பூர்ணம்-15
            கீதையில் எவ்வளவோ நிறைய விஷயங்கள் இருக்க, ஒரு ஸ்லோகத்தை எடுத்துக்கொண்டு தானாகவே ஆராய்ந்து, சொல்லாத ஒன்றை கிருஷ்ணன் சொன்னதாகச் சொல்லி, பொய்ப் பிரச்சாரம் செய்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கிறது நமது நாட்டில் ஒரு கூட்டம். ஆனால் அந்நிய மண்ணில் கீதையின் பெருமையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினம், ஆனால் வேறுபாடுகளை எவ்வாறு அணுகுவது , வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமல், கீதையில் சொல்லியபடி எல்லா உயிர்களிடத்திலும் இருக்கும் ஆத்மா ஒரே தன்மை என்றும் , அதன் பிறப்பிடம் பிரம்மம் என்ற ஒரே இடத்திலிருந்து என்ற புரிதலுடன் அணுகும் போது சமூகம் உருவாக்கிய  வேறுபாடு கலைந்து  அன்புப் பெருக்குச் சமூகத்தில் ஏற்படும்.  அதற்காக மனதை அமைதியாக,  தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். ஆதலால் கிருஷ்ணன் கீதையில் 2 வது அத்தியாயத்தில் தொடங்கி ஆறாவது அத்தியாயத்திலும் தொடர்ந்து உபதேசிக்கிறான். ஸ்வாமி விவேகானந்தர்,  "The essential thing in religion is making the heart pure; the kingdom of heaven is within us...