இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேராசை ....பெருநஷ்டம்

படம்
"போதும் என்ற மனமே....." என்ற கடந்த கட்டுரையில் மணல் அள்ளுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கையில் எவ்வாறு மணல் எடுக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டிருந்தேன். ஆற்றில் தினசரி மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. வாரம் மூன்று அல்லது நான்கு முறை எடுக்கலாம். அதுவும் ஆறுகளை அரசு சோதனை செய்து மணல் மேடுகளைக் கண்டறிந்து அதன் எல்லைகளை வரையறுத்து மணல் கையால் எடுப்பதை அனுமதிக்கின்றார்கள். இயந்திரம் கொண்டு தோண்டுவது என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்று.  பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனிதனுக்கும் நாட்டிற்கும் தேவை. ஆனால் வளர்ச்சி என்பது எல்லையற்று இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இங்கே தொக்கிக் கொண்டிருக்கிறது பதில் தெரிந்தும் தெரியாத வகையில்.‌ எல்லையற்ற வளர்ச்சி என்பது மனிதக் குலத்தையும், உலக உயிர்களையும் , சுற்றுப்புறச் சூழலையும் முற்றிலும் அழித்துவிடும். வளர்ச்சி மற்றும் பயன்கள் ( Cost Vs Benefits) பற்றி ஆராய்ந்து, வளர்ச்சி என்பது உலக சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்ற கட்டத்தில் அதன் வளர்ச்சி என்பதை மட்டுப்படுத்தத் தெரிய வேண்டும்.  தனிமனித வளர்ச்சி என்பதும் அவனது உடல்நிலை , மன அமைதியை...

போதும் என்ற மனமே............

படம்
சமீபத்தில் இரண்டு படங்கள் பார்த்தேன். படம் பார்த்து நான் புரிந்து கொண்ட உண்மை என்னவென்றால் " போதும் என்ற மனமே ........ பொன் செய்யும் மருந்து " என்பது ஒன்று  , மற்றொன்று "மேலும் ஒன்றை ஆரம்பிக்கும் போது எப்பொழுது எங்கே முடிக்க வேண்டும் " என்ற அறிவுத் தன்மை.  இந்த இரண்டுமே ஒருவனுடைய வாழ்க்கையைச் சரியாகத் தீர்மானிக்கிறது. குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு உதவுகிறது.  ஒரு படத்தில் கதாநாயகன் பாரதத்தில் ஆற்றில் மண் எடுக்கும் தொழிலைச் செய்து வருகிறான். அதிலும் ஒரு தருமம் காட்டப்பட்டுள்ளது. ஆற்று மண்ணை கையால் சட்டியை வைத்து எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுக்கிறார்கள். இந்த மண் அள்ளும் முறையை நான் இலங்கை சென்றிருந்தபோது கவனித்து வியந்து இருந்தேன். இங்கே JCB வைத்து எடுத்து, ஆற்றின் உருவகத்தையே மாற்றிவிட்டார்கள். ஆறு ஆறாக இல்லை. ஆறு என்பது கருவேல் மர காடாகக் காட்சியளிக்கிறது. இதுவும் போதும் மனம் இல்லாததின் விளைவுதான். நாம் சொல்ல வந்த கருத்துக்குக்குள்ளேச் செல்வோம்.  அப்படியாக ஆற்று மண் அள்ளி தொழில் செய்து சந்தோஷமாக குடும்பம் இருக்கிறது. கணவன் மனைவி சந்தோஷத்தில் ...