இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் -22 (சரணாகதி)

படம்
                            எட்டெழுத்து மந்திரம் என்பது " ஓம் நமோ நாராயணய". பூர்ணமடைய அறிய வேண்டிய மந்திரம் இந்த எட்டெழுத்து மந்திரம் என்பது வைஷ்ணவ நம்பிக்கை. கிருஷ்ணன் பகவத்கீதை 10.35 யில், "மாஸாநாம் மார்கசீர்ஷோஹம்" மார்கழி மாதம் என்பது மாதத்தில் எட்டாவது மாதம். கிருஷ்ணனுக்குப் பிடித்த மாதம். அவன் பிறந்தது ( எட்டாம் நாள்) அஷ்டமி திதியில் எட்டாவது குழந்தையாகப் பிறந்து பகவத்கீதை என்ற உயர்ந்த ஞானத்தை உலகுக்கு வழங்கி "எட்டெழுத்து மந்திரமாக" ஏற்றம் கண்டான். முமுஷூப் படியில் அஷ்டாக்ஷர மந்திரத்தின் பெருமையை மிகவும் விஸ்தாரமாக விளக்குகிறார் பிள்ளைலோகாச்சாரியார். பாவ புண்ணியங்களைப் போக்கவல்ல மந்திரம் இந்த எட்டெழுத்து.முமுஷூக்கு ( முக்தியை விரும்புவர்)  அறிய வேண்டிய மந்திரம் மூன்று. அதில் பிரதான மந்திரம் "திருமந்திரம்". திருமந்திரம் என்பது "ஓம் நமோ நாராயணய"  பாவபுண்ணியங்கள் என்ற இரு வினைகளையும் ஒழித்து , இறைவன் அடிப் பற்றுபவர் பிறவா நிலையை அடைகிறார்கள் என்று கிருஷ்ணன் கீதையில் கூறியதைப் பார்த்தோம். வள...

பூர்ணம் - 21 ( அர்த்த பஞ்சகம்)

படம்
தத்வத்ரயம் என்று மூன்று உண்மைப் பொருட்களை முதலில் தெரிவித்து, சரீர ஆத்ம பாவம் முறையில் இறைவனுக்கும் சேதன அசேதனத்துக்கும் சம்மந்தத்தை விளக்கி, சரீரத்திற்கு ஒன்று என்றால் அதனை ஆத்மா தாங்குவதுபோல், இறைவனுக்குச் சரீரமாக இருக்கும் சேதனத்துக்கு அதாவது ஜீவாத்மாக்களுக்கு ஒன்று என்றால் பரமாத்மா என்ற இறைவனே தாங்குகிறான் என்று காட்டப்பட்டது. பாவபுண்யங்களை அதாவது நல்லது கெட்டது என்ற எல்லாக் கணக்குகளையும் பூஜ்யமாக்கி , பிறவி சுழலிருந்து விடுதலைப் பெறலாம் என்ற கீதையின் ஸ்லோகத்தையும் பார்த்தோம். பாவ புண்யங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் ஐம்புலனடக்கம், மனவலிமை, இரட்டை நிலைகளைச் சமமாகக் கருதுதல், கர்மம் செய்வதைக் கடமையாகக் கொண்டு பலனை எதிர்பாராமல் இருக்கும் நிலைமை என்றவை மிகவும் அவசியம் என்பதனை கீதையில் உரைத்ததை மனதில் நிறுத்த வேண்டும்.‌ நரகம் சொர்க்கம் என்பதே பாவ புண்ணியங்கள் பலனுக்கான இடங்கள் என்றும் காட்டப்பட்டது. அதையும் தாண்டி இறைவன் திருவடியில் பிறவா நிலையை அடைவது என்பது ஶ்ரீமந் நாராயணன் இருக்குமிடத்தைப் பரமபதம்  என்றும், சிவன் இருக்குமிடத்தைக் கைலாயம் என்று சனாதன தர்ம...

பூர்ணம் - 20 ( சமநிலை புத்தி)

படம்
பாரதீய சமயங்கள் அனைத்தும் கர்ம வினைகளை நம்புகிறது. பிறவியற்ற சூழ்நிலையை உருவாக்குவதே ஒரு ஜீவாத்மாவின் பரிபூர்ணம் என்பதும் நம்பிக்கை. கர்ம வினைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பாரதீய நம்பிக்கை. அதிலிருந்து வெளியேற ஒரு வழி இறைவன் திருவடி என்பதும் பாரதீய சமயக் கருத்து. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்                                 - திருக்குறள்  இதனைத்தான் வள்ளுவப் பெருமகனார் அவர்களும் தமிழ் மரபில் காண்பித்துள்ளார். தமிழ் மரபு என்பது பாரதீய மரபை உள்வாங்கி நிற்கும் என்பதற்கு வள்ளுவ பெருந்தகையின் வாக்குகள் நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.  பிரம்மம் பிரளய காலத்தில் சேதனங்கள் அசேதனங்களைத் தன்னுள் சரீரமாகக் கொண்டு ஒரு சக்தியாக இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். சிருஷ்டி காலத்தில் இந்தப் பிரக்ருதியை உருவாக்கி பஞ்ச பூதங்களை உருவாக்கி, ஜீவாத்மாக்களைப் பிரக்ருதியுடன் சம்மந்தத்தை உருவாக்கி படைக்கிறான். அதாவது சங்கல்பத்தினால் அவனது சரீரத்திலிருந்து வெள...

பூர்ணம் -19 ( சரீர ஆத்ம பாவம்)

படம்
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத்: | உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ் தத்வ தர்சிபி:||. 2-16 அஸத் - இல்லாததற்கு, பாவ - இருப்பு , ந வித்யதே - இல்லை , கிடையாது, ஸத் - இருப்பதற்கும், அப் பாவ - இல்லாமை , வித்யதே - உண்டு , தத்வதர்சிபி- தத்துவத்தை அறிந்தவர்கள், அனயோ உபயோ- இவ்விரண்டின், அந்தஸ் - முடிவு , த்ருஷ்டோ- காணப்படுகிறது. இல்லாத பொருள்களுக்கு இருத்தல் என்பதில்லை ; இருக்கும் பொருள்களுக்கு இல்லாமை என்பதில்லை; இவ்விரண்டுமே ஞானிகளின் முடிவான கருத்தாகும். இதில் அஸத் மற்றும் ஸத் என்ற இரண்டு பொருள்களை வைத்து விசாரிக்கிறார்கள் தத்வ தரிசிகள்.‌ வேதாந்த கருத்துகளுக்குத் தத்துவ அர்த்தமாக உரை எழுதிய தத்துவத் தரிசிகள் மூவரும் பாரதத்தில் தெற்கே தோன்றினார்கள். மூவரும் மூன்று நூல்களைக் கொண்டு தங்களது தத்துவங்களை நிறுவினார்கள். உபநிஷத்துக்கள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் என்ற மூன்று வேதாந்த கருத்து நூலுக்கு உரை எழுதினார்கள். பகவத் ஆதிசங்கரர் அத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் மத்வாச்சாரியார் துவைதம் என்ற தத்துவத்தையும் அவர்களது...