுத்து மந்திரம் என்பது " ஓம் நமோ நாராயணய". பூர்ணமடைய அறிய வேண்டிய மந்திரம் இந்த எட்டெழுத்து மந்திரம் என்பது வைஷ்ணவ நம்பிக்கை. கிருஷ்ணன் பகவத்கீதை 10.35 யில், "மாஸாநாம் மார்கசீர்ஷோஹம்" மார்கழி மாதம் என்பது மாதத்தில் எட்டாவது மாதம். கிருஷ்ணனுக்குப் பிடித்த மாதம். அவன் பிறந்தது ( எட்டாம் நாள்) அஷ்டமி திதியில் எட்டாவது குழந்தையாகப் பிறந்து பகவத்கீதை என்ற உயர்ந்த ஞானத்தை உலகுக்கு வழங்கி "எட்டெழுத்து மந்திரமாக" ஏற்றம் கண்டான். முமுஷூப் படியில் அஷ்டாக்ஷர மந்திரத்தின் பெருமையை மிகவும் விஸ்தாரமாக விளக்குகிறார் பிள்ளைலோகாச்சாரியார். பாவ புண்ணியங்களைப் போக்கவல்ல மந்திரம் இந்த எட்டெழுத்து.முமுஷூக்கு ( முக்தியை விரும்புவர்)  அறிய வேண்டிய மந்திரம் மூன்று. அதில் பிரதான மந்திரம் "திருமந்திரம்". திருமந்திரம் என்பது "ஓம் நமோ நாராயணய"  பாவபுண்ணியங்கள் என்ற இரு வினைகளையும் ஒழித்து , இறைவன் அடிப் பற்றுபவர் பிறவா நிலையை அடைகிறார்கள் என்று கிருஷ்ணன் கீதையில் கூறியதைப் பார்த்தோம். வள...

பூர்ணம் - 21 ( அர்த்த பஞ்சகம்)

படம்
தத்வத்ரயம் என்று மூன்று உண்மைப் பொருட்களை முதலில் தெரிவித்து, சரீர ஆத்ம பாவம் முறையில் இறைவனுக்கும் சேதன அசேதனத்துக்கும் சம்மந்தத்தை விளக்கி, சரீரத்திற்கு ஒன்று என்றால் அதனை ஆத்மா தாங்குவதுபோல், இறைவனுக்குச் சரீரமாக இருக்கும் சேதனத்துக்கு அதாவது ஜீவாத்மாக்களுக்கு ஒன்று என்றால் பரமாத்மா என்ற இறைவனே தாங்குகிறான் என்று காட்டப்பட்டது. பாவபுண்யங்களை அதாவது நல்லது கெட்டது என்ற எல்லாக் கணக்குகளையும் பூஜ்யமாக்கி , பிறவி சுழலிருந்து விடுதலைப் பெறலாம் என்ற கீதையின் ஸ்லோகத்தையும் பார்த்தோம். பாவ புண்யங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் ஐம்புலனடக்கம், மனவலிமை, இரட்டை நிலைகளைச் சமமாகக் கருதுதல், கர்மம் செய்வதைக் கடமையாகக் கொண்டு பலனை எதிர்பாராமல் இருக்கும் நிலைமை என்றவை மிகவும் அவசியம் என்பதனை கீதையில் உரைத்ததை மனதில் நிறுத்த வேண்டும்.‌ நரகம் சொர்க்கம் என்பதே பாவ புண்ணியங்கள் பலனுக்கான இடங்கள் என்றும் காட்டப்பட்டது. அதையும் தாண்டி இறைவன் திருவடியில் பிறவா நிலையை அடைவது என்பது ஶ்ரீமந் நாராயணன் இருக்குமிடத்தைப் பரமபதம்  என்றும், சிவன் இருக்குமிடத்தைக் கைலாயம் என்று சனாதன தர்ம...

பூர்ணம் - 20 ( சமநிலை புத்தி)

படம்
பாரதீய சமயங்கள் அனைத்தும் கர்ம வினைகளை நம்புகிறது. பிறவியற்ற சூழ்நிலையை உருவாக்குவதே ஒரு ஜீவாத்மாவின் பரிபூர்ணம் என்பதும் நம்பிக்கை. கர்ம வினைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பாரதீய நம்பிக்கை. அதிலிருந்து வெளியேற ஒரு வழி இறைவன் திருவடி என்பதும் பாரதீய சமயக் கருத்து. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்                                 - திருக்குறள்  இதனைத்தான் வள்ளுவப் பெருமகனார் அவர்களும் தமிழ் மரபில் காண்பித்துள்ளார். தமிழ் மரபு என்பது பாரதீய மரபை உள்வாங்கி நிற்கும் என்பதற்கு வள்ளுவ பெருந்தகையின் வாக்குகள் நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.  பிரம்மம் பிரளய காலத்தில் சேதனங்கள் அசேதனங்களைத் தன்னுள் சரீரமாகக் கொண்டு ஒரு சக்தியாக இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். சிருஷ்டி காலத்தில் இந்தப் பிரக்ருதியை உருவாக்கி பஞ்ச பூதங்களை உருவாக்கி, ஜீவாத்மாக்களைப் பிரக்ருதியுடன் சம்மந்தத்தை உருவாக்கி படைக்கிறான். அதாவது சங்கல்பத்தினால் அவனது சரீரத்திலிருந்து வெள...

பூர்ணம் -19 ( சரீர ஆத்ம பாவம்)

படம்
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத்: | உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ் தத்வ தர்சிபி:||. 2-16 அஸத் - இல்லாததற்கு, பாவ - இருப்பு , ந வித்யதே - இல்லை , கிடையாது, ஸத் - இருப்பதற்கும், அப் பாவ - இல்லாமை , வித்யதே - உண்டு , தத்வதர்சிபி- தத்துவத்தை அறிந்தவர்கள், அனயோ உபயோ- இவ்விரண்டின், அந்தஸ் - முடிவு , த்ருஷ்டோ- காணப்படுகிறது. இல்லாத பொருள்களுக்கு இருத்தல் என்பதில்லை ; இருக்கும் பொருள்களுக்கு இல்லாமை என்பதில்லை; இவ்விரண்டுமே ஞானிகளின் முடிவான கருத்தாகும். இதில் அஸத் மற்றும் ஸத் என்ற இரண்டு பொருள்களை வைத்து விசாரிக்கிறார்கள் தத்வ தரிசிகள்.‌ வேதாந்த கருத்துகளுக்குத் தத்துவ அர்த்தமாக உரை எழுதிய தத்துவத் தரிசிகள் மூவரும் பாரதத்தில் தெற்கே தோன்றினார்கள். மூவரும் மூன்று நூல்களைக் கொண்டு தங்களது தத்துவங்களை நிறுவினார்கள். உபநிஷத்துக்கள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் என்ற மூன்று வேதாந்த கருத்து நூலுக்கு உரை எழுதினார்கள். பகவத் ஆதிசங்கரர் அத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் மத்வாச்சாரியார் துவைதம் என்ற தத்துவத்தையும் அவர்களது...