இடுகைகள்

பூர்ணம் -22 (சரணாகதி)

படம்
                            எட்டெழுத்து மந்திரம் என்பது " ஓம் நமோ நாராயணய". பூர்ணமடைய அறிய வேண்டிய மந்திரம் இந்த எட்டெழுத்து மந்திரம் என்பது வைஷ்ணவ நம்பிக்கை. கிருஷ்ணன் பகவத்கீதை 10.35 யில், "மாஸாநாம் மார்கசீர்ஷோஹம்" மார்கழி மாதம் என்பது மாதத்தில் எட்டாவது மாதம். கிருஷ்ணனுக்குப் பிடித்த மாதம். அவன் பிறந்தது ( எட்டாம் நாள்) அஷ்டமி திதியில் எட்டாவது குழந்தையாகப் பிறந்து பகவத்கீதை என்ற உயர்ந்த ஞானத்தை உலகுக்கு வழங்கி "எட்டெழுத்து மந்திரமாக" ஏற்றம் கண்டான். முமுஷூப் படியில் அஷ்டாக்ஷர மந்திரத்தின் பெருமையை மிகவும் விஸ்தாரமாக விளக்குகிறார் பிள்ளைலோகாச்சாரியார். பாவ புண்ணியங்களைப் போக்கவல்ல மந்திரம் இந்த எட்டெழுத்து.முமுஷூக்கு ( முக்தியை விரும்புவர்)  அறிய வேண்டிய மந்திரம் மூன்று. அதில் பிரதான மந்திரம் "திருமந்திரம்". திருமந்திரம் என்பது "ஓம் நமோ நாராயணய"  பாவபுண்ணியங்கள் என்ற இரு வினைகளையும் ஒழித்து , இறைவன் அடிப் பற்றுபவர் பிறவா நிலையை அடைகிறார்கள் என்று கிருஷ்ணன் கீதையில் கூறியதைப் பார்த்தோம். வள...

பூர்ணம் - 21 ( அர்த்த பஞ்சகம்)

படம்
தத்வத்ரயம் என்று மூன்று உண்மைப் பொருட்களை முதலில் தெரிவித்து, சரீர ஆத்ம பாவம் முறையில் இறைவனுக்கும் சேதன அசேதனத்துக்கும் சம்மந்தத்தை விளக்கி, சரீரத்திற்கு ஒன்று என்றால் அதனை ஆத்மா தாங்குவதுபோல், இறைவனுக்குச் சரீரமாக இருக்கும் சேதனத்துக்கு அதாவது ஜீவாத்மாக்களுக்கு ஒன்று என்றால் பரமாத்மா என்ற இறைவனே தாங்குகிறான் என்று காட்டப்பட்டது. பாவபுண்யங்களை அதாவது நல்லது கெட்டது என்ற எல்லாக் கணக்குகளையும் பூஜ்யமாக்கி , பிறவி சுழலிருந்து விடுதலைப் பெறலாம் என்ற கீதையின் ஸ்லோகத்தையும் பார்த்தோம். பாவ புண்யங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் ஐம்புலனடக்கம், மனவலிமை, இரட்டை நிலைகளைச் சமமாகக் கருதுதல், கர்மம் செய்வதைக் கடமையாகக் கொண்டு பலனை எதிர்பாராமல் இருக்கும் நிலைமை என்றவை மிகவும் அவசியம் என்பதனை கீதையில் உரைத்ததை மனதில் நிறுத்த வேண்டும்.‌ நரகம் சொர்க்கம் என்பதே பாவ புண்ணியங்கள் பலனுக்கான இடங்கள் என்றும் காட்டப்பட்டது. அதையும் தாண்டி இறைவன் திருவடியில் பிறவா நிலையை அடைவது என்பது ஶ்ரீமந் நாராயணன் இருக்குமிடத்தைப் பரமபதம்  என்றும், சிவன் இருக்குமிடத்தைக் கைலாயம் என்று சனாதன தர்ம...

