இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் தலைவன்

படம்
பாலில் சர்க்கரை உட்கலந்து, கலந்த பிறகு சர்க்கரையைப் பிரிக்கமுடியாது. பால் இப்பொழுது சர்க்கரை கலந்த பால். பாலின் மதிப்புக் கூட்டித் தித்திக்கும் பால், சுவை மிகுந்த பாலாகக் கருதப்படுகிறது. பாத்திரத்தின் கடைசி துளிப் பால் வரை அதன் தித்திக்கும் தன்மை இருக்கும். மக்கள் தலைவன் என்பவன் மக்களிடம் உட்கலந்து, பிரிக்கமுடியாத அளவுக்கு உட்கலந்து ,அவர்களை ஊக்குவித்து, அவர்களின் மதிப்பை(Value)அதிகரித்து, அவர்களுக்கு எக்காலத்திலும் துணைநிற்பதுதான் அழகு. மக்களின் கடைசி விளிம்பு வரை மதிப்பைக் கூட்டுவதுதான் தலைவனின் தலையாய கடமையாகும்.  நமது பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் மக்களுடன் கலந்து , ஊக்குவிப்பதில் தலைசிறந்தவர். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களையும், வீராங்கனைகளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்திகள் மூலம் ஊக்குவித்தார். அவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களை டில்லியில் சந்தித்து அனுபவங்களைக் கேட்டு உரையாடினார். அதன் விளைவு என்பது இந்திய அணிக்கு ஆசிய விளையாட்டில் முதன்முறையாக அதிக பதக்கங்களை வெல்லமுடிந்தது. கிரிக்கெட் உலகக் ...

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -13

படம்
                   ஸ்வாமி     பிள்ளைலோகாச்சார்யார்                     ஸ்வாமி                     மணவாள மாமுனிகள்  இராமானுஜர் காலத்திற்கு பிறகும் பாகவத கைங்கர்யம்  செய்வது மற்றும் பாகவத அபச்சாரம் செய்யாமல் இருப்பது என்ற உயர்ந்த கொள்கைகள்  தொடர்ந்து ஶ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களினால் வலியுறுத்தப்பட்டது என்பது ஆசாரியர்களின் கிரந்தங்களில் இருந்தும் , அவர்களுடைய வாழ்க்கை முறைகளில் இருந்தும் நன்கு புலப்படுகின்றன. நம்பிள்ளைக்குப் பின்வந்த ஆசார்யர்களில் மிக முக்கியமான ஆசாரியர்  " பிள்ளை லோகாச்சார்யார்", அவர் இயற்றிய 18 ரகசிய க்ரந்த நூல்களிலிருந்தும் குறிப்பாக ஶ்ரீவசநபூஷணம்  என்ற நூலிலிருந்து பாகவத கைங்கர்யம் என்பது மேன்மையிலும் மேன்மை மற்றும் பாகவதாபசாரம் என்பது கொடியதிலும் கொடியது என்பது போன்ற பல விஷயங்கள் தெரியவருகிறது.‌ ஸ்வாமி மணவாள மாமுனிகள், பிள்ளலோகாச்சாரியர் மற்றும் அவரது த...

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -11

படம்
  வழக்கத்தில் இல்லாத ஈரங்கொல்லி என்ற தூய தமிழ்ச் சொல்,  வண்ணாத்தான்   குலத்தைக் குறிக்கும் சொல். துணிகளை உவர் மண்ணுடன் சேர்ந்து நீரில் ஊறவைத்து, துணியின் ஈரத்தை போக்குவதால் (கொல்லுவதால்) இவர்களுக்கு "ஈரங்கொல்லி" என்ற பெயர் வருவதற்கான காரணம். நம்பிள்ளை ஈடு  வ்யாக்னத்தில்   இந்தச் சொல்  கீழ்க்கண்டவாறு  பிரயோகிக்கப் பட்டுள்ளது. .  "ஒருநாள் ஸ்ரீ வைஷ்ணவ  வண்ணாத்தான்     திருப்பரிவட்டங்களை  அழகிதாக  வாட்டி   எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட, போரத்  திருவுள்ள முகந்தாராய்  இவனையும் கூடக்கொண்டு  பெருமாள் பாடே   புக்கு , ‘ நாயன்தே ! இவன்,  திருவரைக்குத்   தகுதியாகும்படி இவற்றைத் தொட்டபடி    பார்த்தருள  வேண்டும்’ என்று காட்ட, கண்டு போர  உகந்தருளி   எம்பெருமானாரை அருளப் பாடிட்டு , ‘இவனுக்காக, கம்சனுடைய  ஈரங்கொல்லி  நம்  திறத்திற்செய்த  குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமானார்" என்பது  திருவாய்மொழி 4-3-5, 5-10-6 பாசுரத்துக்கான ஈடு...