இடுகைகள்

பூர்ணம் - 10

படம்
சித்தார்த்தன் ஆத்ம ஞானத்தைத் தேடிப் பல சம்பிரதாய நம்பிக்கைக்கு மாறி, அதனுடன் வாழ்ந்து அந்தக் கொள்கைகள் கூறியபடி ஆத்ம ஞானத்தைப் பெற முயற்சித்தான். ஆனால் இடையில் கமலாவைச் சந்தித்து , அவளுடைய அழகில் மோகம் ஏற்பட்டு அவள் சுகத்தை அனுபவிக்கும் செயலில் முழுமையாக ஆழ்ந்து விட்டான். அப்படி ஆழ்ந்திருக்கும் நேரத்தில் மீண்டும் ஞானம் பிறந்து ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான்.  அவன் கடைசியில் வசுதேவன் என்ற படகோட்டி யின் மூலமாக நதியிலிருந்து கர்மாவை தெரிந்து செய்து கொண்டிருக்கும் போது ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான். இது பாரத ஞான மரபில் ஒன்று.  உலக ஞான மரபில் பாரதத்துக்கென்று ஒரு தனியிடம் எப்பொழுதுமே உண்டு. சித்தார்த்தன் ஜீவனுக்கே உண்டானக் கர்மத்தைச் செய்யாமல், இந்திரியங்களை அடக்கி ஞான யோகத்தின் மூலம் ஆத்ம ஞானத்தைப் பெற முயன்றான்.  கிருஷ்ணன் பகவத்கீதையில் கர்மயோகம் என்பது இயல்பாகவே தரையில் நடப்பது போல், ஆனால் ஞான யோகம் என்பது உச்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் நடப்பது போல, கவனம் தவறினால் மரணம் என்ற நிலை.  கவனம் தவறியதால் ஆசை மிகுந்து  கமலாவிடம் அடிமையாகி ,...

பூர்ணம் - 9

படம்
தொடர் ஓட்ட நிலையில் நின்று நிகழ்கால வாழ்க்கையை உணர்ந்து செயல்படும்போது ஏற்படும் ஆனந்தம் என்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதுதான் உண்மை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நொடியிலும் அனுபவிக்க வேண்டிய உணர்வு. அதை அனுபவிப்பதும் இழப்பதும் என்பது நம் கையில்தான் இருக்கிறது.  இதனைக் கூறும்போது எனது மனதில் செல்வது " சித்தார்த்தன்" என்ற புத்தகம்.  இதை எழுதியவர் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த ஹெர்மேன் ஹெசி. அவருக்கு இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட ஞானம் என்பது பாரத மண் கொடுத்த கொடை. ஞானப் பூமியில் கர்ம பூமியில் வாழ்ந்த அனுபவம் என்பது அவருக்கு இந்தப் புத்தகத்தை எழுத ஊக்கம் அளித்துள்ளது என்பது உண்மை.  இந்தப் புத்தகத்தில் வரும் கதாநாயகன் சித்தார்த்தன் அவனது அப்பாவிடம் , அவனது உற்ற நண்பன் கோவிந்தனுடன் வேதங்களைக் கற்று, அதன் மூலம் ஓம் என்ற பிரணவ மந்திர உச்சரிப்பின் முலம் தியானமிருந்து ஆத்ம ஞானத் தேடலைக் காண முயல்கிறான்.  ஆத்ம ஞானத் தேடல் என்பது அவனுடைய இலக்காக இருக்க , பிரணவ மந்திர தியானத்தின் மூலம் ஆத்ம ஞானம் கிடைத்தாலும் மன நிறைவு இல்லை.  அப்பொழுது முற்றும் துறந்த சமணத் துறவ...

