இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசுரர் அரக்கர் - 4

படம்
அசுரர்கள் என்பவர்கள் காஷ்யப ரிஷி திதி தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள். இதைத் தெளிவாகக் கம்ப இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் சடாயுகாண் படலத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வர்ணிக்கிறார்.     உலக உயிர்களின் தோற்ற வரலாறு என்று 5 பாடல்களில் கம்பன் , தக்கன் மகள்கள் பதின்மூவர் காஷ்யப ரிஷியை மணந்து , உயிர்கள் உருவாகுவதை விளக்குகிறார்.  "தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள் தொக்க பதின்மூவரை அக்காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள் மிக்க அதிதிப் பெயராள், முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈந்தாள் ; மைக் கருங் கண் திதி என்பாள், அதின் இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள் " (2805) அதிதி மூலமாகப் பிறந்தவர்கள் விண்ணோர் கள் என்றும் , தேவர்கள் என்றும், அமரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறது.  ஆண்டாள் திருப்பாவையில் " முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்" என்று முப்பத்து முக்கோடி தேவர்களை அமரர்கள் என்று அழைக்கிறாள்.  திருமால் வாமன அவதாரம் எடுக்க

பாமாலை (மூலம்)

முன்னுரை வயதில் மூத்த திருப்பேரை மக்கள் மனப்பாடம் செய்த பாமாலைக்கும், அச்சில் வெளிவந்த பாமாலை  மூலத்துக்கும் சில பாடபேதங்கள் இருப்பதை ஊர் பெரியவர்கள் மூலம் அறிந்தோம்.  நமது  பேராபுரி மஹாத்ம்யம் புத்தகம் வெளிக்கொணரும் போது அந்த பிழையை நிவர்த்தி செய்யும் வகையில் உண்மையான மூலத்தைத் தேடி அழைந்தோம். அந்த மூலமானது சீர்பிரிக்காமல் நான்கு அடிகளாக இருந்தது. அந்த மூலத்தை அப்படியே பேராபுரி மஹாத்ம்யம் நூலில் கொடுத்தோம். ஆனால் அது படிப்பதற்குக் கஷ்டமாக இருப்பதை உணர்ந்தோம்,இருந்தாலும் ஒரு மூல நூல் உருவாகிய வண்ணம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியே வெளியிட்டோம். பிறகு உ.வே.சா நூலகம் மூலம்  ஸ்ரீ உ.வே.சா. அவர்களால் சீர் பிரித்து 1939ம் ஆண்டு வெளிவந்த மகரநெடுங்குழைக்காதர் பாமாலை நூலை, மீண்டும் 2021 ம் ஆண்டு மூன்றாவது பதிப்பாக அடியேனது நிதியுதவி மூலம் வெளிக்கொணர்ந்தோம். அதுவும் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லியதன் காரணத்தினால் , "தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீக்ஷிதர்" என்ற பாமலைக்கு நெடிய உரையுடன் கூடிய ஒரு நூலை அடியேன் வெளியிடும்போது , எளிய முறையில் இன்றைய தலைம

அசுரர் அரக்கர் - 3

படம்
அரக்கர் குலம் என்பது புலஸ்தியர் மகன் விஸ்ரவ முனிவருக்கும் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்த குழந்தைகள், இலங்கையர் கோன் இராவணன் மற்றும் அவனது வழித்தோன்றலும் என்பதனை தெளிவாக ஆழ்வார்கள் பாசுரங்கள் மூலம் அறியப்பட்டோம்.  மேலும் அரக்கர் குலம் என்பது இராமாயணம் காலம் என்பதனால் தமிழின் மிகப் பெரிய காவியமான "கம்ப ராமாயணத்தில்" இந்த சப்தம் எவ்வாறு எதனை வெளிப்படுத்துகிறது என்று பார்த்தால் , இராவணன் மற்றும் அவனது வழி தோன்றலைக் குறிக்கும் சொல்லாகவே கம்பர் அமைத்துள்ளார் என்பது புலப்படும். " ஐயிரு தலையினோன் அனுசன் ஆதி ஆம் மெய் வலி அரக்கரால்" (197) என்று பால காண்டத்தில், பத்து தலைகளைக் கொண்ட அரக்கரால் என்று இராவணனைக் குறிப்பிடுகிறார்.  தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன் உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து “அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே இழிக“ என உரைத்தனன் அசனி எஞ்சவே. (379) என்று அகத்திய முனிவர் தாடகையின் புத்திரர்கள் மாரீசன் சுபாகுவை நோக்கி  சாபமிடும்போது ," எல்லா உயிர்களையும் அழிப்பதனால் , அரக்கர் ஆகியே இழிவாயாக" என்று கம்பர் குறிப்பிடுகிறார். அழிவு செய்தலா

