இடுகைகள்

ஈரம் - 2

படம்
"நெஞ்சில் ஈரம் இருந்தால் மானுடம் சிறக்கும்" என்று ஈரம் என்ற கட்டுரையை முடித்தோம். ஈரம் மண்ணில் இல்லை என்றும் தோன்றும் அளவுக்கு , ஈரம் இல்லாத மண் வறண்ட நிலமாக , நிலம் பிளவுண்டு, வெடிப்புடன் கோரமான முகத்துடன் நிலமகள் உள்ளாள் என்பதனை மண்ணில் வாழும் மைந்தர்கள் நிரூபித்து, அறம் இல்லை அன்பு இல்லை, பொய்யா மொழி புலவனின் வார்த்தை பொய் என்று நிரூபிக்கும் கலி காலம் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு, கலியே நடுங்கும் அளவுக்கு, காலத்தால் காரியம் நடந்து நிறைவேறியுள்ளது. "பொலிக பொலிக பொலிக!போயிற்று வல் உயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை கலியும் கெடும் கண்டுகொண்மின்"  கலியும் கெடும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை என்று நம்மாழ்வார் அருளிய வாக்கு பொய்யானது. நமன் உருவத்தில் நரகர்கள் வந்து நாலுலகம் வெட்கி தலை குனிய இருக்கும் செயலை , சுதந்திரமாகக் காற்றை உள்வாங்கும் வேலையில் சுதந்திரமாகக் காற்றை உள்ளிருந்து வாங்கியுள்ளார்கள்.  இந்த செயல் என்பது, என்ன காரணத்தினால் ஆனாலும், இது ஒரு அறங்கெட்ட செயல். இங்கே சிலர் மனிதனின் உளவியல

ஈரம்

படம்
அன்பின் வெளிப்பாடு என்பது விருந்தோம்பல், அதனை வள்ளுவ பெருந்தகை விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் வைத்துக் கூறும் போது,  "மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" விருந்தோம்பல் அன்பின் வெளிப்பாடு. அதற்கு மூன்று இன்றியமையாதது, அதாவது இன்முகம், இன்சொல், வழி நன்று ஆற்றல் ( விருந்து) என்று பரிமேலழகர் உரை காண்கிறார்.  தூரத்தில் வரும்போது இன்முகம் காட்டி, அருகாமையில் வந்த பிறகு இன்சொல் பேசி விருந்து செய்வது என்பது இங்கே பரிமேலழகரால் காட்டப்பட்டது.  இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் வள்ளுவ பெருந்தகை, அறம் என்பன யாது என்று கூறும் போது,  "முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்" இன்முகம் , இன்சொல் என்பது அறத்தின் பண்புகள். இந்த இரண்டையும் மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பொருளாகக் கொடுப்பது என்பது பொருள் வயத்தில் உள்ளது, அது சில சமயங்களில் இருக்கும் சில சமயங்களில் இருக்காது, ஆனால் இந்த இரண்டு பண்புகளும் உயிர் உள்ளவரை எப்பொழுதும் தன்வயத்தில் இருப்பதனால் இதன் சிறப்பு இந்தக் குறளில் கூறப்பட்டது. இன்முகம் காட்டுவதில் பெரிய அங்கம்

