பூர்ணம் - 18 (தத்வத்ரையம்)
"பூமி ராபோ அனலோ வாயு: கம் மனோ புத்திரேவ ச| அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதி:அஷ்டதா" (7-4) பூமி- நிலம் , மண், ஆபோ- நீர் , அனல- நெருப்பு, வாயு - காற்று, கம் - ஆகாசம், மனோ - மனம், புத்தி - புத்தி , அஹங்கார ச - அஹங்காரமும் , பின்னா - பின்னப்பட்டிருக்கிறது, அஷ்டதா - எட்டு விதமான பகவான் கிருஷ்ணன் கீதையில் உண்மை பொருட்கள் மூன்று உள்ளன, அதனை படிகட்டுகளாக அமைத்து விளக்குகிறான். மூன்று உண்மை பொருட்களில் படியில், அசேதனம் ஞானமில்லாத , அழியக்கூடிய வஸ்துக்கள் என்றும், அதற்கு மேல் ஞானமயமான, அழியாத ஜீவாத்மாக்கள் உயர்ந்தது என்றும் , அதற்கு மேல் அனைத்தையும் எங்கும் பரவியிருந்து தாங்கும் பிரம்மம் அதாவது பகவான் உயர்ந்தது என்றும் கீதையில் காட்டுகிறான். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என்னுடைய ப்ரகிருதி பின்னப்பட்டுள்ளது என்று கீதை 7-4 ல் கிருஷ்ணன் விளக்குகிறான். இந்த எட்டு விதப் பிரகிருத...