பிரயாக்ராஜ் யாத்திரை -3 (அயோத்தியா, நைமிசாரணியம்)
வீணை சதுக்கம் (அயோத்தியா) வாரணாசி மீண்டும், இந்த தடவை ரயில் நிலையம் பக்கத்தில் தங்கும் அறை எடுத்தேன். அனைத்து சுமைகளையும் தங்கும் அறையில் வைத்துவிட்டு, நீராடி நடக்க ஆரம்பித்தேன். கோயில் வரை நடந்து சென்று அன்னபூரணி , விசாலாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டுப் புறப்படலாம் என்று நினைக்கும்போது, ஏன் ஒரு முறை ஈஸ்வரனையும் தரிசிக்கலாம் என்று தோன்றியது. இரண்டாவது முறை வெகு விரைவில் தரிசனம் கிடைத்தது. அது அவனது அருளே என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அன்னபூரணி அம்மனை தரிசித்து, அன்னபூரணி கோயிலில் இரவு சிற்றுண்டி முடிந்துவிட்டதால், மீண்டும் நடை தங்கும் இடத்தை நோக்கி விரைந்தது. வரிசையில் செல்லும் பகுதி மறுநாள் காலை எழுந்து அயோத்தியா செல்லும் ரயிலைப் பிடிக்கச் சென்றேன். ஆனால் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பாடு என்பது அவ்வளவு சரியாக இல்லை. மக்கள் நெருக்கடியில் ஒரு வழியாக ரயிலில் ஏறி அயோத்தியா மூன்று மணி நேரத் தாமதத்துடன் வந்தேன். ரயில் ந...