இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்களின் ஏற்றம் ( எண்களின் வடிவம் எம்பெருமான்) - 2

படம்
  நவதிருப்பதி  கடந்த பாகத்தில் திருமங்கையாழ்வார் எண்களைக் கொண்டு ஏறு முகமாகவும் இறங்கு முகமாகவும்   தேர்த்   தட்டுகளைக்   கட்டமைத்து ஆராவமுதனை எழுந்தருளச் செய்தார் என்பதனை அனுபவித்தோம்.   தேர்த்   தட்டுகள் கட்டமைப்பு என்பது குறியீடு அடிப்படையில், தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும்  ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. தேர் என்பது   ஊர்கூடி   சமுதாயமாக இழுப்பது போல்,  ஏற்ற   இறக்கங்களைச்   சமுதாயமாகச்   சரிசெய்ய (Team work) வேண்டும் என்பதுதான் குறியீடு. எண்களின்   மகிமையைத்   தேர் பந்தன கவி மூலம் அனுபவித்தோம். அடிப்படை எண்கள் பத்து என்றாலும் , முதல் எண் பூஜ்யம். பூஜ்யம் என்பது ஒரு  எண்ணுக்குப்  பின் வரும்பொழுது அதன் மதிப்புக் கிடைக்கப்பெறுகிறது அல்லது உயர்கிறது. தனியாக அதற்கு மதிப்பு கிடையாது.  இந்த  பூஜ்யத்தைக்  கழித்து மற்றைய எண்கள் ஒன்பது.  அடிப்படை எண்கள் என்பது இந்த ஒன்பது எண்கள். கோள்கள் ஒன்பது. இப்பொழுது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் திருவிழா ஒன்பது நாட்கள் நவராத்திரி. எங்களது ஊரான தென்திருப்பேரைச் சுற்றி அமைந்துள்ள வைணவ ஸ்தலங்கள் நவதிருப்பதிகள் என்றும், சில ஸ்தலங்கள் நவ கைலாசம

எண்களின் ஏற்றம்

படம்
  அலுவலகத்தில் சில நபர்கள் எண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதும், பிறகு அதனை எப்படிக் கட்டுப்படுத்துவதும் என்பதையே சிந்தனை செய்த வண்ணம் இருப்பார்கள். அவர்களைப் பார்த்து நான் வேடிக்கையாக ஒன்று சொல்லுவது, உங்களிடம் 0 முதல் 9 வரையான பத்து எண்கள் மட்டுமே இருக்கின்றன.  நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முடிவின் இறுதி என்பது இந்த பத்து எண்களின் சேர்க்கையில் தான் அமையும். ஆதலால் பத்து எண்களின் கலவையை வைத்து விளையாடுகிறீர்கள் என்று வேடிக்கையாக , நகைச் சுவையாகக் கூறிவருவேன்.  பத்து எண்களின் சேர்க்கையில் தான் உலகம் இயங்குகிறது என்பதுதான் உண்மை. எண்களே கணிதம், பொருளாதாரம், வணிகம், வானவியல், கணக்கியல், புள்ளியியல், அறிவியல் போன்ற அனைத்து துறைகளுக்கும் அடிப்படை நாதமாக உள்ளது என்பது நாம் அறிந்த உண்மை. இந்த எண்கள்தான் உலகத்தையே தலைகீழாகவும் மாற்றுகிறது. பணம் என்பதும் ஒருவகையான எண்களே. இந்த எண்கள் ஒரு சிலரை மேலும் எடுத்துச்செல்லும், ஒரு சிலரைக் கீழாகவும் எடுத்துச் செல்லும் தன்மை கொண்டது. எண்களே மக்களாட்சியையும் தீர்மானிக்கிறது. எண்களே அரசியல்வாதிகளைப் பலவிதத்திலும் மயக்குகிறது.  எண்களைக் ( பணம்) கொண்டு மக்களை

திருவோணத் திருநாள் -2

படம்
  ஆவணி திருவோணம் (ச்ரவண மாதம் ச்ரவண நக்ஷத்திரம்) அன்று, வாமன ஜெயந்தி, ஓணம்  என்றும், உலகளந்த உத்தமனின் உதயத்தைக்  கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்,  ஸ்ரீமந் நாராயணனின் மற்ற அவதாரங்களான நரசிம்மன், இராமன்,  கண்ணன்,  வராஹன் போன்ற அவதாரங்களுக்கும்,  திருவோண நக்ஷத்திரக்கும் உள்ள தொடர்பை ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு அநுபவிக்கப் பெற்றோம் கடந்த வார கட்டுரையில்.   ஒரு நண்பர் கேட்ட கேள்வி,  ஓணம் என்பது கேரளத்துக்கு மட்டுமான பண்டிகையா அல்லது தமிழ் நாட்டிலும் கொண்டாடப்பட்ட பண்டிகையா என்ற கேள்விகளுக்கு , பதில் தேடும் விஷயமாக,  இந்த கட்டுரை அமைந்துள்ளது.   தமிழ்நாட்டில் இன்றும்  புரட்டாசி மாதம் திருவோணம் நக்ஷத்திரம்  ,  பல தரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன என்று பார்க்க முடிகிறது.  சித்திரையில் சித்திரை,  வைகாசி விசாகம், ஆவணி திருவோணம், கார்த்திகையில் கார்த்திகை, மார்கழி திருவாதிரை,தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என்று மாதமும் அதற்கான நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாள்கள்,   அந்த நாட்கள் எல்லாம் சனாதன தர்மத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.   கொண்டாடப்படும் நாள்களில் சிறிது

திருவோணத் திருநாள்

படம்
  " கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்மாயோன் மேய ஓண நல் நாள் " - மதுரை காஞ்சி தமிழர் சங்கநூலில் காணப்படும் ஒரு திருவிழா "ஓண நல் நாள்" , ஆனால் தமிழகம் முற்றும் மறந்து நம் அண்டை மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் திருவிழா.  ஆவணிமாதம் , கேரள சிங்க மாதத்தில்(ச்ரவண மாதம்) திருவோண நக்ஷத்திரம், கேரள தேசத்தில் “ஓணம்” என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொச்சி அருகாமையில் இருக்கும் “திருகாட்கரை” என்ற திவ்யதேசத்தில் நடைபெறும் முக்கியமான திருவிழா.  இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான்”திருகாட்கரை அப்பனுக்கு” பத்து நாட்கள் ஆவணி மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் தொடங்கி திருவோண நக்ஷத்திரத்து அன்று முடியும் திருநாள் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றன. நாளடைவில் இந்த திருவிழா கேரளா தேசம் முழுவதும் “ஓணம்” என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  திருகாட்கரை அப்பன் “ வாமனன்” என்றும், திருவிக்கிரமன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நாளில் மஹாபலி சக்கரவர்த்தி வருகை தந்து, தான் ஆண்ட தேசத்தையும் தேசமக்களையும் பார்வையிட்டு ஆசீர்வசிப்பதாக கருதப்படும் நாளாகவும் , தே