பூர்ணம் - 16
யோகி என்பவன் யோகா என்ற மனதைச் சமநிலைப் படுத்தும் செயலைச் செய்பவன். இரட்டைகளை வென்று, சமமாகக் கையாளக் தெரிய வேண்டும் என்று பல முறைச் சொல்லி, ஒவ்வொரு ஜீவாத்மாவும் மிகவும் எளிதாகக் கலக்கத்திற்கு உள்ளாகும் போது மனதைக் கட்டுப்படுப்படுத்த வேண்டும் என்று கூறினான் கிருஷ்ணன். "ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா கூடஸ்த்தோ விஜிதேந்த்ரிய:| முக்தி இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந:||" 6-8 "ஸுஹ்ருந் மித்ரார்யுதாஸீந மத்யஸ்யத்வேஷ்ய பந்துஷு| ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர் விசிஷ்யதே||" 6-9 இந்த இரண்டு கீதை ஸ்லோகத்தினால் யோகம் செய்பவனின் அதாவது யோகியின் தகுதியைப் பற்றிச் சொல்லுகிறது. யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந: லோஷ்டாச்ம - கூழாங்கல் காஞ்சந - தங்கம் யோகி என்பவன் கூழாங்கல்லையும் தங்கத்தையும் சமமாகக் கருதுவான். அவனே (விஜிதேந்த்ரிய) புலன்களை வென்றவன். அப்படிப்பட்டவனுக்கு உறவினர்கள், நண்பர்கள், பாவப் புண்ணியங்கள் உடையவன், சத்ருக்கள் என்று எவரும் கிடையாது என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான். அப்படிப்பட்ட யோகி , தனிமையாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்ம த்யானத்தைச் செ...