இடுகைகள்

பூர்ணம்-15

படம்
கீதையில் எவ்வளவோ நிறைய விஷயங்கள் இருக்க, ஒரு ஸ்லோகத்தை எடுத்துக்கொண்டு தானாகவே ஆராய்ந்து, சொல்லாத ஒன்றை கிருஷ்ணன் சொன்னதாகச் சொல்லி, பொய்ப் பிரச்சாரம் செய்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கிறது நமது நாட்டில் ஒரு கூட்டம். ஆனால் அந்நிய மண்ணில் கீதையின் பெருமையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினம், ஆனால் வேறுபாடுகளை எவ்வாறு அணுகுவது , வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமல், கீதையில் சொல்லியபடி எல்லா உயிர்களிடத்திலும் இருக்கும் ஆத்மா ஒரே தன்மை என்றும் , அதன் பிறப்பிடம் பிரம்மம் என்ற ஒரே இடத்திலிருந்து என்ற புரிதலுடன் அணுகும் போது சமூகம் உருவாக்கிய  வேறுபாடு கலைந்து  அன்புப் பெருக்குச் சமூகத்தில் ஏற்படும்.  அதற்காக மனதை அமைதியாக,  தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.‌ ஆதலால் கிருஷ்ணன் கீதையில் 2 வது அத்தியாயத்தில் தொடங்கி ஆறாவது அத்தியாயத்திலும் தொடர்ந்து உபதேசிக்கிறான். ஸ்வாமி விவேகானந்தர்,  "The essential thing in religion is making the heart pure; the kingdom of heaven is within us...

பூர்ணம் -14

படம்
"வித்யாவிநயஸம்பந்தே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி| சுநி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சிந:||"  5-18 படித்தவன் படிக்காதவன் மேலானவன் கீழானவன் உருவத்தில் சிறிய பசு, உருவத்தில் பெரிய யானை, சைவம் அசைவம் சாப்பிடும் மனிதர்களிடத்திலும் உள்ள ஜீவாத்மாக்கள் எல்லாம் ஒருபடிப்பட்டிருப்பதனால், உண்மையான ஆத்ம ஞானம் பெற்ற பண்டிதர் அவைகளைச் சமமாகப் பார்ப்பார் என்று பண்டினுக்கான இலக்கணத்தை கீதையில் கிருஷ்ணன் விளக்குகிறான்.   புலன்களை அடக்கி மனதை வென்றவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்மயாதாத்ம்ய ஞானத்துடன் இருக்க வேண்டும் என்று கூறிய பகவான், ஞான யோகத்தைத் தனியாகச் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் உரைத்தான். மனதை அடக்க நல்ல பண்டிதன் மூலம் பயிற்சி செய்யவேண்டும் என்பதனை விளக்குவதோடு இல்லாமல், நல்ல பண்டிதனுக்கான இலக்கணத்தையும் கூறுகிறான். இதையும் ஞாபகத்தில் அடிக்கடி வைத்துக் கொள்ள வேண்டும். கர்ம யோகம் ஞான யோகம் இரண்டுமே ஒரே பலனைக் கொடுப்பதனால், இயல்பாகத் தரையில் நடப்பதைப் போன்ற கர்ம யோகத்தைச் செய்யும் படி உரைத்த கிருஷ்ணன், அவ்வப்போது மனதை அடக்குவதற்கு மூச்சுப் பயிற்சி செய்யும்படியும் பகவான் கீதையில்...

