இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் - 16

படம்
யோகி என்பவன் யோகா என்ற மனதைச் சமநிலைப் படுத்தும் செயலைச் செய்பவன். இரட்டைகளை வென்று, சமமாகக் கையாளக் தெரிய வேண்டும் என்று பல முறைச் சொல்லி, ஒவ்வொரு ஜீவாத்மாவும் மிகவும் எளிதாகக் கலக்கத்திற்கு உள்ளாகும் போது மனதைக் கட்டுப்படுப்படுத்த வேண்டும் என்று கூறினான் கிருஷ்ணன். "ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா கூடஸ்த்தோ விஜிதேந்த்ரிய:| முக்தி இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந:||" 6-8 "ஸுஹ்ருந் மித்ரார்யுதாஸீந மத்யஸ்யத்வேஷ்ய பந்துஷு| ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர் விசிஷ்யதே||" 6-9 இந்த இரண்டு கீதை ஸ்லோகத்தினால் யோகம் செய்பவனின் அதாவது யோகியின் தகுதியைப் பற்றிச் சொல்லுகிறது. யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந: லோஷ்டாச்ம - கூழாங்கல் காஞ்சந - தங்கம் யோகி என்பவன் கூழாங்கல்லையும் தங்கத்தையும் சமமாகக் கருதுவான். அவனே (விஜிதேந்த்ரிய) புலன்களை வென்றவன். அப்படிப்பட்டவனுக்கு உறவினர்கள், நண்பர்கள், பாவப் புண்ணியங்கள் உடையவன், சத்ருக்கள் என்று எவரும் கிடையாது என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான். அப்படிப்பட்ட யோகி , தனிமையாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்ம த்யானத்தைச் செ...

பூர்ணம்-15

படம்
கீதையில் எவ்வளவோ நிறைய விஷயங்கள் இருக்க, ஒரு ஸ்லோகத்தை எடுத்துக்கொண்டு தானாகவே ஆராய்ந்து, சொல்லாத ஒன்றை கிருஷ்ணன் சொன்னதாகச் சொல்லி, பொய்ப் பிரச்சாரம் செய்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கிறது நமது நாட்டில் ஒரு கூட்டம். ஆனால் அந்நிய மண்ணில் கீதையின் பெருமையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினம், ஆனால் வேறுபாடுகளை எவ்வாறு அணுகுவது , வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமல், கீதையில் சொல்லியபடி எல்லா உயிர்களிடத்திலும் இருக்கும் ஆத்மா ஒரே தன்மை என்றும் , அதன் பிறப்பிடம் பிரம்மம் என்ற ஒரே இடத்திலிருந்து என்ற புரிதலுடன் அணுகும் போது சமூகம் உருவாக்கிய  வேறுபாடு கலைந்து  அன்புப் பெருக்குச் சமூகத்தில் ஏற்படும்.  அதற்காக மனதை அமைதியாக,  தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.‌ ஆதலால் கிருஷ்ணன் கீதையில் 2 வது அத்தியாயத்தில் தொடங்கி ஆறாவது அத்தியாயத்திலும் தொடர்ந்து உபதேசிக்கிறான். ஸ்வாமி விவேகானந்தர்,  "The essential thing in religion is making the heart pure; the kingdom of heaven is within us...

பூர்ணம் -14

படம்
"வித்யாவிநயஸம்பந்தே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி| சுநி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சிந:||"  5-18 படித்தவன் படிக்காதவன் மேலானவன் கீழானவன் உருவத்தில் சிறிய பசு, உருவத்தில் பெரிய யானை, சைவம் அசைவம் சாப்பிடும் மனிதர்களிடத்திலும் உள்ள ஜீவாத்மாக்கள் எல்லாம் ஒருபடிப்பட்டிருப்பதனால், உண்மையான ஆத்ம ஞானம் பெற்ற பண்டிதர் அவைகளைச் சமமாகப் பார்ப்பார் என்று பண்டினுக்கான இலக்கணத்தை கீதையில் கிருஷ்ணன் விளக்குகிறான்.   புலன்களை அடக்கி மனதை வென்றவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்மயாதாத்ம்ய ஞானத்துடன் இருக்க வேண்டும் என்று கூறிய பகவான், ஞான யோகத்தைத் தனியாகச் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் உரைத்தான். மனதை அடக்க நல்ல பண்டிதன் மூலம் பயிற்சி செய்யவேண்டும் என்பதனை விளக்குவதோடு இல்லாமல், நல்ல பண்டிதனுக்கான இலக்கணத்தையும் கூறுகிறான். இதையும் ஞாபகத்தில் அடிக்கடி வைத்துக் கொள்ள வேண்டும். கர்ம யோகம் ஞான யோகம் இரண்டுமே ஒரே பலனைக் கொடுப்பதனால், இயல்பாகத் தரையில் நடப்பதைப் போன்ற கர்ம யோகத்தைச் செய்யும் படி உரைத்த கிருஷ்ணன், அவ்வப்போது மனதை அடக்குவதற்கு மூச்சுப் பயிற்சி செய்யும்படியும் பகவான் கீதையில்...