பூர்ணம் - 8

படம்
இந்த தொடருக்குப் பூர்ணம் என்று தலைப்பு கொடுத்த காரணம் என்பது , அன்றாட வாழ்க்கையில் மனநிறைவு , மனமகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருடைய இலட்சியமாக இருக்கும். அப்படி வாழ்ந்தால் அவர்கள் முழுமையாக வாழ்ந்து அனுபவத்தைப் பெற்றவர்கள் என்ற நிலையை உணர்கிறார்கள். அந்த முழுமைக்குப் பூர்ணம் என்று அர்த்தம் கொண்டு இந்த தொடர் எழுத ஆரம்பித்தேன் என்ற தன்னிலை விளக்கத்தை அளித்துக் கொண்டு இந்த தொடரைப் பார்ப்போம்.  முழுமை மற்றும் மன நிறைவு என்பது ஒவ்வொருவரிடமும் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ளது. அதைத் தீர்மானிப்பது என்பது அவர்களுடைய கையில் உள்ளது.  கூட்டுக் குடும்பம் மற்றும் சமூகமாக வாழ்வது என்பது பல பண்புகளைப் பெருக்கி அழுத்தத்தைக் குறைத்து மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று பார்த்தோம். இங்கே சகிப்புத் தன்மை என்பது முதன்மையாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு விட்டுக் கொடுத்து அணுகினால் மனநிறைவு என்பது சாத்தியம் கூட்டுக் குடும்பத்தில்.‌ வாழ்வின் நோக்கம் அறிந்து செயல்படும்போது, செய்யும் காரியத்தில் விருப்பம் ஏற்பட்டு, ஒரு தொடர்ச்சியான செயல் ஏற்படுகிறது. அதன் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதனையும...

பூர்ணம் - 7

படம்
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவனுக்கு ஒப்பீடு முறையில் முழுமை அடைவதற்கான இலக்கை  எல்லையறிந்து கொடுக்கவேண்டும் என்பதும் ஒரு பாடமாக அமைகிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை ஆனால் ஐந்தும் தேவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவை உள்ளது, ஒரு பயன்பாடு உள்ளது. அதன் மூலம் நாம் பயன்படுகிறோம். அனைத்து குழந்தைகளிடம் ஒரு தனித்திறமை இருக்கும். அதில் கவனம் செலுத்தி முன்னேற்ற வேண்டும். அனைவரும் சமுதாயத்திற்கு தேவை.‌ மேலும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க , மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டும். பிரபஞ்சத்தில் குழந்தைகள் சுதந்திரமாகக் காற்றைப் போல் திரிந்து வரவேண்டும். அதிலும் சில ஒழுக்கங்களைக் கையாளும் போது, இந்த பிரபஞ்சம் குழந்தைகளுக்கு நிறைய அனுபவங்களைப் பாடமாகக் கற்றுக் கொடுக்கும்.   தன்னம்பிக்கை ஒருவனுக்கு அனுபவத்தின் மூலம் அதிகமாக உருவாகும். சுவாமி விவேகானந்தர் " படிப்பு, பயிற்சி என்பது மனிதனை மனிதனாக உருவாக்க உதவ வேண்டும் என்று கூறுவார். The ideal of all education, all training should be in man making , said Swamy Vivekananda. பிரபஞ்சத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்ட...