பூர்ணம் - 13

படம்
மனத்தை அடக்கி விருப்பு வெறுப்பு இல்லாமல் பலனை எதிர்பார்க்காமல் ஒருவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்ம யதாத்ம்ய ஞானத்துடன் இருப்பவனுக்குப் பிறவியற்றத் தன்மை கிடைக்கும். ஜீவனுக்குப் பூர்ணம் ஏற்படும். "ஸாங்க்யயோகௌ ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:| ஏ கமப்யாஸ்த்தித: ஸம்யக் உபயோர் விந்ததே பலம்||" (5-4) ஞான யோகத்தினால்தான் ஆத்ம தரிசனம் பெறமுடியும். கர்ம யோகத்தினால் பெறமுடியாது , இவை இரண்டும் வெவ்வேறு என்று அறிவில்லாதவர்கள் ( ந பண்டிதா) கூறுவார்கள். அறிவில் சிறந்தவர்கள் ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் ஒரே பயனான ஆத்ம தரிசனத்தைத் தரும் என்று அறிவார்கள் என்று மேலே உள்ள கீதை ஸ்லோகம் பண்டிதன் யார் என்பதனை விளக்குகிறது.  "யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத் யோகைரபி கம்யதே| ஏகம் ஸாங்க்யஞ்ச யோகஞ்ச ய: பச்யதி ஸ பச்யதி||" ( 5-5) ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் தனித்தனியே ஒரே பலனைத் தருவதால் அவ்விரண்டும் ஒன்றுதான் என்று அறிபவனே பண்டிதன் என்று பண்டிதனுக்கு இலக்கணம் கூறுகிறான் கிருஷ்ணன் கீதையில். கர்ம யோகம் செய்பவன் மனத் தூய்மைப் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறான். ...

பூர்ணம் - 12

படம்
பத்துக் குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்தும் ஒருவனுக்கு, குதிரைகளைச் சரியான பாதையில் செலுத்துவதற்குக் கடிவாளம் என்ற ஒரு கயிறு தேவைப்படுகிறது. அந்தக் கயிற்றின் மூலம் 10 குதிரைகளையும் அடக்கித் தான் செல்ல வேண்டிய பாதையில் செலுத்தி, சேர வேண்டிய இடத்துக்கு ரதத்தை ஓட்டுபவன் செல்கிறான். 10 குதிரைகள் என்பது பத்து இந்திரியங்கள், கடிவாளம் என்பது மனம் , ரதம் என்பது உடல் , ரதத்தைச் செலுத்துபவன் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவும். சிறுவயதில் எனக்கு ஒர் அனுபவம் உண்டு. எங்கள் வீட்டில் மாட்டு வண்டி ஒன்று இருந்தது. அதில் மாடுகளைப் பூட்டி மூன்று மைல் தொலைவில் இருக்கும் கிராமத்துப் பள்ளிக்குச் செல்வது என்பது எனது தாத்தாவின் அன்றாடப் பழக்கம். சில சமயங்களில் மாட்டை ஓட்டுபவன் தூங்கினாலும் அல்லது மூக்காணங்கயிற்றை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டாலும் மாடுகள் தானகவே அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும். இந்த அனுபவம் என்பது நிறைய அன்பர்களுக்கு இருந்திருக்கும். இங்கு மூக்காணங்கயிறு என்பது மனம். பழக்கப்பட்ட மாடுகள் என்றால் மட்டுமே எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லும். புத...

பூர்ணம் - 11

படம்
தனக்கு உரித்தானக் கடமையைச் செய்வதில் தயங்கி , குழம்பிக் கொண்டிருக்கும் அர்ஜூனனுக்குக் கடமையை நிறைவேற்றும் படி உற்சாகப் படுத்தும் சொற்கள் கிருஷ்ணனின் கீதை என்ற அமுத மொழிகள். பல உபநிஷத்துகளைக் காமதேனு பசுவாக நிறுத்தி கீதை என்னும் பாலைக் கறந்து அர்ஜூனன் என்ற கன்று மூலம் ஜீவாத்மாக்களுக்கு வழங்குகிறான் பால் கறக்கும் இடையனாகக் கிருஷ்ணன். கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்காமல் இச்சையற்றுச் செய்யவும் என்று கீதையில் உரைக்கிறான் கிருஷ்ணன். இதில் சிலருக்குச் சந்தேகம் என்பது, இச்சையில்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் ஏதாவது ஒரு செயலைச் செய்யமுடியுமா? அல்லது அதற்கு மனம்தான் சம்மதிக்குமா? . இந்த மனோநிலை என்பது முக்காலத்திலும் உலகம் முழுவதும் பொதுவாக இருக்கக்கூடிய சூழ்நிலை. இங்குதான் மனம் புத்தி என்பது மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இந்த ஆசை, எதிர்பார்ப்பு என்பது உலகில் நிலவும் நல்லவற்றுக்கும் கெடுதலுக்கும் உந்து சக்தியாக இருக்கின்றன. இச்சை அல்லது ஆசை என்பது அளவுக்கு மீறிச் செல்லும்போது தனிமனிதச் சரிவுக்கும், தனிமனித அழிவுக்கும், சமுதாய அழிவுக்கும், ஏன் ...