பூர்ணம் - 13

படம்
மனத்தை அடக்கி விருப்பு வெறுப்பு இல்லாமல் பலனை எதிர்பார்க்காமல் ஒருவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்ம யதாத்ம்ய ஞானத்துடன் இருப்பவனுக்குப் பிறவியற்றத் தன்மை கிடைக்கும். ஜீவனுக்குப் பூர்ணம் ஏற்படும். "ஸாங்க்யயோகௌ ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:| ஏ கமப்யாஸ்த்தித: ஸம்யக் உபயோர் விந்ததே பலம்||" (5-4) ஞான யோகத்தினால்தான் ஆத்ம தரிசனம் பெறமுடியும். கர்ம யோகத்தினால் பெறமுடியாது , இவை இரண்டும் வெவ்வேறு என்று அறிவில்லாதவர்கள் ( ந பண்டிதா) கூறுவார்கள். அறிவில் சிறந்தவர்கள் ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் ஒரே பயனான ஆத்ம தரிசனத்தைத் தரும் என்று அறிவார்கள் என்று மேலே உள்ள கீதை ஸ்லோகம் பண்டிதன் யார் என்பதனை விளக்குகிறது.  "யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத் யோகைரபி கம்யதே| ஏகம் ஸாங்க்யஞ்ச யோகஞ்ச ய: பச்யதி ஸ பச்யதி||" ( 5-5) ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் தனித்தனியே ஒரே பலனைத் தருவதால் அவ்விரண்டும் ஒன்றுதான் என்று அறிபவனே பண்டிதன் என்று பண்டிதனுக்கு இலக்கணம் கூறுகிறான் கிருஷ்ணன் கீதையில். கர்ம யோகம் செய்பவன் மனத் தூய்மைப் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறான். ...

பூர்ணம் - 12

படம்
பத்துக் குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்தும் ஒருவனுக்கு, குதிரைகளைச் சரியான பாதையில் செலுத்துவதற்குக் கடிவாளம் என்ற ஒரு கயிறு தேவைப்படுகிறது. அந்தக் கயிற்றின் மூலம் 10 குதிரைகளையும் அடக்கித் தான் செல்ல வேண்டிய பாதையில் செலுத்தி, சேர வேண்டிய இடத்துக்கு ரதத்தை ஓட்டுபவன் செல்கிறான். 10 குதிரைகள் என்பது பத்து இந்திரியங்கள், கடிவாளம் என்பது மனம் , ரதம் என்பது உடல் , ரதத்தைச் செலுத்துபவன் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவும். சிறுவயதில் எனக்கு ஒர் அனுபவம் உண்டு. எங்கள் வீட்டில் மாட்டு வண்டி ஒன்று இருந்தது. அதில் மாடுகளைப் பூட்டி மூன்று மைல் தொலைவில் இருக்கும் கிராமத்துப் பள்ளிக்குச் செல்வது என்பது எனது தாத்தாவின் அன்றாடப் பழக்கம். சில சமயங்களில் மாட்டை ஓட்டுபவன் தூங்கினாலும் அல்லது மூக்காணங்கயிற்றை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டாலும் மாடுகள் தானகவே அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும். இந்த அனுபவம் என்பது நிறைய அன்பர்களுக்கு இருந்திருக்கும். இங்கு மூக்காணங்கயிறு என்பது மனம். பழக்கப்பட்ட மாடுகள் என்றால் மட்டுமே எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லும். புத...