இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரு துருவங்கள் ஒரு புள்ளியில் -1

படம்
ஸ்ரீமந் நாராயணன் அடியவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காகவும், அவ்வப்பொழுது பல அவதாரங்களைச் செய்துள்ளான். எண்ணற்ற அவதாரங்கள் எடுத்திருந்தாளும், குறிப்பாக தசாவதாரம் என்று பத்து அவதாரங்கள் மிகவும் பிரபலமாகப் பேசப்படுகின்றன நம் பாரத தேசத்தில்.  பத்து அவதாரங்களை வரிசைக்கிரமமாகப் பாடியுள்ளனர் ஆழ்வார்கள்.   “ தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய், அரியாய் குறளாய்  மூவுருவின் இராமனாய், கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்”   என்பது பெரியாழ்வார் வாக்கு.   “மீனோடு ஆமை கேழல் அரி குறளாய், முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் , தாமோதரனாய் கற்கியும் ஆவான் “ என்பது திருமங்கையாழ்வார் வாக்கு.   அதிலும் குறிப்பாக இரண்டு அவதாரங்கள் மிகவும் விசேஷம் ஒன்று ஸ்ரீராமவதாரம், மற்றொன்று ஸ்ரீகிருஷ்ணவதாரம் . இவர்களையே பாட்டுடை தலைவனாகக் கொண்டு, பாரதத்தில் மிகப்பெரிய இரண்டு இதிகாசங்கள் ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ மஹாபாரதம் எழுதப்பட்டுள்ளன.  இருவரும் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், அடியவர்களின் துன்பங்களைத் துடைப்பதற்காக அவதாரம் செய்தது மட்டுமல்லாமல் , சில குணங்களையும், நல்வழிகளையும் வாழ்ந

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 8

படம்
                      உடையவர் - ஆழ்வார் திருநகரி பெருமாள் பக்தர்கள் அனைவரும் சமம், அவர்களிடையே எந்த வகையிலும் வித்தியாசம் கிடையாது என்பதனையும் , அவர்கள் எல்லோரும் "ப்ரபந்ந குலம்" என்றும் , ப்ரபந்ந குலத்திற்கு ஆதி மானிட குருவாக அவதரித்து அனைவரையும் ஜன்ம உத்தாரகம் செய்தவர் " ப்ரபந்ந ஜன கூடஸ்தர்" என்று அழைக்கப்படும் நம்மாழ்வார் என்றும், மாறன் அடி பணிந்து உயர்ந்த நம்மிராமாநுஜன் அனைவரையும் உய்விக்க வந்த உத்தமர் என்றும், கீழே இதுவரையில் பார்த்து வந்தோம்.‌ உய்விக்க ஒரே வழி உடையவர் திருவடி என்பதனால், அவரே ஶ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களில் மையமாகவும் , தலைசிறந்தவராகவும் விளங்குகிறார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.  ஆசார்யஹ்ருதயம் என்ற கிரந்தத்தை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற ஆசாரியர் அருளிச் செய்தார். இவர் ஸ்வாமி பிள்ளைலோகாச்சார்யார் என்பவரின் திருத்தம்பி. ஶ்ரீ வடக்கு திருவீதிப்பிள்ளை என்பவரின் இரண்டாவது குமாரர்.‌  "ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்" என்கிறபடி நம்மாழ்வார் என்ற ஆசாரியரின் திருவுள்ளக் கருத்துகளைக் கூறுவதனால் இதற்கு "ஆசார்யஹ்ருதயம் " என்று பெயரிட்டு அ