பூர்ணம் - 20 ( சமநிலை புத்தி)

படம்
பாரதீய சமயங்கள் அனைத்தும் கர்ம வினைகளை நம்புகிறது. பிறவியற்ற சூழ்நிலையை உருவாக்குவதே ஒரு ஜீவாத்மாவின் பரிபூர்ணம் என்பதும் நம்பிக்கை. கர்ம வினைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பாரதீய நம்பிக்கை. அதிலிருந்து வெளியேற ஒரு வழி இறைவன் திருவடி என்பதும் பாரதீய சமயக் கருத்து. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்                                 - திருக்குறள்  இதனைத்தான் வள்ளுவப் பெருமகனார் அவர்களும் தமிழ் மரபில் காண்பித்துள்ளார். தமிழ் மரபு என்பது பாரதீய மரபை உள்வாங்கி நிற்கும் என்பதற்கு வள்ளுவ பெருந்தகையின் வாக்குகள் நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.  பிரம்மம் பிரளய காலத்தில் சேதனங்கள் அசேதனங்களைத் தன்னுள் சரீரமாகக் கொண்டு ஒரு சக்தியாக இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். சிருஷ்டி காலத்தில் இந்தப் பிரக்ருதியை உருவாக்கி பஞ்ச பூதங்களை உருவாக்கி, ஜீவாத்மாக்களைப் பிரக்ருதியுடன் சம்மந்தத்தை உருவாக்கி படைக்கிறான். அதாவது சங்கல்பத்தினால் அவனது சரீரத்திலிருந்து வெள...

பூர்ணம் -19 ( சரீர ஆத்ம பாவம்)

படம்
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத்: | உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ் தத்வ தர்சிபி:||. 2-16 அஸத் - இல்லாததற்கு, பாவ - இருப்பு , ந வித்யதே - இல்லை , கிடையாது, ஸத் - இருப்பதற்கும், அப் பாவ - இல்லாமை , வித்யதே - உண்டு , தத்வதர்சிபி- தத்துவத்தை அறிந்தவர்கள், அனயோ உபயோ- இவ்விரண்டின், அந்தஸ் - முடிவு , த்ருஷ்டோ- காணப்படுகிறது. இல்லாத பொருள்களுக்கு இருத்தல் என்பதில்லை ; இருக்கும் பொருள்களுக்கு இல்லாமை என்பதில்லை; இவ்விரண்டுமே ஞானிகளின் முடிவான கருத்தாகும். இதில் அஸத் மற்றும் ஸத் என்ற இரண்டு பொருள்களை வைத்து விசாரிக்கிறார்கள் தத்வ தரிசிகள்.‌ வேதாந்த கருத்துகளுக்குத் தத்துவ அர்த்தமாக உரை எழுதிய தத்துவத் தரிசிகள் மூவரும் பாரதத்தில் தெற்கே தோன்றினார்கள். மூவரும் மூன்று நூல்களைக் கொண்டு தங்களது தத்துவங்களை நிறுவினார்கள். உபநிஷத்துக்கள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் என்ற மூன்று வேதாந்த கருத்து நூலுக்கு உரை எழுதினார்கள். பகவத் ஆதிசங்கரர் அத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் மத்வாச்சாரியார் துவைதம் என்ற தத்துவத்தையும் அவர்களது...

பூர்ணம் - 18 (தத்வத்ரையம்)

படம்
"பூமி ராபோ அனலோ வாயு: கம் மனோ புத்திரேவ ச| அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதி:அஷ்டதா"                                           (7-4) பூமி- நிலம் , மண், ஆபோ- நீர் , அனல- நெருப்பு, வாயு - காற்று, கம் - ஆகாசம், மனோ - மனம், புத்தி - புத்தி , அஹங்கார ச - அஹங்காரமும் , பின்னா - பின்னப்பட்டிருக்கிறது, அஷ்டதா - எட்டு விதமான பகவான் கிருஷ்ணன் கீதையில் உண்மை பொருட்கள் மூன்று உள்ளன, அதனை படிகட்டுகளாக அமைத்து விளக்குகிறான்.  மூன்று உண்மை பொருட்களில் படியில், அசேதனம் ஞானமில்லாத , அழியக்கூடிய வஸ்துக்கள் என்றும், அதற்கு மேல் ஞானமயமான, அழியாத ஜீவாத்மாக்கள் உயர்ந்தது என்றும் , அதற்கு மேல் அனைத்தையும் எங்கும் பரவியிருந்து தாங்கும் பிரம்மம் அதாவது பகவான் உயர்ந்தது என்றும் கீதையில் காட்டுகிறான்.  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என்னுடைய ப்ரகிருதி பின்னப்பட்டுள்ளது என்று கீதை 7-4 ல் கிருஷ்ணன் விளக்குகிறான். இந்த எட்டு விதப் பிரகிருத...

