இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோண்

படம்
கோண் என்பதற்குக் கோணுதல், வளைவு, மாறுபாடு, கொடுங்கோன்மை, கோணம், நுண்ணிய பகுதி, பாத்திரத்தின் மூக்கு‌ என்று பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளது.‌ அம்பறாத்தூணி புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த சொல்லைக் கம்பன் பயன்படுத்திய இடத்தைச் சொல்லி இது ஒரு விஞ்ஞான சொல்லாக இருப்பதை ஆச்சரியத்துடன் ஆசிரியர் நாஞ்சில் நாடன் அவர்கள் பதிவிடுகிறார். அது நமக்கும் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.  யுத்த காண்டம் இரணியன் வதைப் படலத்தில் ,  “‘சாணினும் உளன்; ஓர் தன்மை  அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்"  எம்பெருமான் எங்குளன் என்று இரணியன் கேட்க , பக்த பிரகலாதன் பதில் கூறும் பாடலாக அமைந்துள்ளது. நன்று என்று கனகன் (இரணியன்) சொன்னான் என்று பாடல் இறுதியில் உள்ளது.  சாணிலும் - சாண் என்ற அளவிலும் உளன். மாமேரு குன்றிலும் உளன். இங்குள்ள தூணிலும் உளன். நீ சொன்ன சொல்லினும் உளன் என்று கூறும் போது,  "ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்"  ஒன்றாக உள்

பிள்ளை

படம்
ஹிந்தி மொழியில் ஒரு படம் பார்த்தேன். பிறவியில் கண் தெரியாத குழந்தை , தந்தை மிகவும் வருத்தத்துடன் உயிருடன் புதைக்கச்செல்லத் தாய் தடுத்து நிற்க, அந்த குழந்தை சமுதாய பிரச்சினைக்கிடையில் வளர, கூர்மையான அறிவின் பயனால் எல்லாவற்றிலும் முதலாகத் தேர்ச்சி பெற, தேர்ச்சி பெற்றும் அவன் நினைத்த விஞ்ஞானத் துறையில் +2 படிக்கத் தடை. காரணம் பார்வையில்லை. நீதிமன்றம் மூலம் வாதிட்டு பார்வை இல்லாதவர்களும் விஞ்ஞானத் துறையில் படிக்கலாம் என்ற சூழ்நிலையை மாற்றி, +2 முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் அதே பார்வை இல்லாத காரணத்தினால் சேரத் தடை. அமெரிக்கா MIT கல்லூரியில் இடம் கிடைக்க, விமானத்தில் தனியாகச் செல்ல தடை. அந்த தடையையும் வெற்றி கொண்டு அங்குச் சென்று படித்து முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று வருகிறான்.  மீண்டும் இந்தியாவிற்கு வந்து பார்வை இல்லாத மனிதர்களை வைத்து , உதவாத பொருட்கள் என்ற குப்பைகளைக் கொண்டு ஒரு தொழிற்சாலை அமைத்து , அதை இந்தியாவில் முதன்மைத் தொழிற்சாலையாக மாற்றி வெற்றி சிகரத்தைத் தொடும் காட்சி. இதில் அவன் செய்த உபகாரம் என்பது மாற்றுத்திறனாளி என்று ஒதுக்கப்படும்

அன்பு அறத்தின் அடித்தளம்

படம்
தமிழ் மரபில் அறத்தின் சின்னமாக, தர்மத்தின் சின்னமாகச் செங்கோல், வெண்குடை பார்க்கப்படுகிறது . செங்கோல் , துலாக்கோல், கோல் என்று தமிழ் நூல்களில் காணப்படுகிறது.  "செங்கோலுடைய திருவரங்க செல்வனார்" என்று ஆண்டாள் பாடியுள்ளாள். இன்றும் திருவரங்கநாதன் செங்கோலுடன்தான் புறப்பாடு கண்டருளிகிறார்.   வள்ளுவ பெருந்தகை செங்கோன்மை என்ற அதிகாரத்தில்  "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழும் குடி"  குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்- குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். - பரிமேலழகர் உரை "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்    நின்றது மன்னவன் கோல்" அந்தணர்க்கு உரித்தாய வேகத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலை பெற்றது அரசனால் செலுத்தபடுகின்ற செங்கோல் - பரிமேலழகர் உரை. கொடுங்கோன்மை அதிகாரத்தில்,  "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்  மன்னாவாம் மன்னர்க் கொளி" மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள் தாம் நிலைபெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்ல