இயற்கையில் இணைவது இந்து தர்மம்

படம்
  யானையை வைத்து படமாக்குவது தேவர் காலம் தொடங்கிப் பார்த்து வருகிறோம். யானை என்றாலே தோன்றுவது பெருமிதம். கஜகதி என்று யானை போன்று நடந்து , தன் பெருமித அழகைக் காட்டி நடந்து வருவது என்று திருவரங்க நாதனுக்கே உரிய ஒரு நடை அழகு. அது ஒரு மரபாக இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.  யானை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சென்று அழகை ரசிப்பதும் , அதனால் மகிழ்ச்சி கொள்வதும் என்பது இயற்கை. திருமங்கையாழ்வார் பெருமாளை யானையாகப் பாவித்து ஒரு பாடலை பாடியுள்ளார்.  "பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாய் என்னானாய் என்னால் அல்லால் என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும் தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தனாய் முதலானாயே" உலகம் துதிக்கும் வண்ணம் , தென்னானாய் - தெற்கு பகுதியில் திருமாலிருஞ்சோலை எழுந்தருளி அருள்பாலிக்கும் அழகன் என்ற யானை  வடவானாய் - வடக்கு பகுதியில் திருவேங்கடம் எழுந்தருளி அருள்பாலிக்கும் மலை உறையும் வேங்கடவன் என்ற யானை  குடபாலனாய் - மேற்கு திசையில் திருவரங்க

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 7

படம்
  ஆசார்ய ஹ்ருதயம்  "புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் ,மகா முனியும் அனுவர்தித்த க்ரமும்"                                ஆசார்ய ஹ்ருதயம் சூரணை 85           மேலை குறிப்பிட்டுள்ள சூரணையில் மூன்று நபர்களின் பக்தியின் சிறப்பையும், அவர்களை மூன்று எம்பெருமான்கள் ஆட்கொண்ட விதத்தையும் அழகாக உரைக்கும் ஒரு சூத்திரம்.  சம்பிரதாயத்தில் மூன்று திவ்ய தேசங்கள் கோயில், திருமலை , பெருமாள் கோயில் என்று பிரதானமாகக் கருதப்படுகிறது. கோயில் என்பது அரங்கன் உறையும் திருவரங்கத்தைக் குறிக்கிறது. திருமலை என்பது வேங்கடவன் உறையும் திருமலையைக் குறிக்கிறது. பெருமாள் கோயில் என்பது தேவாதி ராஜன் உறையும் காஞ்சிபுரத்தைக் குறிக்கிறது.  அரங்கன் எழுந்தருளியிருப்பது போகமண்டபம் என்றும் , வேங்கடவன் எழுந்தருளியிருப்பது புஷ்ப மண்டபம் என்றும் , தேவாதி ராஜன் எழுந்தருளியிருப்பது த்யாக மண்டபம் என்றும் சம்பிரதாயத்தில் அழைக்கப்படுகிறது. இதனை மண்டப த்ரையம் ( மூன்று மண்டபம்) என்றும் அழைப்பார்கள்.  மேலே கூறிய ஆசார்ய ஹ்ருதயம் சூரணை மேலே குறிப்பிட்டு

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -6

படம்
  திருக்கச்சி நம்பி " ஆமுதல்வன்  இவன் என்று தன்  தேற்றி என் நா முதல் வந்து புகுந்து  நல்லின்கவி தூமுதல்  பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை என்று  மறப்பனோ  ".                                                        - திருவாய்மொழி 7-9-3                ஈடு வியாக்கியானம் "திருப்புற்றுக்குக்  கீழே  கரியமாணிக்காழ்வார்  திருமுன்பின்  ஸோபாநத்திலே  ஆள     வந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர்  திருப்புற்றுக்குக் கிழக்காக  எழுந்தருளியிருக்க உடையவரைக் கண்டு ' ஆமுதல்வன்  இவன்' என்று   அருளிச்செய்தாராம் " என்று அருளிச்செய்யப்பட்டுள்ளது.  ஆம் முதல்வன் என்று மங்களாசாசனம் செய்யப்பட்ட இளையாழ்வார் யாதவப் பிரகாசர் காசி யாத்திரையில் செய்த சதிவலையிலிருந்து தப்பிகாஞ்சி  திவ்யதம்பதிகளினால்  வேடுவன்  வேடுவச்சி  ரூபத்தில் காப்பாற்றப்பட்டு காஞ்சி என்ற  சத்ய  விரத க்ஷேத்திரத்திற்கு வந்தார். அதன்பிறகு இளையாழ்வார்  திருக்கச்சி   நம்பியிடம் பாடம் பயின்றும், அவர் கட்டளையின் பெயரில் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த  கைங்கர்யம்  செய்து வந்தார்.  திருக்கச்சி  நம்பி காஞ்சியிலிருந