இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் - 6

படம்
இக்கிகை" என்ற புத்தகம் உலகில் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் ஜப்பானின் ஒக்கி நாவா மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் புத்தகம். இது மாதிரி உலகில் ஐந்து இடங்களில் மக்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அந்த பகுதிகள் அனைத்திற்கும் "ப்ளு ஜோன்" என்று குறிப்பிடுகின்றார்கள்.  அதில் முதல் இடத்தில் வகிப்பது ஜப்பானின் ஒக்கி நாவா. இத்தாலியின் சார்டினியா, அமெரிக்கா கலிபோர்னியாவின் லோமா லிண்டா, காஸ்டாவின் தி நிக்கோயா ஃபேனின்சுலா, கீரிஸின் இக்கரியா.  இந்த ஐந்து இடங்களிலும் மக்கள் அழுத்தம் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பொதுவாகக் காணப்படும் அம்சங்கள் என்பது நான்கு. 1. உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள். சைவ உணவு மற்றும் மீன் வகைகள்  2. உடற்பயிற்சி. நடை மற்றும் தோட்ட வேலைகள்  3. வாழ்வதற்கான காரணம் அறிந்து அதற்காக வாழ்தல்.  4. சமுதாய அமைப்பு மற்றும் சமூக தொடர்பு ஏற்படுத்தல்.  வாழ்வதற்கான காரணத்தை அறிந்துகொண்டு வாழும்போது மற்ற மூன்றும் அதனுடன் சேர்ந்து அமையப் பெறும். ஒவ்வொரு மனிதனும் ஒரு செயலை செய்து முடிப்பதற்காக மனிதப்பிறவி...

கல் மண்டபம் நாவல்

படம்
சாதி தட்டில் உயர்ந்த சாதி என்று மக்கள் கருதும் சமூகத்திலும் ஒரு பிரிவினரின் வாழ்க்கை சொந்த சாதியினராலும் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு , தீண்டத்தகாத நிலையிலும் , வறுமை ஏழ்மை பசி எல்லையில் இருப்பதையும் அழகாகச் சித்தரிக்கும் நாவல். அருமையான படைப்பு. இவர்களை மேட்டுக்குடி தலித் என்று எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.  புத்தகத்தை எடுத்தது தெரியும் முடிக்கும் வரை ஒரு தொய்வு இல்லாமல் சலிப்பு இல்லாமல் கதை நகர்வை உணர்ந்தேன். புத்தகம் முழுவதும் உணர்வின் பிணைப்பில் நகர்கிறது.‌ பிணத்தைத் தூக்குவதற்குச் சொந்தங்கள் இல்லை என்ற அவலம், அந்த வேலைகளைத் தனது வறுமையின் காரணமாக வயிற்றை நிரப்புவதற்கு அந்த சாதியிலிருந்து ஒரு மனிதன் வருகிறான். அதைச் சிறுவயதில் பார்த்தபொழுது மனம் பதைத்து அந்த உணர்வைப் புரிந்து அவர்கள் மேற்கொண்ட கஷ்டங்களையும் இன்னல்களையும் காவியமாக கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர் வழக்கறிஞர் சுமதி.‌ ராமானுஜம் என்ற ராமன்ஜி ஶ்ரீரங்கத்தில் வைதீகத்தில் ஆரம்பித்து, சென்னையில் பார்த்தசாரதி அய்யங்காருடன் ஏற்பட்ட தர்க்கத்தில் வைராக்கியமாகத் தர்ப்பையைக் கீழிறக்கி வைத்து , அக...