அசுரர் அரக்கர் -2

படம்
படைப்பில் ஒரு விஷயத்தை உற்று நோக்கினால் புலப்படும் உண்மை என்பது, பிரம்மாவினால் படைக்கப்பட்ட பிரஜாபதிகள்,ரிஷிகள் மூலம் பல விலங்கினங்கள்,  தாவரயினங்கள் , பறவையினங்கள்,  ஊர்வனயினங்கள் , தேவர்கள் , தைத்தியர்கள், அரம்பையர்கள், கந்தர்வர்கள்,அரக்கர்கள், வித்யாதரர்கள் போன்ற  மனிதக் குல இனங்களும்,மற்றவை களும்,  படைக்கப்பட்டு  விஸ்தரிக்கப்பட்டுள்ளன.‌ கின்னரர்கள் , கிம்புருஷர்கள் என்பவர்கள் இரு வேறு இனங்களின் உருவங்களைக் கொண்டவர்கள். கின்னரர்கள் குதிரை முகம் கொண்டவர்கள் என்றும் , கீழ் உடம்பு பறவைகளைப் போலவும் மேல் உடம்பு மனிதர்களைப் போலவும் இருக்கும் என்று அறியப்படுகிறது. கிம்புருஷர்கள் சிங்க முகமும் மனித உடம்பையும் கொண்ட அமைப்பு. கிம்புருஷர்கள் கின்னரர்கள் இருவருக்கும் ஒரு தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களே கிராத இன மக்கள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.‌ கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர்கள். இப்படியாக 18 இனக்குழுக்கள் படைக்கப் பட்டன என்று புராணங்கள் கூறுகின்றன.‌ பரத்வாஜ  முனிவர் பட்சியாக மாறினார். அந்த பறவை  பரத்வாஜ  பட்சி அல்லது வலியன்

அசுரர் அரக்கர் -1

படம்
  அசுரன் அரக்கன் என்பதான தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது (Demon), அவை இரண்டும் பெரிய உருவங்கள் படைத்த  நல்லவன் இல்லை என்ற அர்த்தத்தால் குறிக்கும் சொல்லாகப் பயன்படுகிறது என்றுதான் அறியப்படுகிறது. அப்படித்தான் இணையத்தள தேடல்களும் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி தேடுதலே இந்தக் கட்டுரையின் நோக்கம்.  இதைப் பற்றி அறிவதற்கு பாரதத்தின் தொன்மைக்குச் சென்று படைப்பிலிருந்தும், ஆழ்வார்களின் ஈரச் சொற்களிலிருந்தும் சில விளக்கங்களைப் பெற முயற்சிக்கிறேன்.  காஷ்யப ரிஷி  ஸப்த ரிஷிகளில்  ஒருவராகவும், பிரம்மாவினால் படைப்பு தொழிலில் உதவி  புரிவதற்காகப்  படைக்கப் பட்ட பிரஜாபதிகள் பத்துகளிலும் ஒருவர்.  பிரம்மாவினால் படைக்கப்பட்ட மற்றொரு பிரஜாபதி தட்சன் (தக்கன்). தக்கன் பிரம்ம ரிஷிகளில் ஒருவர். காஷ்யப ரிஷி தட்சனின் 13 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு பல இனங்களைப் படைக்கிறார்.  காஷ்யப ரிஷிக்குப் பிறந்த குழந்தைகள், அவர்களைப் பொதுவாக அசுரர்கள் அதாவது வலிமையானவர்கள் என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது.‌ மனைவி அதிதி - இந்திரன், அக்கினி போன்ற தேவர்கள், ஆதித்தர்கள், மற்றும் வாம

சங்கத்தமிழ்(மாலை)-3

படம்
சங்க தமிழ்(மாலை) கட்டுரையைப் படித்துவிட்டு ஞாயிறு காலை (31Dec) கும்பகோணம் U. நரசிம்மன் ஸ்வாமி , திரு. மு. ராகவைய்யங்கார் எழுதிய  "ஆராய்ச்சி தொகுதி" என்ற புத்தகம் "மார்கழி நீராடல்" குறித்து உங்களுக்கு உதவும் என்று செய்தி அனுப்பியிருந்தார். அப்பொழுது அந்த புத்தகம் இல்லை என்று தெரிவித்தேன். உடனடியாக நகலை கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF) மூலம் அனுப்பி வைத்தார்.  அந்த புத்தகத்தில் "மார்கழி நோன்பாகிய தைந்நீராடல்" என்ற தலைப்பில் திரு. மு. ராகவைய்யங்கார் மிக விரிவாக எழுதியுள்ளார்.  நாம் இரண்டு கட்டுரையில் பார்த்த விஷயங்கள், கட்டுரையின்  பார்வை என்பது  நாம் அறியாமல் "மார்கழி நோன்பாகிய தைந்நீராடலுடன்" ஒத்திசைந்து சென்றதை அறிந்து பெருமை அடைந்தோம்.  மேலும் பல ஒற்றுமைகள் இருப்பதை அந்த புத்தகத்தின் மூலம் படித்து நாம் அடைந்த ஆனந்தத்தை இங்கே பகர்வது என்று எண்ணி இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.  சைவ வைணவ இலக்கியங்களில் கூறும் மார்கழி நீராடல் அதாவது மார்கழி நோன்பு என்பது , பாரத தேசத்தில் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் வழக்கம் என்று ஆரம்பிக்கிறார். பாரதப் பண