கோண்

படம்
கோண் என்பதற்குக் கோணுதல், வளைவு, மாறுபாடு, கொடுங்கோன்மை, கோணம், நுண்ணிய பகுதி, பாத்திரத்தின் மூக்கு‌ என்று பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளது.‌ அம்பறாத்தூணி புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த சொல்லைக் கம்பன் பயன்படுத்திய இடத்தைச் சொல்லி இது ஒரு விஞ்ஞான சொல்லாக இருப்பதை ஆச்சரியத்துடன் ஆசிரியர் நாஞ்சில் நாடன் அவர்கள் பதிவிடுகிறார். அது நமக்கும் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.  யுத்த காண்டம் இரணியன் வதைப் படலத்தில் ,  “‘சாணினும் உளன்; ஓர் தன்மை  அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்"  எம்பெருமான் எங்குளன் என்று இரணியன் கேட்க , பக்த பிரகலாதன் பதில் கூறும் பாடலாக அமைந்துள்ளது. நன்று என்று கனகன் (இரணியன்) சொன்னான் என்று பாடல் இறுதியில் உள்ளது.  சாணிலும் - சாண் என்ற அளவிலும் உளன். மாமேரு குன்றிலும் உளன். இங்குள்ள தூணிலும் உளன். நீ சொன்ன சொல்லினும் உளன் என்று கூறும் போது,  "ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்"  ஒன்றாக உள்

பிள்ளை

படம்
ஹிந்தி மொழியில் ஒரு படம் பார்த்தேன். பிறவியில் கண் தெரியாத குழந்தை , தந்தை மிகவும் வருத்தத்துடன் உயிருடன் புதைக்கச்செல்லத் தாய் தடுத்து நிற்க, அந்த குழந்தை சமுதாய பிரச்சினைக்கிடையில் வளர, கூர்மையான அறிவின் பயனால் எல்லாவற்றிலும் முதலாகத் தேர்ச்சி பெற, தேர்ச்சி பெற்றும் அவன் நினைத்த விஞ்ஞானத் துறையில் +2 படிக்கத் தடை. காரணம் பார்வையில்லை. நீதிமன்றம் மூலம் வாதிட்டு பார்வை இல்லாதவர்களும் விஞ்ஞானத் துறையில் படிக்கலாம் என்ற சூழ்நிலையை மாற்றி, +2 முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் அதே பார்வை இல்லாத காரணத்தினால் சேரத் தடை. அமெரிக்கா MIT கல்லூரியில் இடம் கிடைக்க, விமானத்தில் தனியாகச் செல்ல தடை. அந்த தடையையும் வெற்றி கொண்டு அங்குச் சென்று படித்து முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று வருகிறான்.  மீண்டும் இந்தியாவிற்கு வந்து பார்வை இல்லாத மனிதர்களை வைத்து , உதவாத பொருட்கள் என்ற குப்பைகளைக் கொண்டு ஒரு தொழிற்சாலை அமைத்து , அதை இந்தியாவில் முதன்மைத் தொழிற்சாலையாக மாற்றி வெற்றி சிகரத்தைத் தொடும் காட்சி. இதில் அவன் செய்த உபகாரம் என்பது மாற்றுத்திறனாளி என்று ஒதுக்கப்படும்

அன்பு அறத்தின் அடித்தளம்

படம்
தமிழ் மரபில் அறத்தின் சின்னமாக, தர்மத்தின் சின்னமாகச் செங்கோல், வெண்குடை பார்க்கப்படுகிறது . செங்கோல் , துலாக்கோல், கோல் என்று தமிழ் நூல்களில் காணப்படுகிறது.  "செங்கோலுடைய திருவரங்க செல்வனார்" என்று ஆண்டாள் பாடியுள்ளாள். இன்றும் திருவரங்கநாதன் செங்கோலுடன்தான் புறப்பாடு கண்டருளிகிறார்.   வள்ளுவ பெருந்தகை செங்கோன்மை என்ற அதிகாரத்தில்  "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழும் குடி"  குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்- குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். - பரிமேலழகர் உரை "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்    நின்றது மன்னவன் கோல்" அந்தணர்க்கு உரித்தாய வேகத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலை பெற்றது அரசனால் செலுத்தபடுகின்ற செங்கோல் - பரிமேலழகர் உரை. கொடுங்கோன்மை அதிகாரத்தில்,  "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்  மன்னாவாம் மன்னர்க் கொளி" மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள் தாம் நிலைபெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்ல

பரமசாமி ( வழக்கொழிந்த தமிழ்ச்சொல்)

