இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்களின் ஏற்றம் ( எண்களின் வடிவமே எம்பெருமான்)

படம்
  ஒன்பது : ஸ்வாமி பிள்ளைலோகச்சாரியார் " அஷ்டாதச ரகசியம்" என்று 18 ரகசிய கிரந்தங்கள் இயற்றியுள்ளார். இவர் தனது 103 வயதில் மலிக்காபூர் படையெடுப்பு கொடுமையிலிருந்து மூலவர் ரங்கநாதரை கல்திரையிட்டு மறைத்தார். நம்பெருமாள் என்று அழைக்கப்படும் உற்சவர் திருவரங்கநாதனை எழுந்தருளச் செய்துகொண்டு தெற்கு நோக்கிப் பயணித்தார். நான்கு வருடங்கள் திருமாலிருஞ்சோலை மலைப்பகுதியில் வாழ்ந்து , 107வது வயதில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். அவர் இயற்றிய 18 ரகசிய கிரந்தங்களில் ஒன்று "நவவித சம்பந்தம்". ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான ஒன்பது சம்பந்தங்களை விஸ்தாரமாக விளக்குகிறார். இங்கே நாம் ஒன்பது சம்பந்தங்களின் முழு விவரத்தையும் பார்க்கப் போவது இல்லை. நவவித சம்பந்தம்: "பிதா ச ரக்ஷகஸ்ஸேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: ஸ்வாம்யா தாரோ மமாத்மா ச போக்தா சாத்யமநூதித:" 1. பிதா புத்ர சம்பந்தம் (படைப்பவன், படைக்கப்பட்டவன்) 2. ரக்ஷ்ய ரக்ஷகம் சம்பந்தம் (காப்பாளன், காக்கப்படுவன்) 3. சேஷ சேஷி சம்பந்தம் (ஆண்டான் , அடிமை) 4

கராவினைக் காத்த தாமரை நாயகன் ( சனாதனம்)

படம்
    பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான், எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,* விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த- கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே! சிவபெருமானும், பிரமனும் எம்பெருமானின் தர்சனத்தைப் பெறப் பல யுகங்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தலைகுனிந்து நிற்கும் வகையில் கஜேந்திரனுக்கு அருளை ஈர்த்தார் என்று பாடல் கூறுகிறது.  தேவர்களும் முனிவர்களும் தவம் புரிந்து காத்திருக்க , விலங்கினத்துக்கு இரங்கி அருள் புரிந்தவன் எம்பெருமான். சரணம் என்று தஞ்சமடைந்தவர்களை நழுவ விடாதவன் என்பதனால் அவனுக்குத் திருநாமம் "அச்சுதா" என்று வழங்கப்பட்டது.  "அச்சுதா" என்றால் நழுவ விடாதவன் என்று பொருள் . தண்ணீரில் மலரக்கூடிய மலர் " தாமரை மலர்".‌‌ தாமரை மலர் அழகானது , பார்ப்பவர்களின் மனதைக் கவரக்கூடியது .அதே போல் எம்பெருமானின் திருமேனி. அவனுடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு தாமரை. தாமரைக் காடு சேர்ந்தாற் போல் அவனது திருமேனி.  தாமரை‌ போன்று அழகானவர், கவரக்கூடியவர். "கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம்

எண்களின் ஏற்றம் -4 ( எண்களின் வடிவம் எம்பெருமான்)

படம்
  ஐந்து:   பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அவை உணர்த்தும் ஐந்து குணங்களாகவும் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார் என்று   திருமழிசைப்பிரானின்   வாக்குக் கொண்டு பார்த்தோம். பஞ்சாயுதங்களை ஏந்தியவன் என்ற பெயரை உடையவன் எம்பெருமான். ஆழ்வார்கள் பாடல்கள் ஏராளம், "சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகளாலே  வந்து அச்சோ அச்சோ"                         - பெரியாழ்வார் திருமொழி 1-8-2 என்றும், "கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே அங்கை  ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்"                                                                                                                                   -  திருசந்தவிருத்தம்  (24) என்றும், "வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து  சீர்க்கைய  செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே" என்றும், "நின்றிடும் திசைக்கும் நையும் என்று       அன்னையரும்  முனிதிர் குன்ற மாடத் திருக்குறுங்குடி       நம்பியை நான் கண்டபின் வென்றி  வில்லும் தண்டும் வாளும்       சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா        நெஞ்சுள

விஜயதசமி விழா

படம்
  இன்று விஜய தசமி விழா இது ஒரு சனாதன தர்மத்தின் திருவிழா. வைணவம் , சைவம்  என்ற இரு பிரிவுகளும், அம்மனை வழிபடக்கூடிய சாக்தம் என்ற பிரிவினரும், அனைத்து ஷண்மத பிரிவினரும் இந்த நவராத்திரி திருவிழாவை அவரவர் வழியில் கொண்டாடி , இறுதியில் விஜயதசமி  அன்று நிறைவு செய்கிறார்கள். பொதுவாகத்  தர்மம் தழைத்தோங்கிய நாள். அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைப் பெற்ற வெற்றி நாள். "பலமே வாழ்வு பலவீனமே மரணம்" என்பது விவேகானந்தர் வாக்கு. பலம் என்பது தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும், சமுதாயம் சார்ந்த தேசத்துக்கும்  பொதுவாகப்  பொருந்தும். பலம் என்பது ஆயுதமாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு கருவியாக இருக்கலாம், செல்வமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு வித்தையாக இருக்கலாம். ஒரு நாட்டை  பாதுகாக்கப்  படை என்பது முக்கியம், சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய காவல்துறை, நீதித்துறை அவசியம். நாட்டின் வளர்ச்சி அதன் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரம் என்பது எல்லா வளங்களையும்.  பெருக்குவது. நாட்டு மக்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த மூன்று துறைகளிலும் வெற்றியை நிலைநாட்டவேண்டும். குறி

எண்களின் ஏற்றம் - 3 ( எண்களின் வடிவம் எம்பெருமான்)

படம்
அடிப்படை எண்கள் ஒன்று முதல் ஒன்பது, அதன் வடிவமாக இறைவன்   ஶ்ரீமந்   நாராயணன் எழுந்தருளியுள்ளான் என்பது அடிப்படை நம்பிக்கை. ஆழ்வார்களின் அருளிச்செயல் ஆதாரமாக இருந்து அருமையாக விளக்குகிறது. திருசந்த  விருத்தம்  திவ்ய  பிரபந்தத்தில், " ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி  நாலு  மூர்த்தி  நன்மை சேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய் நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல் ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே" என்றும், திருவாய்மொழி  திவ்ய  பிரபந்தத்தில் நம்மாழ்வார், ஏக மூர்த்தி இரு மூர்த்தி       மூன்று மூர்த்தி பல மூர்த்தி ஆகி ஐந்து பூதம் ஆய்       இரண்டு சுடர் ஆய்  அருவு  ஆகி நாகம் ஏறி நடுக் கடலுள்       துயின்ற நாராயணனே உன் ஆகம்  முற்றும் அகத்து அடக்கி       ஆவி அல்லல் மாய்த்ததே என்றும், திருநெடுந்தாண்டகம்   திவ்ய  பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார், "மை வண்ண  நறுங்  குஞ்சிக் குழல் பின் தாழ       மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட எய் வண்ண  வெம்  சிலையே துணையா  இங்கே       இருவராய் வந்தார்  என் முன்னே நின்றார்" என்றும், "எண் இல் மூர்த்தியாய்&qu