பூர்ணம் - 10

படம்
சித்தார்த்தன் ஆத்ம ஞானத்தைத் தேடிப் பல சம்பிரதாய நம்பிக்கைக்கு மாறி, அதனுடன் வாழ்ந்து அந்தக் கொள்கைகள் கூறியபடி ஆத்ம ஞானத்தைப் பெற முயற்சித்தான். ஆனால் இடையில் கமலாவைச் சந்தித்து , அவளுடைய அழகில் மோகம் ஏற்பட்டு அவள் சுகத்தை அனுபவிக்கும் செயலில் முழுமையாக ஆழ்ந்து விட்டான். அப்படி ஆழ்ந்திருக்கும் நேரத்தில் மீண்டும் ஞானம் பிறந்து ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான்.  அவன் கடைசியில் வசுதேவன் என்ற படகோட்டி யின் மூலமாக நதியிலிருந்து கர்மாவை தெரிந்து செய்து கொண்டிருக்கும் போது ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான். இது பாரத ஞான மரபில் ஒன்று.  உலக ஞான மரபில் பாரதத்துக்கென்று ஒரு தனியிடம் எப்பொழுதுமே உண்டு. சித்தார்த்தன் ஜீவனுக்கே உண்டானக் கர்மத்தைச் செய்யாமல், இந்திரியங்களை அடக்கி ஞான யோகத்தின் மூலம் ஆத்ம ஞானத்தைப் பெற முயன்றான்.  கிருஷ்ணன் பகவத்கீதையில் கர்மயோகம் என்பது இயல்பாகவே தரையில் நடப்பது போல், ஆனால் ஞான யோகம் என்பது உச்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் நடப்பது போல, கவனம் தவறினால் மரணம் என்ற நிலை.  கவனம் தவறியதால் ஆசை மிகுந்து  கமலாவிடம் அடிமையாகி ,...

பூர்ணம் - 9

படம்
தொடர் ஓட்ட நிலையில் நின்று நிகழ்கால வாழ்க்கையை உணர்ந்து செயல்படும்போது ஏற்படும் ஆனந்தம் என்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதுதான் உண்மை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நொடியிலும் அனுபவிக்க வேண்டிய உணர்வு. அதை அனுபவிப்பதும் இழப்பதும் என்பது நம் கையில்தான் இருக்கிறது.  இதனைக் கூறும்போது எனது மனதில் செல்வது " சித்தார்த்தன்" என்ற புத்தகம்.  இதை எழுதியவர் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த ஹெர்மேன் ஹெசி. அவருக்கு இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட ஞானம் என்பது பாரத மண் கொடுத்த கொடை. ஞானப் பூமியில் கர்ம பூமியில் வாழ்ந்த அனுபவம் என்பது அவருக்கு இந்தப் புத்தகத்தை எழுத ஊக்கம் அளித்துள்ளது என்பது உண்மை.  இந்தப் புத்தகத்தில் வரும் கதாநாயகன் சித்தார்த்தன் அவனது அப்பாவிடம் , அவனது உற்ற நண்பன் கோவிந்தனுடன் வேதங்களைக் கற்று, அதன் மூலம் ஓம் என்ற பிரணவ மந்திர உச்சரிப்பின் முலம் தியானமிருந்து ஆத்ம ஞானத் தேடலைக் காண முயல்கிறான்.  ஆத்ம ஞானத் தேடல் என்பது அவனுடைய இலக்காக இருக்க , பிரணவ மந்திர தியானத்தின் மூலம் ஆத்ம ஞானம் கிடைத்தாலும் மன நிறைவு இல்லை.  அப்பொழுது முற்றும் துறந்த சமணத் துறவ...