படம்
அம்பறாத்தூணி என்ற வார்த்தை உபயோகம் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானதை உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் 18.03.2022 அன்று "கம்பன் நூல்களை வெளியிடுங்கள்" என்ற ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். அந்த காணொளியில் யானைக்குத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு, சில சொற்களையும் குறிப்பிட்டு, இதுவெல்லாம் உபயோகப்படுத்தவில்லையென்றால் அழிந்துவிடும், காலப்போக்கில் யானை என்ற ஒற்றைச் சொல் மட்டுமே தங்கும் என்றும், தமிழனுக்கு அந்த ஒரு சொல் மட்டுமே போதும் என்ற நிலையில் உள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  அப்பொழுது குழைக்காதர் பாமாலையிலிருந்து ஆசிரியர் நாராயண தீக்ஷிதர் குறிப்பிட்டிருந்த யானையின் மாற்றுச் சொல்லைப் பாடலுடன் குறிப்பிட்டிருந்தேன். கைம்மா, நால்வாய் என்று ஆழ்வார்கள் குறிப்பிட்டு இருந்ததையும் தெரிவித்து இருந்தேன். அவருக்குத் தெரியாது இல்லை, இருந்தாலும் நான் அறிந்தவற்றைப் பகிர்ந்து இருந்தேன்.  அதே போல் பரம் என்ற கட்டுரையில் பரமசாமி ( The Supreme Being) என்றால் கடவுள் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார் ஐயா நாஞ்சில் அவர்கள்.  அப்பொழுது அடி

கம்பனின் அம்பறாத்தூணி

படம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களை , அவரது கோயம்புத்தூர் இல்லத்தில் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்த கால அளவு (11/2 மணி ) என்பது மிகவும் குறைவு.  அந்த குறைந்த நேரத்தில் கம்பனின் சொல் என்பது தமிழுக்குக் கிடைத்த மாபெரும் கொடை. கம்பன் பிறந்தது என்பது தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை என்றால் மிகையாகாது. கம்பனின் நாவில் உருவாகிய சொற்கள் என்பது கடவுளின் பூரண அருளினால் மட்டுமே என்றும் பல செய்திகளைத் தந்த வண்ணம் இருந்தார்.  தமிழ்க்கடலை சந்தித்த ஒரு மகிழ்ச்சி எனது மனதில் ஓடியது. அடியேனது சமீபத்திய படைப்பான மூன்று புத்தகங்களை அவரது பார்வைக்குக் கொடுத்தேன். பிரியும் நேரத்தில் அவர் எழுதிய "அம்பறாத்தூணி" "சங்கிலிப்பூதத்தான்" என்ற இரண்டு புத்தகங்களை வழங்கினார்.  அதில் கம்பனின் அம்பறாத்தூணி என்ற புத்தகம் அடியேனை மிகவும் கவர்ந்தது.‌ கடல் வற்றினாலும் வற்றும் ஆனால் இராமனின் கணைப்புட்டிலிருந்து கணைகள் வற்றாது. அதுபோல் கம்பனின் அம்பறாத்தூணியில் சொற்கள் வற்றாது.  அம்பு + அறாத்+ தூணி என்று பெயர் வைத்தது என்பது மிகவும் அழகாகவும் அருமையாகவு

இராமானுஜ இதிகாசம் (நூல் மதிப்புரை)