பூர்ணம் - 6

படம்
இக்கிகை" என்ற புத்தகம் உலகில் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் ஜப்பானின் ஒக்கி நாவா மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் புத்தகம். இது மாதிரி உலகில் ஐந்து இடங்களில் மக்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அந்த பகுதிகள் அனைத்திற்கும் "ப்ளு ஜோன்" என்று குறிப்பிடுகின்றார்கள்.  அதில் முதல் இடத்தில் வகிப்பது ஜப்பானின் ஒக்கி நாவா. இத்தாலியின் சார்டினியா, அமெரிக்கா கலிபோர்னியாவின் லோமா லிண்டா, காஸ்டாவின் தி நிக்கோயா ஃபேனின்சுலா, கீரிஸின் இக்கரியா.  இந்த ஐந்து இடங்களிலும் மக்கள் அழுத்தம் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பொதுவாகக் காணப்படும் அம்சங்கள் என்பது நான்கு. 1. உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள். சைவ உணவு மற்றும் மீன் வகைகள்  2. உடற்பயிற்சி. நடை மற்றும் தோட்ட வேலைகள்  3. வாழ்வதற்கான காரணம் அறிந்து அதற்காக வாழ்தல்.  4. சமுதாய அமைப்பு மற்றும் சமூக தொடர்பு ஏற்படுத்தல்.  வாழ்வதற்கான காரணத்தை அறிந்துகொண்டு வாழும்போது மற்ற மூன்றும் அதனுடன் சேர்ந்து அமையப் பெறும். ஒவ்வொரு மனிதனும் ஒரு செயலை செய்து முடிப்பதற்காக மனிதப்பிறவி...

கல் மண்டபம் நாவல்

படம்
சாதி தட்டில் உயர்ந்த சாதி என்று மக்கள் கருதும் சமூகத்திலும் ஒரு பிரிவினரின் வாழ்க்கை சொந்த சாதியினராலும் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு , தீண்டத்தகாத நிலையிலும் , வறுமை ஏழ்மை பசி எல்லையில் இருப்பதையும் அழகாகச் சித்தரிக்கும் நாவல். அருமையான படைப்பு. இவர்களை மேட்டுக்குடி தலித் என்று எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.  புத்தகத்தை எடுத்தது தெரியும் முடிக்கும் வரை ஒரு தொய்வு இல்லாமல் சலிப்பு இல்லாமல் கதை நகர்வை உணர்ந்தேன். புத்தகம் முழுவதும் உணர்வின் பிணைப்பில் நகர்கிறது.‌ பிணத்தைத் தூக்குவதற்குச் சொந்தங்கள் இல்லை என்ற அவலம், அந்த வேலைகளைத் தனது வறுமையின் காரணமாக வயிற்றை நிரப்புவதற்கு அந்த சாதியிலிருந்து ஒரு மனிதன் வருகிறான். அதைச் சிறுவயதில் பார்த்தபொழுது மனம் பதைத்து அந்த உணர்வைப் புரிந்து அவர்கள் மேற்கொண்ட கஷ்டங்களையும் இன்னல்களையும் காவியமாக கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர் வழக்கறிஞர் சுமதி.‌ ராமானுஜம் என்ற ராமன்ஜி ஶ்ரீரங்கத்தில் வைதீகத்தில் ஆரம்பித்து, சென்னையில் பார்த்தசாரதி அய்யங்காருடன் ஏற்பட்ட தர்க்கத்தில் வைராக்கியமாகத் தர்ப்பையைக் கீழிறக்கி வைத்து , அக...

பூர்ணம் - 5

படம்
கூடி வாழும் தன்மை என்பது இயற்கையின் நீதி.‌ பெரியாழ்வார் “கூடிய கூட்டமாகக் கொண்டு குடி வாழுங்கள் " என்றும், அவரது திருமகள் ஆண்டாள்  “கூடியிருந்து குளிர்ந்து"என்றும், தமிழ் மூதாட்டி ஔவையார் “ஊருடன் கூடி வாழ்" என்றும், கூடிவாழ்வதைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்கள்.  மனிதன் பிறந்த  தொடக்கம் இறப்பு வரைக்கும் ஒருவரை சார்ந்துதான் வாழ்கிறான்.  சார்பு வாழ்க்கை முறை என்பது மனிதனுக்கு இயற்கையின் நீதி.  நாம் அணியும் சட்டை என்பது , பருத்தியிலிருந்து தையல் செய்த சட்டையாக வருவதற்கு பல ஊழியர்களின் உழைப்பும், வியர்வையும் நேரமும் அதில் உள்ளது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை என்ன என்பது புலப்படும். உணவுப் பொருட்கள் நம் தட்டில் உணவாக வருவதற்கு பல புண்யவான்களின் உழைப்பு பின்னால் இருக்கிறது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை புலப்படும்.  சார்பு நிலையை ஒத்துக்கொள்ளாதவர்கள் எழுப்பும்  கேள்வி என்பது,  1. அவர்களும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.  2. என்னிடம் பணம் இருந்தது, அதனால் பொருட்களை வாங்கினேன். வேலை செய்வதற்குப் பணம் கொடுத்தாலும்,  மக்கள் அதற்...

