இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் - 18 (தத்வத்ரையம்)

படம்
"பூமி ராபோ அனலோ வாயு: கம் மனோ புத்திரேவ ச| அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதி:அஷ்டதா"                                           (7-4) பூமி- நிலம் , மண், ஆபோ- நீர் , அனல- நெருப்பு, வாயு - காற்று, கம் - ஆகாசம், மனோ - மனம், புத்தி - புத்தி , அஹங்கார ச - அஹங்காரமும் , பின்னா - பின்னப்பட்டிருக்கிறது, அஷ்டதா - எட்டு விதமான பகவான் கிருஷ்ணன் கீதையில் உண்மை பொருட்கள் மூன்று உள்ளன, அதனை படிகட்டுகளாக அமைத்து விளக்குகிறான்.  மூன்று உண்மை பொருட்களில் படியில், அசேதனம் ஞானமில்லாத , அழியக்கூடிய வஸ்துக்கள் என்றும், அதற்கு மேல் ஞானமயமான, அழியாத ஜீவாத்மாக்கள் உயர்ந்தது என்றும் , அதற்கு மேல் அனைத்தையும் எங்கும் பரவியிருந்து தாங்கும் பிரம்மம் அதாவது பகவான் உயர்ந்தது என்றும் கீதையில் காட்டுகிறான்.  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என்னுடைய ப்ரகிருதி பின்னப்பட்டுள்ளது என்று கீதை 7-4 ல் கிருஷ்ணன் விளக்குகிறான். இந்த எட்டு விதப் பிரகிருத...

பூர்ணம் - 17

படம்
"யதா தீபோ நிவாதஸ்த்தோ நேங்கதே ஸோப மா ஸ்ம்ருதா| யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:||" 6-19 தீபோ- விளக்கு , நிவாதஸ்த்தோ- காற்றில்லாத இடம், நேங்கதே- அசையாமல் யதசித்தஸ்ய- மனதைக் கட்டுப்படுத்தினவன் யுஞ்ஜதோ- தொடர்ந்து விடாமல் யோகம்- த்யானம் காற்றில்லாத இடத்தில் ஒரு விளக்கின் தழல், எப்படி ஆடாமல் அசையாமல் நின்று ஒளிருமோ, அதைப்போல மற்ற விஷயங்களினால் மனம் கலக்காமல் அசையாமல் ஆத்ம சிந்தனத்தில் நின்று பிரகாசிப்பவன் சிறந்த ஆத்ம யோகியாகிறான் என்று விளக்குகிறான். தியானத்தின் போது, கண்களைப் பாதி மூடியும் பாதித் திறந்தும் வைத்த நிலையில் மூக்கு நுனியைப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வது என்பது முதலில் கடினம், தொடர்ந்து பயிற்சி செய்து பழகும்போது எளிதாக மாறும். கூர்மையான கவனத்திறனை அதாவது குவியல் திறனை (Focus) அதிகரிக்கும். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் கவனம் (Focus) சிதறாமல் ஒருநிலைப் படுத்தியிருக்கும் அதாவது ஒரு நிலையில் குவியப்படுத்திருக்கும். இது ஒரு மாபெரும் சக்தியை உள்ளுக்குள் உருவாக்கி மாபெரும் சாதனையாக உருவாக்க உதவியாக இருக்கும். இதனைப் பெரு நிறுவனங்கள் "குவியல்...