இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் காப்பியங்கள் போற்றும் சிறை இருந்தவள் ஏற்றம்

படம்
  இராமாயணத்தில் சீதையை இராமன் தீக்குளிக்கச் செய்து துன்புறுத்தினான். மேலும் கற்பகாலத்தில் அவளை மீண்டும் வனவாசம் அனுப்பித் துன்புறுத்தினான் என்ற குற்றச்சாற்றை இராமன் மேல் சுமத்தி , இராமன் ஒரு தீயவன் என்று தமிழகத்தில் சுற்றிவிடப்படுகிறது. பெண்ணை அடிமையாக நடத்தினான் என்ற குற்றச் சாற்றையும், இராமாயணம் தீயநூல் என்ற புரளியையும் அள்ளி வீசுகிறது. இதற்கு மாறாகப் பெண் பெருமை பேசிய மணிமேகலை சிலப்பதிகாரம் குண்டலகேசி நூல்கள் சிறந்தவை என்ற வாதம் போலித் தமிழர்களால் வைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட ஐம்பெருங்காப்பிய நூல்கள் சிறந்தவை , அவை போற்றப்படக் கூடிய நூல்கள் என்பதில் ஒரு சிறுதுளி சந்தேகமும் இருக்கமுடியாது. அங்கே பெண்ணின் பெருமை பேசப்படுகிறது என்பதும் உண்மைதான்.  இராமாயணம் சிறை இருந்தவள் ஏற்றம் என்று சீதையின் ஏற்றத்தை கூற வந்த நூல் என்றே தமிழகம் கொண்டாடுகிறது. பிள்ளைலோகாசாரியார் தனது ஶ்ரீவசனபூஷணம் என்ற நூலில் விளக்கமாக அருளிச் செய்துள்ளார். இராமாயணம் சீதாதேவி என்ற பெண்ணின் ஏற்றத்தை ,சேதன ரூபத்தில் சொல்லவந்த நூல்.  "இதிஹாச ஸ்ரேஷ்டமான ஶ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது , மகாப

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி

படம்
இராமானுஜர் கண்ட புரட்சி என்ற தலைப்பைக் கண்டவுடன் ,இராமானுஜர் காலத்திற்கு முன் சாதி பேதம் வைணவத்திலிருந்ததா என்று வினவினார் நண்பர் ஒருவர். அப்படி இல்லையென்றால் ஏன் இராமானுஜர் கண்ட புரட்சி என்று தலைப்பைக் கொடுத்தீர்கள் என்று வினவினார்.  இராமானுஜர் காலத்திற்கு முன் விசிஷ்டாத்வைதம் இருந்ததா? இல்லையா?. இருந்தது. அப்படி ஆனால் இராமானுஜர் இந்த தத்துவத்தை ஸ்தாபித்தார் என்று ஏன் கூறுகிறோம். கண்ணன் எம்பெருமானுக்கு இரண்டு தாய்களைப் போலவே , விசிஷ்டாத்வைதம் தத்துவத்திற்கு இரண்டு தாய்கள். "ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" என்று கண்ணன் எம்பெருமானைப் பெற்ற தாய் தேவகி , வளர்த்த தாய் யசோதை. வளர்த்த யசோதை தாயின் மகனாகவே கண்ணன் உலகோருக்கு அறியப்பட்டார்.  அதேபோல் விசிஷ்டாத்வைதம் தத்துவத்தை ஈன்ற முதல் தாய் சடகோபன் இருக்க , வளர்த்த இதத் தாய் இராமானுஜரே ஸ்தாபித்தார் என்று ஏற்றம் கண்டார். இராமானுஜர் ஆழ்வார்கள் பாசுரங்களைக் கொண்டு, அத்வைதம் என்ற தத்துவத்திலிருந்து மாறுதலாக விசிஷ்ட அத்வைதம் என்ற தத்துவத்தை நிலை நாட்டினார். ஆழ்வார் பாசுரங்களே இதற்கான காரணம்.  ஆளவந்தார் இயற்ற

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி ( விளாஞ்சோலைப்பிள்ளை)

படம்
                                                       ஶ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை                                                             (ஐப்பசி உத்திராட்டாதி) கண்ணன் எம்பெருமான் கீதையில் வர்ணாசிரம தருமத்தைப் போதிக்கிறார். அதைக் கடைப்பிடிக்கும் படி கீதையில் சொல்லியுள்ளார். ஆதலால் கீதையையும் , அது சார்ந்து நிற்கும் சனாதன தர்மத்தையும் சங்கறுக்க வேண்டும் என்றும், அதை வேரோடு அறுத்துச் சாய்க்க வேண்டும் என்றும் குறிப்பாகத் தமிழகத்தில் நிறையச் சப்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் கீதையையும் , சனாதன தர்ம நெறிமுறைகளையும் தீவிரமாக கடைப்பிடித்து வந்த சமயப்பெரியவர்கள் வரலாற்றை உற்று நோக்கினால் உண்மைப் புலப்படும். ஆழ்வார் ஆசாரியார் பிறப்புகளில் சாதிப் பார்ப்பது என்பது மிகவும் அபசாரம். அவர்களை அதைக்கொண்டு நோக்குவது என்பதும் மிகவும் தவறு. அதைச் செய்யக்கூடாது. ஆனால் இன்றைய சூழலில் மக்களுக்கு உண்மையைப் புரியவைப்பதற்கு அவர்களின் பிறப்பைப் பற்றிக் கூறவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு , இந்த கட்டுரையை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் ஆழ்வார் ஆசாரியார் திருவடித் தாமரைகள