பூர்ணம் - 17

படம்
"யதா தீபோ நிவாதஸ்த்தோ நேங்கதே ஸோப மா ஸ்ம்ருதா| யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:||" 6-19 தீபோ- விளக்கு , நிவாதஸ்த்தோ- காற்றில்லாத இடம், நேங்கதே- அசையாமல் யதசித்தஸ்ய- மனதைக் கட்டுப்படுத்தினவன் யுஞ்ஜதோ- தொடர்ந்து விடாமல் யோகம்- த்யானம் காற்றில்லாத இடத்தில் ஒரு விளக்கின் தழல், எப்படி ஆடாமல் அசையாமல் நின்று ஒளிருமோ, அதைப்போல மற்ற விஷயங்களினால் மனம் கலக்காமல் அசையாமல் ஆத்ம சிந்தனத்தில் நின்று பிரகாசிப்பவன் சிறந்த ஆத்ம யோகியாகிறான் என்று விளக்குகிறான். தியானத்தின் போது, கண்களைப் பாதி மூடியும் பாதித் திறந்தும் வைத்த நிலையில் மூக்கு நுனியைப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வது என்பது முதலில் கடினம், தொடர்ந்து பயிற்சி செய்து பழகும்போது எளிதாக மாறும். கூர்மையான கவனத்திறனை அதாவது குவியல் திறனை (Focus) அதிகரிக்கும். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் கவனம் (Focus) சிதறாமல் ஒருநிலைப் படுத்தியிருக்கும் அதாவது ஒரு நிலையில் குவியப்படுத்திருக்கும். இது ஒரு மாபெரும் சக்தியை உள்ளுக்குள் உருவாக்கி மாபெரும் சாதனையாக உருவாக்க உதவியாக இருக்கும். இதனைப் பெரு நிறுவனங்கள் "குவியல்...

பூர்ணம் - 16

படம்
யோகி என்பவன் யோகா என்ற மனதைச் சமநிலைப் படுத்தும் செயலைச் செய்பவன். இரட்டைகளை வென்று, சமமாகக் கையாளக் தெரிய வேண்டும் என்று பல முறைச் சொல்லி, ஒவ்வொரு ஜீவாத்மாவும் மிகவும் எளிதாகக் கலக்கத்திற்கு உள்ளாகும் போது மனதைக் கட்டுப்படுப்படுத்த வேண்டும் என்று கூறினான் கிருஷ்ணன். "ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா கூடஸ்த்தோ விஜிதேந்த்ரிய:| முக்தி இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந:||" 6-8 "ஸுஹ்ருந் மித்ரார்யுதாஸீந மத்யஸ்யத்வேஷ்ய பந்துஷு| ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர் விசிஷ்யதே||" 6-9 இந்த இரண்டு கீதை ஸ்லோகத்தினால் யோகம் செய்பவனின் அதாவது யோகியின் தகுதியைப் பற்றிச் சொல்லுகிறது. யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந: லோஷ்டாச்ம - கூழாங்கல் காஞ்சந - தங்கம் யோகி என்பவன் கூழாங்கல்லையும் தங்கத்தையும் சமமாகக் கருதுவான். அவனே (விஜிதேந்த்ரிய) புலன்களை வென்றவன். அப்படிப்பட்டவனுக்கு உறவினர்கள், நண்பர்கள், பாவப் புண்ணியங்கள் உடையவன், சத்ருக்கள் என்று எவரும் கிடையாது என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான். அப்படிப்பட்ட யோகி , தனிமையாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்ம த்யானத்தைச் செ...

பூர்ணம்-15

படம்
கீதையில் எவ்வளவோ நிறைய விஷயங்கள் இருக்க, ஒரு ஸ்லோகத்தை எடுத்துக்கொண்டு தானாகவே ஆராய்ந்து, சொல்லாத ஒன்றை கிருஷ்ணன் சொன்னதாகச் சொல்லி, பொய்ப் பிரச்சாரம் செய்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கிறது நமது நாட்டில் ஒரு கூட்டம். ஆனால் அந்நிய மண்ணில் கீதையின் பெருமையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினம், ஆனால் வேறுபாடுகளை எவ்வாறு அணுகுவது , வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமல், கீதையில் சொல்லியபடி எல்லா உயிர்களிடத்திலும் இருக்கும் ஆத்மா ஒரே தன்மை என்றும் , அதன் பிறப்பிடம் பிரம்மம் என்ற ஒரே இடத்திலிருந்து என்ற புரிதலுடன் அணுகும் போது சமூகம் உருவாக்கிய  வேறுபாடு கலைந்து  அன்புப் பெருக்குச் சமூகத்தில் ஏற்படும்.  அதற்காக மனதை அமைதியாக,  தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.‌ ஆதலால் கிருஷ்ணன் கீதையில் 2 வது அத்தியாயத்தில் தொடங்கி ஆறாவது அத்தியாயத்திலும் தொடர்ந்து உபதேசிக்கிறான். ஸ்வாமி விவேகானந்தர்,  "The essential thing in religion is making the heart pure; the kingdom of heaven is within us...

