இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் - 5

படம்
கூடி வாழும் தன்மை என்பது இயற்கையின் நீதி.‌ பெரியாழ்வார் “கூடிய கூட்டமாகக் கொண்டு குடி வாழுங்கள் " என்றும், அவரது திருமகள் ஆண்டாள்  “கூடியிருந்து குளிர்ந்து"என்றும், தமிழ் மூதாட்டி ஔவையார் “ஊருடன் கூடி வாழ்" என்றும், கூடிவாழ்வதைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்கள்.  மனிதன் பிறந்த தொடக்கம் இறப்பு வரைக்கும் ஒருவரைச் சார்ந்துதான் வாழ்கிறான். சார்பு வாழ்க்கை முறை என்பது மனிதனுக்கு இயற்கையின் நீதி.  நாம் அணியும் சட்டை என்பது , பருத்தியிலிருந்து தையல் செய்த சட்டையாக வருவதற்குப் பல ஊழியர்களின் உழைப்பும், வியர்வையும் நேரமும் அதில் உள்ளது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை என்ன என்பது புலப்படும். உணவுப் பொருட்கள் நம் தட்டில் உணவாக வருவதற்குப் பல புண்ணியவான்களின் உழைப்பு பின்னால் இருக்கிறது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை புலப்படும்.  சார்பு நிலையை ஒத்துக்கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி என்பது,  1. அவர்களும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.  2. என்னிடம் பணம் இருந்தது, அதனால் பொருட்களை வாங்கினேன். வேலை செய்வதற்குப் பணம் கொடுத்தாலும், மக்கள் அதற்கு வரவில்லையென...

பூர்ணம் - 4

படம்
மாணவன் எல்லையறிந்து ( Knowing the Individual Limits) அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை பார்ப்பதற்கு முன், பழைய குடும்ப அமைப்பு அழுத்தங்களைக் குறைக்கவும்,  சமுதாயமாகச் சிந்திக்கவும், மன நிறைவை உருவாக்க எவ்வாறு உதவுகின்றன என்று பார்ப்போம்  குடும்பம் என்பது பெரும்பாலும் கூட்டுக் குடும்பம். பொருளாதார சுமைகளை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து சமாளித்தார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்பது பலரிடம் காணப்பட்டது. கூட்டுப் பணி , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒருவரையொருவர் தாங்குவது ( Supportive system) , இன்ப துன்பங்களில் பங்கு கொள்வது, சார்பு வாழ்க்கை, பாதுகாப்பு போன்ற பண்புகள் கூட்டுக் குடும்பத்தின் அங்கமாக வழக்கத்திலிருந்தன.  கூட்டுக் குடும்பம் ஒரு வகையில் அழுத்தத்தை குடும்பங்களிடையில் குறைத்தது என்பது உண்மை. பொருளாதார சுமை மற்றும் அழுத்தம், சமுதாய அழுத்தங்கள் என்பது குடும்ப உறுப்பினர்களிடம் பரவலாகப்பட்டது. குழந்தைகளும் தனிமையில் இல்லாமல் நிறைய குடும்ப குழந்தைகளுடன் சேர்ந்து ஒன்றாக விளையாடி, ஒன்றாகச் சாப்பிட்டு , ஒன்றாகப் பள்ளி சென்று, ஒன்றாகத் தூ...

பூர்ணம்-3

படம்
பெரும்பாலும் இப்பொழுது அரசுப் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ குழந்தைகளைச் சேர்ப்பதில்லை.‌பணம் இருக்கிறதோ அல்லது இல்லையோ? ஏழையோ அல்லது நடுத்தர மக்களோ? குழந்தைகளை நல்ல தரமான பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதற்காகச் செலவுகளைச் சரி செய்வதற்குப் பணத்தை எப்படியாவது சமாளிப்பது போன்ற நிலைகள். இது சரி மற்றும் தவறு என்றல்ல?  அரசுப் பள்ளிகளின் தரம் என்பது இந்த 40 வருட காலத்தில் என்ன நிலைமைக்குச் சென்றுள்ளது? மக்கள் ஒருபக்கம் புறம் தள்ளி, மற்றொரு பக்கம் அரசு சரியான நிதியுதவி அளிக்காமல், ஆசிரியர்கள் சேர்ப்பு இல்லாமல் தரம் என்பது நலிவடைந்து விட்டன. உபயோகம் இல்லாத பொருட்களுக்கு மதிப்பு கிடையாது. மாறாக நலிவுற்றுவிடும். இது எல்லா பொருட்களுக்கும் பொருந்தும் அரசுப் பள்ளிகள் உட்பட. இந்த சூழல் இன்று அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்குத் தடையாக இருக்கின்றன. அரசாங்கம் இன்று அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு ஏலம் கொடுப்பதைப் பற்றி யோசித்து வருகின்றன.  அந்த காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கிராமத்தில் வருவதற்கு நம் முன்னோர்கள் எவ்வளவோ பாடுபட்டார்கள். ஏனென்றால் பள்ளிப் படிப்புக்காக மூன்று அ...