படம்
திரு நாகஸ்வாமி  என்ற தொல்லியல் துறை வல்லுநர், இராமானுசரின் வாழ்க்கை சம்பவங்கள் என்பது புனைவு என்றும், பொய் என்றும் சொல்லி அவரது சைவ வெறியைக்  தீர்த்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதாவது இராமானுசரின் வாழ்க்கை பொய் என்று நிரூபித்து  விட்டால் வைணவத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அற்ப சந்தோஷத்தின் காரணமாக, வெறி உந்தப்பட்டு எழுதிய புத்தகம் “Ramanuja myth and Reality“.  அவர் எடுத்து வைத்த வாதங்களில் முக்கியமாக இரண்டு வாதங்கள் என்பது,  1. இராமானுஜர் சோழ தேசத்திலிருந்து  வெளியேறியது என்பது சோழ அரசனின் துன்புறுத்தல் அல்ல, அப்பொழுது ஆட்சி செய்த குலோத்துங்கன் சமய வெறுப்பு அற்றவன், மேலும் பல கைங்ஙர்யங்களைச்  செய்தவன் என்று கல்வெட்டு மூலம் நிரூபித்து , வைணவர்கள் புனைந்து சோழ அரசின் மீது பழியை வீசுகின்றனர் . ஆதலால் எந்தவொரு கொடுமையும் நடக்கவில்லை , நடக்காத ஒன்றை  பொய் பரப்புகின்றனர். 2. இராமானுஜர் மேலக்கோட்டை சென்று, அங்குள்ள உற்சவ மூர்த்தியை டில்லியிலிருந்து மீட்க வில்லை, ஏனென்றால் மேலக்கோட்டை  மற்றும் தென்னிந்தியா பகுதிகள் இராமானுஜ வாழ்ந்த காலத்தில் முஸ்லீம் படையெடுப்பால

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

படம்
ஆண்டாள் நாச்சியார் தனது இரண்டு பிரபந்தங்களிலும் இயற்கையை உணர்ந்து உள்வாங்கி ,  தான் அனுபவத்தில் கொண்டு ,  தனது கவிகளின் மூலம்  உணர்த்திய சிறந்த புலவர். இயற்கை அனுபவங்களைக் கொண்டு இயற்கையையும் படைத்த கண்ணன் பரமாத்மாவை அனுபவிக்க வந்த கவிகள் அவளது "  பிரபந்தங்கள்" என்றால் மிகையாகாது.‌ அவள் திருப்பாவையில் எழுதிய "  கீசு கீசு" என்று பறவைகளின் ஒலி சப்தங்களுடன்  பாடலைத் தொடங்கி , அதில் அந்த ஆனை சாத்தன் என்ற பறவையின் ஒலி சப்தம் இதுதான் என்று பாடலில் பாடியது என்பது, இயற்கையை எந்த அளவுக்கு உணர்ந்து பாடியிருப்பாள் என்று தமிழ் அறிஞர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஆண்டாளின் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு, இது எந்தப் பறவை , அந்த பறவையின் குணாதிசயங்கள் என்னவென்று இன்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்கள்.  இன்று அதிகாலை  புள்ளரையன் கோயில்  தெருவில் அடியேன் உணர்ந்தது, ஆண்டாள் அனுபவித்த "புள்ளும் சிலம்பினகாண்" என்ற பாடல் வரிகள்.  அதிகாலை பெரும்பாலும் எழுந்திருக்கும் பழக்கம் உடையவன் என்ற வகையில், காலை 3.30 மணியளவில் கு

அசுரர் அரக்கர் -7 (அவுணன்)

படம்
ஆழ்வார்கள் அவுணன் என்ற சொல்லை பெரும்பாலும் அசுரர்களைக் குறிக்கும் சொல்லாக உபயோகப்படுத்தியுள்ளார்கள்.‌ "கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால்"  "முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்"                      - பெரியாழ்வார்  "பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு  அரிய ஆதிப்பிரான்"                 - திருப்பாணாழ்வார்  "அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்"            - திருமங்கையாழ்வார் "அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே" "புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன"  "செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்"                             - நம்மாழ்வார்  மேற்கூறிய பாசுரங்களில் அவுணன் என்பது ஹிரண்யகசிபுவைக் குறிக்கும் வண்ணம் ஆழ்வார்கள் பாசுரங்களை அமைத்துள்ளார்கள்.  "அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்"  &q