பூர்ணம் - 10
சித்தார்த்தன் ஆத்ம ஞானத்தைத் தேடிப் பல சம்பிரதாய நம்பிக்கைக்கு மாறி, அதனுடன் வாழ்ந்து அந்தக் கொள்கைகள் கூறியபடி ஆத்ம ஞானத்தைப் பெற முயற்சித்தான். ஆனால் இடையில் கமலாவைச் சந்தித்து , அவளுடைய அழகில் மோகம் ஏற்பட்டு அவள் சுகத்தை அனுபவிக்கும் செயலில் முழுமையாக ஆழ்ந்து விட்டான். அப்படி ஆழ்ந்திருக்கும் நேரத்தில் மீண்டும் ஞானம் பிறந்து ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான். அவன் கடைசியில் வசுதேவன் என்ற படகோட்டி யின் மூலமாக நதியிலிருந்து கர்மாவை தெரிந்து செய்து கொண்டிருக்கும் போது ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான். இது பாரத ஞான மரபில் ஒன்று. உலக ஞான மரபில் பாரதத்துக்கென்று ஒரு தனியிடம் எப்பொழுதுமே உண்டு. சித்தார்த்தன் ஜீவனுக்கே உண்டானக் கர்மத்தைச் செய்யாமல், இந்திரியங்களை அடக்கி ஞான யோகத்தின் மூலம் ஆத்ம ஞானத்தைப் பெற முயன்றான். கிருஷ்ணன் பகவத்கீதையில் கர்மயோகம் என்பது இயல்பாகவே தரையில் நடப்பது போல், ஆனால் ஞான யோகம் என்பது உச்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் நடப்பது போல, கவனம் தவறினால் மரணம் என்ற நிலை. கவனம் தவறியதால் ஆசை மிகுந்து கமலாவிடம் அடிமையாகி ,...