பூர்ணம் - 2

படம்
எனக்கு விபரம் தெரிந்த காலகட்டத்தில் 1980 ( டீன் வயதில்) சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்று பார்த்தால், பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் என்பது குறைந்தது 5 அல்லது அதற்கு மேல் இருக்கும்.  பள்ளிப் படிப்பு என்பது அரசாங்க பள்ளிக் கூடமாக இருக்கும். வீட்டிலிருந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீடு வருவோம். சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளி. படிப்பது என்னவென்று கூடப் பெற்றோர்கள் பின்தொடர்வது கிடையாது. ஒழுக்கம் குறைந்தால் மட்டுமே தகவல் பள்ளியிலிருந்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும்.  மாணவர்களும் காலையில் நிதானமாக எழுந்து தெரு திண்ணையில் உட்கார்ந்து பேசி , ஆறு பக்கம் சென்று காலைக் கடன் மற்றும் குளித்துவிட்டு வந்து, சிற்றுண்டி என்னவோ அதையும் சாப்பிட்டு பள்ளி செல்வது என்பது தின வழக்கம். பெரும்பாலும் காலை சிற்றுண்டி என்பது பழைய சோறு அல்லது பழஞ்சோறு நீர் ( நீராகாரம்).‌ இப்பொழுது ஆற்றில் தண்ணீரே இல்லை. முட்செடிகளும் புதர்களுமாக இருக்கிறது. இதுதான் இன்றைய சூழ்நிலை. இன்றைய இளைஞர்கள் இழந்த பலவற்றில் இதுவும் ஒன்று.‌ அந்த பழஞ்சோறு நீராகாரம் சுவையே தனி. நீண்ட நாட்களு...

பூர்ணம் -1

படம்
ஓம்   பூர்ணமதஹ   பூர்ணமிதம் !  பூர்ணாத்   பூர்ணம்   உதச்யதே !!  பூர்ண்ஸ்ய   பூர்ணம்   ஆதாய   பூர்ணமேவ   அவசிஷ்யதே !!! இது வேத வாக்கியம்.  பூர்ணம் என்பதற்குத் தமிழ் அகராதிகள் கூறும் பொருள் என்பது நிறைவு , முழுமை, குறைபாடற்ற, மிகுதி, மனநிறைவு, முடிவு.  இறைவன் முழுமையானவன் . முழுமையான இறைவன் இங்கும் அங்கும் இருக்கிறான். முழுமையிலிருந்து முழுமையான உலகத்தைத் தோற்றுவிக்கிறான். முழுமையிலிருந்து முழுமையை எடுத்துவிட்டால் முழுமையே எஞ்சும்.  இதில் பூர்ணம் மற்றும் முழுமை ஏழு தடவை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.‌ முழுமை மற்றும் நிறைவு என்பது  மட்டுமே பொருந்தும். அதை உணர்ந்தவன் மன நிறைவு அடைந்து பேரானந்தம் பெறுகிறான்.  முழுமையை உணர முயல்கிறான் முயல்கிறான், முயற்சி செய்து கொண்டே மனநிறைவு அடையப்பெறுகிறான்.  ஒரு செயலை ஒருவன் செய்ய முற்படும்போது, அதனை முழுமையாக , நிறைவாக முடிக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அது ஒரு தேவையான பண்பாக இவ்வுலகில் கருதப்படுகிறது. முழுமையாக முடிவடைந்த செயலினால் வெற்றி கிடைக்கும், ...