இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் - 9

படம்
தொடர் ஓட்ட நிலையில் நின்று நிகழ்கால வாழ்க்கையை உணர்ந்து செயல்படும்போது ஏற்படும் ஆனந்தம் என்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதுதான் உண்மை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நொடியிலும் அனுபவிக்க வேண்டிய உணர்வு. அதை அனுபவிப்பதும் இழப்பதும் என்பது நம் கையில்தான் இருக்கிறது.  இதனைக் கூறும்போது எனது மனதில் செல்வது " சித்தார்த்தன்" என்ற புத்தகம்.  இதை எழுதியவர் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த ஹெர்மேன் ஹெசி. அவருக்கு இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட ஞானம் என்பது பாரத மண் கொடுத்த கொடை. ஞானப் பூமியில் கர்ம பூமியில் வாழ்ந்த அனுபவம் என்பது அவருக்கு இந்தப் புத்தகத்தை எழுத ஊக்கம் அளித்துள்ளது என்பது உண்மை.  இந்தப் புத்தகத்தில் வரும் கதாநாயகன் சித்தார்த்தன் அவனது அப்பாவிடம் , அவனது உற்ற நண்பன் கோவிந்தனுடன் வேதங்களைக் கற்று, அதன் மூலம் ஓம் என்ற பிரணவ மந்திர உச்சரிப்பின் முலம் தியானமிருந்து ஆத்ம ஞானத் தேடலைக் காண முயல்கிறான்.  ஆத்ம ஞானத் தேடல் என்பது அவனுடைய இலக்காக இருக்க , பிரணவ மந்திர தியானத்தின் மூலம் ஆத்ம ஞானம் கிடைத்தாலும் மன நிறைவு இல்லை.  அப்பொழுது முற்றும் துறந்த சமணத் துறவ...

பூர்ணம் - 8

படம்
இந்த தொடருக்குப் பூர்ணம் என்று தலைப்பு கொடுத்த காரணம் என்பது , அன்றாட வாழ்க்கையில் மனநிறைவு , மனமகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருடைய இலட்சியமாக இருக்கும். அப்படி வாழ்ந்தால் அவர்கள் முழுமையாக வாழ்ந்து அனுபவத்தைப் பெற்றவர்கள் என்ற நிலையை உணர்கிறார்கள். அந்த முழுமைக்குப் பூர்ணம் என்று அர்த்தம் கொண்டு இந்த தொடர் எழுத ஆரம்பித்தேன் என்ற தன்னிலை விளக்கத்தை அளித்துக் கொண்டு இந்த தொடரைப் பார்ப்போம்.  முழுமை மற்றும் மன நிறைவு என்பது ஒவ்வொருவரிடமும் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ளது. அதைத் தீர்மானிப்பது என்பது அவர்களுடைய கையில் உள்ளது.  கூட்டுக் குடும்பம் மற்றும் சமூகமாக வாழ்வது என்பது பல பண்புகளைப் பெருக்கி அழுத்தத்தைக் குறைத்து மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று பார்த்தோம். இங்கே சகிப்புத் தன்மை என்பது முதன்மையாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு விட்டுக் கொடுத்து அணுகினால் மனநிறைவு என்பது சாத்தியம் கூட்டுக் குடும்பத்தில்.‌ வாழ்வின் நோக்கம் அறிந்து செயல்படும்போது, செய்யும் காரியத்தில் விருப்பம் ஏற்பட்டு, ஒரு தொடர்ச்சியான செயல் ஏற்படுகிறது. அதன் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதனையும...

பூர்ணம் - 7

படம்
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவனுக்கு ஒப்பீடு முறையில் முழுமை அடைவதற்கான இலக்கை  எல்லையறிந்து கொடுக்கவேண்டும் என்பதும் ஒரு பாடமாக அமைகிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை ஆனால் ஐந்தும் தேவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவை உள்ளது, ஒரு பயன்பாடு உள்ளது. அதன் மூலம் நாம் பயன்படுகிறோம். அனைத்து குழந்தைகளிடம் ஒரு தனித்திறமை இருக்கும். அதில் கவனம் செலுத்தி முன்னேற்ற வேண்டும். அனைவரும் சமுதாயத்திற்கு தேவை.‌ மேலும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க , மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டும். பிரபஞ்சத்தில் குழந்தைகள் சுதந்திரமாகக் காற்றைப் போல் திரிந்து வரவேண்டும். அதிலும் சில ஒழுக்கங்களைக் கையாளும் போது, இந்த பிரபஞ்சம் குழந்தைகளுக்கு நிறைய அனுபவங்களைப் பாடமாகக் கற்றுக் கொடுக்கும்.   தன்னம்பிக்கை ஒருவனுக்கு அனுபவத்தின் மூலம் அதிகமாக உருவாகும். சுவாமி விவேகானந்தர் " படிப்பு, பயிற்சி என்பது மனிதனை மனிதனாக உருவாக்க உதவ வேண்டும் என்று கூறுவார். The ideal of all education, all training should be in man making , said Swamy Vivekananda. பிரபஞ்சத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்ட...