இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூர்ணம் - 11

படம்
தனக்கு உரித்தானக் கடமையைச் செய்வதில் தயங்கி , குழம்பிக் கொண்டிருக்கும் அர்ஜூனனுக்குக் கடமையை நிறைவேற்றும் படி உற்சாகப் படுத்தும் சொற்கள் கிருஷ்ணனின் கீதை என்ற அமுத மொழிகள். பல உபநிஷத்துகளைக் காமதேனு பசுவாக நிறுத்தி கீதை என்னும் பாலைக் கறந்து அர்ஜூனன் என்ற கன்று மூலம் ஜீவாத்மாக்களுக்கு வழங்குகிறான் பால் கறக்கும் இடையனாகக் கிருஷ்ணன். கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்காமல் இச்சையற்றுச் செய்யவும் என்று கீதையில் உரைக்கிறான் கிருஷ்ணன். இதில் சிலருக்குச் சந்தேகம் என்பது, இச்சையில்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் ஏதாவது ஒரு செயலைச் செய்யமுடியுமா? அல்லது அதற்கு மனம்தான் சம்மதிக்குமா? . இந்த மனோநிலை என்பது முக்காலத்திலும் உலகம் முழுவதும் பொதுவாக இருக்கக்கூடிய சூழ்நிலை. இங்குதான் மனம் புத்தி என்பது மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இந்த ஆசை, எதிர்பார்ப்பு என்பது உலகில் நிலவும் நல்லவற்றுக்கும் கெடுதலுக்கும் உந்து சக்தியாக இருக்கின்றன. இச்சை அல்லது ஆசை என்பது அளவுக்கு மீறிச் செல்லும்போது தனிமனிதச் சரிவுக்கும், தனிமனித அழிவுக்கும், சமுதாய அழிவுக்கும், ஏன் ...

பூர்ணம் - 10

படம்
சித்தார்த்தன் ஆத்ம ஞானத்தைத் தேடிப் பல சம்பிரதாய நம்பிக்கைக்கு மாறி, அதனுடன் வாழ்ந்து அந்தக் கொள்கைகள் கூறியபடி ஆத்ம ஞானத்தைப் பெற முயற்சித்தான். ஆனால் இடையில் கமலாவைச் சந்தித்து , அவளுடைய அழகில் மோகம் ஏற்பட்டு அவள் சுகத்தை அனுபவிக்கும் செயலில் முழுமையாக ஆழ்ந்து விட்டான். அப்படி ஆழ்ந்திருக்கும் நேரத்தில் மீண்டும் ஞானம் பிறந்து ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான்.  அவன் கடைசியில் வசுதேவன் என்ற படகோட்டி யின் மூலமாக நதியிலிருந்து கர்மாவை தெரிந்து செய்து கொண்டிருக்கும் போது ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான். இது பாரத ஞான மரபில் ஒன்று.  உலக ஞான மரபில் பாரதத்துக்கென்று ஒரு தனியிடம் எப்பொழுதுமே உண்டு. சித்தார்த்தன் ஜீவனுக்கே உண்டானக் கர்மத்தைச் செய்யாமல், இந்திரியங்களை அடக்கி ஞான யோகத்தின் மூலம் ஆத்ம ஞானத்தைப் பெற முயன்றான்.  கிருஷ்ணன் பகவத்கீதையில் கர்மயோகம் என்பது இயல்பாகவே தரையில் நடப்பது போல், ஆனால் ஞான யோகம் என்பது உச்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் நடப்பது போல, கவனம் தவறினால் மரணம் என்ற நிலை.  கவனம் தவறியதால் ஆசை மிகுந்து  கமலாவிடம் அடிமையாகி ,...