பூர்ணம் - 8

படம்
இந்த தொடருக்குப் பூர்ணம் என்று தலைப்பு கொடுத்த காரணம் என்பது , அன்றாட வாழ்க்கையில் மனநிறைவு , மனமகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருடைய இலட்சியமாக இருக்கும். அப்படி வாழ்ந்தால் அவர்கள் முழுமையாக வாழ்ந்து அனுபவத்தைப் பெற்றவர்கள் என்ற நிலையை உணர்கிறார்கள். அந்த முழுமைக்குப் பூர்ணம் என்று அர்த்தம் கொண்டு இந்த தொடர் எழுத ஆரம்பித்தேன் என்ற தன்னிலை விளக்கத்தை அளித்துக் கொண்டு இந்த தொடரைப் பார்ப்போம்.  முழுமை மற்றும் மன நிறைவு என்பது ஒவ்வொருவரிடமும் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ளது. அதைத் தீர்மானிப்பது என்பது அவர்களுடைய கையில் உள்ளது.  கூட்டுக் குடும்பம் மற்றும் சமூகமாக வாழ்வது என்பது பல பண்புகளைப் பெருக்கி அழுத்தத்தைக் குறைத்து மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று பார்த்தோம். இங்கே சகிப்புத் தன்மை என்பது முதன்மையாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு விட்டுக் கொடுத்து அணுகினால் மனநிறைவு என்பது சாத்தியம் கூட்டுக் குடும்பத்தில்.‌ வாழ்வின் நோக்கம் அறிந்து செயல்படும்போது, செய்யும் காரியத்தில் விருப்பம் ஏற்பட்டு, ஒரு தொடர்ச்சியான செயல் ஏற்படுகிறது. அதன் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதனையும...

பூர்ணம் - 7

படம்
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவனுக்கு ஒப்பீடு முறையில் முழுமை அடைவதற்கான இலக்கை  எல்லையறிந்து கொடுக்கவேண்டும் என்பதும் ஒரு பாடமாக அமைகிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை ஆனால் ஐந்தும் தேவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவை உள்ளது, ஒரு பயன்பாடு உள்ளது. அதன் மூலம் நாம் பயன்படுகிறோம். அனைத்து குழந்தைகளிடம் ஒரு தனித்திறமை இருக்கும். அதில் கவனம் செலுத்தி முன்னேற்ற வேண்டும். அனைவரும் சமுதாயத்திற்கு தேவை.‌ மேலும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க , மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டும். பிரபஞ்சத்தில் குழந்தைகள் சுதந்திரமாகக் காற்றைப் போல் திரிந்து வரவேண்டும். அதிலும் சில ஒழுக்கங்களைக் கையாளும் போது, இந்த பிரபஞ்சம் குழந்தைகளுக்கு நிறைய அனுபவங்களைப் பாடமாகக் கற்றுக் கொடுக்கும்.   தன்னம்பிக்கை ஒருவனுக்கு அனுபவத்தின் மூலம் அதிகமாக உருவாகும். சுவாமி விவேகானந்தர் " படிப்பு, பயிற்சி என்பது மனிதனை மனிதனாக உருவாக்க உதவ வேண்டும் என்று கூறுவார். The ideal of all education, all training should be in man making , said Swamy Vivekananda. பிரபஞ்சத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்ட...

பூர்ணம் - 6

படம்
இக்கிகை" என்ற புத்தகம் உலகில் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் ஜப்பானின் ஒக்கி நாவா மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் புத்தகம். இது மாதிரி உலகில் ஐந்து இடங்களில் மக்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அந்த பகுதிகள் அனைத்திற்கும் "ப்ளு ஜோன்" என்று குறிப்பிடுகின்றார்கள்.  அதில் முதல் இடத்தில் வகிப்பது ஜப்பானின் ஒக்கி நாவா. இத்தாலியின் சார்டினியா, அமெரிக்கா கலிபோர்னியாவின் லோமா லிண்டா, காஸ்டாவின் தி நிக்கோயா ஃபேனின்சுலா, கீரிஸின் இக்கரியா.  இந்த ஐந்து இடங்களிலும் மக்கள் அழுத்தம் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பொதுவாகக் காணப்படும் அம்சங்கள் என்பது நான்கு. 1. உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள். சைவ உணவு மற்றும் மீன் வகைகள்  2. உடற்பயிற்சி. நடை மற்றும் தோட்ட வேலைகள்  3. வாழ்வதற்கான காரணம் அறிந்து அதற்காக வாழ்தல்.  4. சமுதாய அமைப்பு மற்றும் சமூக தொடர்பு ஏற்படுத்தல்.  வாழ்வதற்கான காரணத்தை அறிந்துகொண்டு வாழும்போது மற்ற மூன்றும் அதனுடன் சேர்ந்து அமையப் பெறும். ஒவ்வொரு மனிதனும் ஒரு செயலை செய்து முடிப்பதற்காக மனிதப்பிறவி...