இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் - 7

படம்
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவனுக்கு ஒப்பீடு முறையில் முழுமை அடைவதற்கான இலக்கை  எல்லையறிந்து கொடுக்கவேண்டும் என்பதும் ஒரு பாடமாக அமைகிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை ஆனால் ஐந்தும் தேவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவை உள்ளது, ஒரு பயன்பாடு உள்ளது. அதன் மூலம் நாம் பயன்படுகிறோம். அனைத்து குழந்தைகளிடம் ஒரு தனித்திறமை இருக்கும். அதில் கவனம் செலுத்தி முன்னேற்ற வேண்டும். அனைவரும் சமுதாயத்திற்கு தேவை.‌ மேலும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க , மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டும். பிரபஞ்சத்தில் குழந்தைகள் சுதந்திரமாகக் காற்றைப் போல் திரிந்து வரவேண்டும். அதிலும் சில ஒழுக்கங்களைக் கையாளும் போது, இந்த பிரபஞ்சம் குழந்தைகளுக்கு நிறைய அனுபவங்களைப் பாடமாகக் கற்றுக் கொடுக்கும்.   தன்னம்பிக்கை ஒருவனுக்கு அனுபவத்தின் மூலம் அதிகமாக உருவாகும். சுவாமி விவேகானந்தர் " படிப்பு, பயிற்சி என்பது மனிதனை மனிதனாக உருவாக்க உதவ வேண்டும் என்று கூறுவார். The ideal of all education, all training should be in man making , said Swamy Vivekananda. பிரபஞ்சத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்ட...