இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -5

படம்
  திருக்சச்சி  நம்பி மாசி மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் சென்னை அருகாமையில் இருக்கும்  பூவிருந்தவல்லி  என்ற ஊரில் அவதரித்தார். அவரது இயற்பெயர் கஜேந்திரன்.  ஆளவந்தாரின் சிஷ்யராக வாழ்ந்து வந்தார்.  திருவாலவட்டம்  ( விசிறி வீசும்)  கைங்கர்யம்  செய்வதில் பேரின்பம் கொண்டவர்.  அவர் அவதரித்த ஊருக்கு அருகாமையில் இருக்கும் பெருமாள் கோயில் என்று சம்பிரதாயத்தில் அழைக்கப்படும் காஞ்சியில் அக்னிக் குண்டத்தில் தோன்றிய தேவாதி ராஜனுக்குத் தினம்  திருவாலவட்டம்  ( விசிறி வீசும்) கைங்கரியம் செய்து வந்தார். இராமானுஜர்  யாதவப்பிரகாசர்  என்ற ஆசாரியரிடம் வேத, வேதாந்த பாடங்களைப் பயின்று வந்தார்.  காஞ்சி  கரியமாணிக்க  பெருமாள்  சந்நிதியில்   யாதவப்பிரகாசர்  அன்று அவரது சீடர்களுக்கு வேதம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆளவந்தார் காஞ்சிக்கு எழுந்தருளியிருந்தார். ஆளவந்தார்  திருக்கச்சி  நம்பியிடம் இளையபெருமாள் (இராமானுஜரின் இயற்பெயர்) இந்த கோஷ்டியில் எங்குள்ளார் என்று வினவ ,  திருக்கச்சி  நம்பி கோஷ்டியில் வெண்மை நிறத்தில் இருக்கும் இளையாழ்வாரைச் சுட்டிக் காட்டினார். ஆளவந்தார் அங்கிருந்தே "

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -4

படம்
                                                                                                          சாதிகள் சமுதாயத்தில் பல காரணங்களுக்காக இருந்தாலும் , பரம்பொருளை வழிபாடு செய்து அடைவதில் வேறுபாடுகள் இல்லை என்பதுதான் உண்மை. ஶ்ரீ வைணவத்தில் முதல் மானிட குரு " வேதம் தமிழ் செய்த மாறன்" என்று அழைக்கப்படும் நம்மாழ்வார்.‌ அவரை ஆதி மானிட குருவாக அறிமுகப் படுத்தியவர் நான்மறை நவின்று பாடும் அந்தண குலத்தில் உதித்த மதுரகவியாழ்வார்.‌  அண்ணல் இராமானுஜர் செய்த புரட்சியில் ஒன்று சமுதாய புரட்சி. சமுதாய புரட்சி என்பதனையும் ஒரு ஒழுங்கு முறையில்தான் ஏற்படுத்தினார், பக்தி நெறியை ஏற்றுக் கொண்டு நலந்திகழ் நாரணனை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் இடையில் சாதி வேறுபாடுகள் இல்லை என்பதனை நிறைய இடங்களில் வழிகாட்டி வாழ்ந்து காட்டிய பெரியவர் இராமானுஜர்.‌ ஆளவந்தாரின் மற்றொரு முக்கியமான சிஷ்யர் பூவிருந்தவல்லியில் வைசிய குலத்தில் மாசி மாதம் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் உதித்த திருக்கச்சி நம்பி. இவருடைய இயற்பெயர் கஜேந்திரன். இவர் அனைத்து சாஸ்திரங்களையும் முறையாகக் கற்றுக்கொண்டு ஆளவந்தாரின் சிஷ