பிரயாக்ராஜ் யாத்திரை -3 (அயோத்தியா, நைமிசாரணியம்)

படம்
             வீணை சதுக்கம்                          (அயோத்தியா) வாரணாசி மீண்டும், இந்த தடவை ரயில் நிலையம் பக்கத்தில் தங்கும் அறை எடுத்தேன். அனைத்து சுமைகளையும் தங்கும் அறையில் வைத்துவிட்டு, நீராடி நடக்க ஆரம்பித்தேன். கோயில் வரை நடந்து சென்று அன்னபூரணி , விசாலாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டுப் புறப்படலாம் என்று நினைக்கும்போது, ஏன் ஒரு முறை ஈஸ்வரனையும் தரிசிக்கலாம் என்று தோன்றியது. இரண்டாவது முறை வெகு விரைவில் தரிசனம் கிடைத்தது. அது அவனது அருளே என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அன்னபூரணி அம்மனை தரிசித்து, அன்னபூரணி கோயிலில் இரவு சிற்றுண்டி முடிந்துவிட்டதால், மீண்டும் நடை தங்கும் இடத்தை நோக்கி விரைந்தது.  வரிசையில் செல்லும் பகுதி மறுநாள் காலை எழுந்து அயோத்தியா செல்லும் ரயிலைப் பிடிக்கச் சென்றேன்.‌ ஆனால் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பாடு என்பது அவ்வளவு சரியாக இல்லை. மக்கள் நெருக்கடியில் ஒரு வழியாக ரயிலில் ஏறி அயோத்தியா மூன்று மணி நேரத் தாமதத்துடன் வந்தேன். ரயில் ந...

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)

படம்
வாரணாசியிலிருந்து 20 கி.மீ தொலைவில் சென்று நான்கு சக்கர வாகனத்தில் ஏறி திரிவேணி சங்கமம் நோக்கி பயணம் தொடங்கியது. பிரதான சாலைகள் அங்கங்கே மூடப்பட்ட காரணத்தினால், கிராமம் கிராமமாகப் புகுந்து பிரயாக்ராஜ் வந்தது வாகனம். அதற்கு மேல் வாகனம் செல்ல முடியவில்லை. திரிவேணி சங்கமம் செக்டார் 7 செல்வதற்கு இன்னும் 14 கி.மீ. இருக்கிறது என்று சொன்னார்கள். சாலை முழுவதும் மக்கள். மக்கள் சுமைகளைத் தூக்கிக் கொண்டும், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டும் , தோளில் தூக்கிக் கொண்டும் மக்கள் ஊர்ந்து செல்வதைக்  கவனித்தேன். ஒரு குறையும் கூறாமல் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.  மக்கள்  கயிற்றைப் பிடித்துக் கொண்டு , இரண்டு கயிற்றுக்கு இடையில் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக் கொண்டு நகர்வது என்பது மக்கள் அவர்களால் அவர்களுக்கு அமைத்துக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளைவு.  மற்றொரு அமைப்பு என்பது ஒரு கயிற்றின் இரண்டு பக்கங்களிலும் பிடித்துக்கொண்டு நகரும் கூட்டம், அதுவும் மக்கள் அவர்களால் அவர்களுக்கு அமைத்துக் கொள்ளும் ஒரு பாதுகாப...