இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசுரர் அரக்கர் -7 (அவுணன்)

படம்
ஆழ்வார்கள் அவுணன் என்ற சொல்லை பெரும்பாலும் அசுரர்களைக் குறிக்கும் சொல்லாக உபயோகப்படுத்தியுள்ளார்கள்.‌ "கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால்"  "முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்"                      - பெரியாழ்வார்  "பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு  அரிய ஆதிப்பிரான்"                 - திருப்பாணாழ்வார்  "அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்"            - திருமங்கையாழ்வார் "அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே" "புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன"  "செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்"                             - நம்மாழ்வார்  மேற்கூறிய பாசுரங்களில் அவுணன் என்பது ஹிரண்யகசிபுவைக் குறிக்கும் வண்ணம் ஆழ்வார்கள் பாசுரங்களை அமைத்துள்ளார்கள்.  "அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்"  &q

அசுரர் அரக்கர் - 6 (இராக்கதர் தானவர்)

படம்
அசுரர் அரக்கர் பற்றி நூல்களிலிருந்து தேடும்போது அதற்கு ஈடான வார்த்தைகளை ஆழ்வார்களும் கம்பரும் உபயோகப்படுத்தியுள்ளது என்பது தெரியவந்தது.‌ இராக்கதர் ஆழ்வார்களும் கம்பனும் அரக்கன் என்ற சொல்லுக்கு இராக்கதர் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர்கள். " இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு"                         - பெரியாழ்வார்  அரக்கர்கள் வாழும் இலங்கை என்பது ஆழ்வார் பாடல். "அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன்"                         - பெரியாழ்வார்  அசுரர் அரக்கர் குலத்தை களைந்த இருடிகேசன் என்ற எம்பெருமான் என்பது ஆழ்வார் பாடல் "முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின்"            - திருமங்கையாழ்வார்  சூர்ப்பணகை என்ற அரக்கி மூக்கை அரிந்திட்ட வரலாற்றைக் கூறும் ஆழ்வார் பாடல்.‌ கம்பராமாயணத்தில் இராக்கதர்: இராக்கதர் சொல்லைக் குறிக்கும் பல பாடல்கள் இருந்தாலும்,  சில பாடல்கள் இங்கே.  "தரெிகணை மாரி பெய்ய,     தேர்களும், சி

அசுரர் அரக்கர் கட்டுரையின் நோக்கம்

ஐந்தாவது பாகம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டோம். இதைப் பார்த்து எனது நண்பர்கள், ஐந்து பாகமாகக் கட்டுரை ஒரு ஆய்வுக்கான நோக்கம் போல்  கொண்டிருக்கிறது. அதன் காரணம் என்னவோ ? என்று வினவி இருந்தார்கள்.  இதே கேள்வி சில வாசகர்களிடம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதனால், பதிலை எல்லோரிடமும் பகரும் விதத்தில் எழுதும் கட்டுரை.  அரக்கர் அசுரர் வார்த்தைகள் தமிழில் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் வண்ணம் உபயோகப் படுத்தப்படுகிறது. பலரிடம் உரையாடும் போது ஒரே வார்த்தை என்பதனால் அரக்கர் இடத்தில் அசுரர் என்றும் , அசுரர் இடத்தில் அரக்கர் என்றும் உபயோகப் படுத்தலாம் , அதில் தவறு இல்லை என்று கூறுவதைக் கவனித்தேன்.  ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு முன் திருப்பாவை "புள்ளின் வாய் " பாசுர அனுபவமாக ஒரு கட்டுரை வெளியிட்டேன். "பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை" என்பது  இராவணனை அழித்த ராமனைக் கொண்டாடுகிறார்கள் என்பது வ்யாக்னம். அந்த பாடல் கிருஷ்ண ராம அவதாரத்தைக் கொண்டாடும் பாசுரம்.  அடியேன் கிள்ளி என்ற சப்தம் நகத்தினால் செய்யப்படும் காரியம் என்று கருதி , நரசிம்ம அவதாரத்துடன் ஒப்பிட்டு, நரசிம்மனையும் இராமன

அசுரர் அரக்கர் - 5

படம்
அரக்கர் என்பவர்கள் யார் என்றும் அசுரர் என்பவர்கள் யார் என்றும், ஆழ்வார்கள் கம்பன் நூல்களிலிருந்துப் பார்த்தோம்.  அரக்கர் அசுரர் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன என்பதனை ஆழ்வார்கள் கம்பன் பாசுரங்கள் மூலம் அறிகிறோம்.  வலிமை மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட முக அமைப்பு  "வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை"   - பெரியாழ்வார் திருமொழி "மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்"                  - திருசந்த விருத்தம் "இலங்கை-தன்னுள் பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்"                  - பெரிய திருமொழி "மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன்"                        - வில்லி பாரதம்  அரக்கர் என்பவர்கள் வலிமையானவர்கள் (வல்லாளன்), உயர்ந்த கூர்மையான பற்களைக்    (வாள் எயிற்று) கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது பாசுர வார்த்தைகளின் மூலம் தெரியவருகிறது. "வரத்தினிற் சிரத்தை மிக்க வாள