இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இராமானுஜ இதிகாசம் (நூல் மதிப்புரை)

படம்
திரு நாகஸ்வாமி  என்ற தொல்லியல் துறை வல்லுநர், இராமானுசரின் வாழ்க்கை சம்பவங்கள் என்பது புனைவு என்றும், பொய் என்றும் சொல்லி அவரது சைவ வெறியைக்  தீர்த்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதாவது இராமானுசரின் வாழ்க்கை பொய் என்று நிரூபித்து  விட்டால் வைணவத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அற்ப சந்தோஷத்தின் காரணமாக, வெறி உந்தப்பட்டு எழுதிய புத்தகம் “Ramanuja myth and Reality“.  அவர் எடுத்து வைத்த வாதங்களில் முக்கியமாக இரண்டு வாதங்கள் என்பது,  1. இராமானுஜர் சோழ தேசத்திலிருந்து  வெளியேறியது என்பது சோழ அரசனின் துன்புறுத்தல் அல்ல, அப்பொழுது ஆட்சி செய்த குலோத்துங்கன் சமய வெறுப்பு அற்றவன், மேலும் பல கைங்ஙர்யங்களைச்  செய்தவன் என்று கல்வெட்டு மூலம் நிரூபித்து , வைணவர்கள் புனைந்து சோழ அரசின் மீது பழியை வீசுகின்றனர் . ஆதலால் எந்தவொரு கொடுமையும் நடக்கவில்லை , நடக்காத ஒன்றை  பொய் பரப்புகின்றனர். 2. இராமானுஜர் மேலக்கோட்டை சென்று, அங்குள்ள உற்சவ மூர்த்தியை டில்லியிலிருந்து மீட்க வில்லை, ஏனென்றால் மேலக்கோட்டை  மற்றும் தென்னிந்தியா பகுதிகள் இராமானுஜ வாழ்ந்த காலத்தில் முஸ்லீம் படையெடுப்பால

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

படம்
ஆண்டாள் நாச்சியார் தனது இரண்டு பிரபந்தங்களிலும் இயற்கையை உணர்ந்து உள்வாங்கி ,  தான் அனுபவத்தில் கொண்டு ,  தனது கவிகளின் மூலம்  உணர்த்திய சிறந்த புலவர். இயற்கை அனுபவங்களைக் கொண்டு இயற்கையையும் படைத்த கண்ணன் பரமாத்மாவை அனுபவிக்க வந்த கவிகள் அவளது "  பிரபந்தங்கள்" என்றால் மிகையாகாது.‌ அவள் திருப்பாவையில் எழுதிய "  கீசு கீசு" என்று பறவைகளின் ஒலி சப்தங்களுடன்  பாடலைத் தொடங்கி , அதில் அந்த ஆனை சாத்தன் என்ற பறவையின் ஒலி சப்தம் இதுதான் என்று பாடலில் பாடியது என்பது, இயற்கையை எந்த அளவுக்கு உணர்ந்து பாடியிருப்பாள் என்று தமிழ் அறிஞர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஆண்டாளின் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு, இது எந்தப் பறவை , அந்த பறவையின் குணாதிசயங்கள் என்னவென்று இன்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்கள்.  இன்று அதிகாலை  புள்ளரையன் கோயில்  தெருவில் அடியேன் உணர்ந்தது, ஆண்டாள் அனுபவித்த "புள்ளும் சிலம்பினகாண்" என்ற பாடல் வரிகள்.  அதிகாலை பெரும்பாலும் எழுந்திருக்கும் பழக்கம் உடையவன் என்ற வகையில், காலை 3.30 மணியளவில் கு