பூர்ணம் -14

படம்
"வித்யாவிநயஸம்பந்தே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி| சுநி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சிந:||"  5-18 படித்தவன் படிக்காதவன் மேலானவன் கீழானவன் உருவத்தில் சிறிய பசு, உருவத்தில் பெரிய யானை, சைவம் அசைவம் சாப்பிடும் மனிதர்களிடத்திலும் உள்ள ஜீவாத்மாக்கள் எல்லாம் ஒருபடிப்பட்டிருப்பதனால், உண்மையான ஆத்ம ஞானம் பெற்ற பண்டிதர் அவைகளைச் சமமாகப் பார்ப்பார் என்று பண்டினுக்கான இலக்கணத்தை கீதையில் கிருஷ்ணன் விளக்குகிறான்.   புலன்களை அடக்கி மனதை வென்றவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்மயாதாத்ம்ய ஞானத்துடன் இருக்க வேண்டும் என்று கூறிய பகவான், ஞான யோகத்தைத் தனியாகச் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் உரைத்தான். மனதை அடக்க நல்ல பண்டிதன் மூலம் பயிற்சி செய்யவேண்டும் என்பதனை விளக்குவதோடு இல்லாமல், நல்ல பண்டிதனுக்கான இலக்கணத்தையும் கூறுகிறான். இதையும் ஞாபகத்தில் அடிக்கடி வைத்துக் கொள்ள வேண்டும். கர்ம யோகம் ஞான யோகம் இரண்டுமே ஒரே பலனைக் கொடுப்பதனால், இயல்பாகத் தரையில் நடப்பதைப் போன்ற கர்ம யோகத்தைச் செய்யும் படி உரைத்த கிருஷ்ணன், அவ்வப்போது மனதை அடக்குவதற்கு மூச்சுப் பயிற்சி செய்யும்படியும் பகவான் கீதையில்...

பூர்ணம் - 13

படம்
மனத்தை அடக்கி விருப்பு வெறுப்பு இல்லாமல் பலனை எதிர்பார்க்காமல் ஒருவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்ம யதாத்ம்ய ஞானத்துடன் இருப்பவனுக்குப் பிறவியற்றத் தன்மை கிடைக்கும். ஜீவனுக்குப் பூர்ணம் ஏற்படும். "ஸாங்க்யயோகௌ ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:| ஏ கமப்யாஸ்த்தித: ஸம்யக் உபயோர் விந்ததே பலம்||" (5-4) ஞான யோகத்தினால்தான் ஆத்ம தரிசனம் பெறமுடியும். கர்ம யோகத்தினால் பெறமுடியாது , இவை இரண்டும் வெவ்வேறு என்று அறிவில்லாதவர்கள் ( ந பண்டிதா) கூறுவார்கள். அறிவில் சிறந்தவர்கள் ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் ஒரே பயனான ஆத்ம தரிசனத்தைத் தரும் என்று அறிவார்கள் என்று மேலே உள்ள கீதை ஸ்லோகம் பண்டிதன் யார் என்பதனை விளக்குகிறது.  "யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத் யோகைரபி கம்யதே| ஏகம் ஸாங்க்யஞ்ச யோகஞ்ச ய: பச்யதி ஸ பச்யதி||" ( 5-5) ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் தனித்தனியே ஒரே பலனைத் தருவதால் அவ்விரண்டும் ஒன்றுதான் என்று அறிபவனே பண்டிதன் என்று பண்டிதனுக்கு இலக்கணம் கூறுகிறான் கிருஷ்ணன் கீதையில். கர்ம யோகம் செய்பவன் மனத் தூய்மைப் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறான். ...